Friday, November 18, 2011

'வொய் திஸ் கொலை வெறிடி'!




Danush
வேறு ஒன்றிமில்லை... இது தனுஷின் மனைவி ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் '3' படத்தில் தனுஷே பாடியுள்ள ஒரு பாடலின் ஆரம்ப வரி.

இந்தப் பாடல் மட்டும் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது.

பாடலின் விசேஷம்... இது முழுக்க தமிங்கிலீஷில் எழுதப்பட்டிருப்பதுதான். எழுதிய பாடலாசிரியர் - தனுஷ்.

இந்தப் பாட்டு வெளியான கையோடு படு பாப்புலராகிவிட்டது. யு ட்யூப், பேஸ்புக் என சமூக வலை தளங்களில் சக்கைப் போடு போடுகிறது.

அனிருத் என்ற புதிய இசையமைப்பாளர் இசையில், தனுஷ் பாட, இடையிடையே ஸ்ருதி ஹாஸனும், ஐஸ்வர்யாவும் குரல் கொடுத்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் கட்டமாக இந்த ஒரு பாடலை மட்டும் வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா, மற்ற பாடல்களை அடுத்த விழாவில் வெளியிடுகிறார்.

சமீபத்தில்தான் சினிமாவில் தமிழை வளர்ப்பது கடினம் என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். இல்லை, இல்லை வளர்க்க வாய்ப்புள்ளது என்று பதிலளித்திருந்தார் வைரமுத்து. இந்த வரிகளைப் பார்க்கும்போது இரண்டு பேரும் இப்போது என்ன பதிலளிப்பார்கள் என்ற யோசனை வருகிறது!