Sunday, November 20, 2011

நாகார்ஜூனாவைப் பார்த்ததும் மயங்கிவிழுந்தேன் - அமலா



Amala Paul
செட்டில் நாகார்ஜுனாவைப் பார்த்ததும் மயங்கி விழுந்துவிட்டேன். அவர் மீது அப்படியொரு பிரமிப்பு என்றார் நடிகை அமலா பால்.

தமிழை விட தெலுங்குப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் அமலா பால், சமீபத்தில் ஹைதராபாதில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

ப்ள்ஸ்டூ முடித்ததுமே நடிக்க வந்துவிட்டேன். இதை பெற்றோர் விரும்பவில்லை. அவர்கள் என்னை எஞ்ஜினீயருக்கு படிக்க வைக்க விரும்பினார்கள். ஆனால் எனது அண்ணன் அவர்களை சமரசப்படுத்தி என் ஆசைப்படி நடிக்கை அனுமதித்தார். மைனா படம் திருப்பு முனையாக அமைந்தது. பிறகு விக்ரமுடன் நடித்தேன்.

நான் விக்ரமின் தீவிர ரசிகை. அவருடன் நடித்தது அதிர்ஷ்டம். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கல்லூரிக்கு போய் படித்து வருகிறேன்.

தெலுங்கில் நாகார்ஜுனா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் தட வையாக பெரிய நடிகரான அவரை படப்பிடிப்பு தளத்தில் பார்த்த போது மயக்கமே வந்து விட்டது," என்றார்.