Friday, November 18, 2011

நயனதாராவின் கடைசிப் படம் ஸ்ரீராம ராஜ்ஜியம் இன்று ரிலீஸ்




Nayanthara
பிரபுதேவாவை 2ம் தாரமாக மணக்கப் போகும் நடிகை நயனதாரா நடித்துள்ள கடைசிப் படமாக கருதப்படும் ஸ்ரீராமராஜ்ஜியம் என்ற தெலுங்குப் புராணப் படம் இன்று திரைக்கு வருகிறது.

ரமலத்துடன் குடித்தனம் நடத்திக் கொண்டே நடிகை நயனதாராவை பக்கவாட்டில் காதலித்து வந்தார் பிரபுதேவா. இந்தக் காதல் ரமலத் வாழ்க்கையில் பெரும் புயலைக் கிளப்பியது. இருவருக்கும் பெரும் மோதல் மூண்டது. பின்னர் ரமலத் கோர்ட்டை நாடினார். இதனால் இவர்களுக்குள் நடந்து வந்த பிரச்சினை தெருவுக்கு வந்தது.

பின்னர் கோர்ட்டில் முறைப்படி ரமலத்தும், பிரபுதேவாவும் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து நயனதாராவைக் கல்யாணம் செய்யும் வேலையில் பிரரபுதேவா மும்முரமாக உள்ளார். இடையில் இவர்களுக்குள்ளும் கூட மோதல் வந்ததாக செய்திகள் வெளியாகின. இதை நயனதாரா மறுத்தார்.

இருப்பினும் ரமலத்துடன் தான் குடும்பம் நடத்தியதன் அடையாளமாக பிறந்த குழந்தைகளை பிரபுதேவா பார்க்க நயனதாரா தடையாக இருப்பதாக கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

இந்த நிலையில் நயனதாரா கடைசியாக நடித்த தெலுங்குப் படமான ஸ்ரீராம ராஜ்ஜியம் படம் இன்று திரைக்கு வருகிறது. இது ஒரு புராணப் படமாகும். ராமன் கதையைக் கூறும் படம். இதில் ராமராக என்டிஆர் பாலகிருஷ்ணாவும், சீதையாக நயனதாராவும் நடித்துள்ளனர். ரூ. 45 கோடியில்உருவாகியுள்ளது இப்படம்.

இந்தப் படத்தில் சீதை வேடத்தில் நயனதாரா நடிக்க ஒப்புக் கொண்டபோதுதான் அவருக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே காதல் மூண்டது. அப்போது ரமலத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் பிரபுதேவா. இதையடுத்து இந்து அமைப்புகள், கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் நடந்து கொள்ளும் நயனதாரா சீதாப் பிராட்டி வேடத்தில் நடிப்பதா என்று போராட்டங்களையும் நடத்தினர். இருப்பினும் அதையும் மீறி பாலகிருஷ்ணா, நயனதாராவை தனது படத்தில் நடிக்க வைத்தார்.

இந்தப் பின்னணியில் ஸ்ரீராம ராஜ்ஜியம் இன்று ஆந்திராவிலும், சென்னையிலும் திரைக்கு வருகிறது.