Saturday, November 12, 2011

இளம் மனைவியிடம் சில்மிஷம் செய்து கைதானது சிம்புவின் நண்பர்களா..? - ராஜேந்தர் விளக்கம்



T Rajender
சென்னை: குடித்துவிட்டு தகராறு, பெண்களிடம் சில்மிஷம் என ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு விவகாரத்தில் சிம்பு மாட்டுவதும், அதற்கு அவரது அப்பா டி ராஜேந்தர் விளக்கம் அளிப்பதும் தொடர்கிறது.

நீலாங்கரை கடற்கரை அருகில் பப் ஒன்றில் இளம் பெண்ணை கிண்டல் செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பி ஒடிய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள் அந்த பப்பில் தனியார் நிறுவன மானேஜர் மனைவியுடன் வந்து இருந்ததாகவும் போதையில் அப்பெண்ணுடன் சிலர் ஆட விரும்பியதால் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதில் பெண்ணின் கணவர் தாக்கப்பட்டார்.

பெண்ணிடம் சில்மிஷத்திலும் தாக்குதலிலும் ஈடுபட்டதாக அந்த 3 இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் நடிகர் சிம்புவின் நண்பர்கள் என்று செய்தி வெளியானது. 

இதனை சிம்புவின் தந்தையும், சினிமா இயக்குனருமான டி.ராஜேந்தர் மறுத்தார். அவர் கூறுகையில், "சிம்பு பற்றி தவறான வதந்திகள் பரப்பப்பட்டுள்ளது. சிம்பு நடிகர் என்பதால் செல்லும் இடங்களில் நிறைய பேர் சேர்ந்து நின்று போட்டோ எடுத்துக் கொள்வது வழக்கம். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு செல்லும்போது பலர் இதுபோல் போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களையெல்லாம் நண்பர்கள் என்று சொல்ல முடியுமா?

சிலர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் சிம்புவின் நண்பர்கள் என்றும் செய்தி வந்துள்ளது. சிம்பு என்னிடம் அப்படி நண்பர்கள் யாரும் கிடையாது," என்றார். 

ஏற்கெனவே ஒரு முறை சிம்பு குடித்துவிட்டு தகராறு செய்ததால் குடிசைப் பகுதி மக்கள் அடித்து உதைத்ததாக செய்தி வெளியானது. உடனே பிரஸ் மீட் வைத்து மறுப்பு தெரிவித்த டி ராஜேந்தர், என் மகனுக்கு குடிக்கவே தெரியாது என்று கூறி கண்கலங்கி பேட்டி கொடுத்தது நினைவிருக்கலாம்!