Friday, November 18, 2011

முத்திரையைத் தவிர்க்கத் துடிக்கும் 'மல்லாங்கிணறு மங்காத்தா'!




எடுத்த எடுப்பிலேயே பாரதிராஜாவின் கலைக்கையில் சிக்கியுள்ள மகிழ்ச்சியில் படு குஷியாக காணப்படுகிறார் இனியா.

முதல் படமான வாகை சூட வாவில் இவரது இனிய நடிப்பு அத்தனை பேரையும் கவர்ந்திழுத்து விட்டது. உணர்ச்சிகளை படு அழகாக தனது முகத்தில் கொண்டு வந்த விதம், இனியாவை பெரிய நடிகைகள் வரிசையில் ஏற்றி வைக்கப் போகிறது என்பது அனைவருக்குமே புரிந்து விட்டது. இதோ, அதற்கான அங்கீகாரமாக பாரதிராஜாவின் அன்னக்கொடியும், கொடிவீரனும் படத்தில் மல்லாங்கிணறு மங்காத்தா என்ற முக்கிய கேரக்டரில் நடிக்கப் போகிறார் இனியா.

பாரதிராஜாவின் படத்தில் நடிக்கும் பாக்கியம் கிடைத்தது பெரிய சந்தோஷம் மட்டுமல்ல, பெரிய அங்கீகாரமும் கூட என்று கூறும் இந்த மலையாளத்து பட்டுவண்ணச் சிட்டு, ஒவ்வொரு படத்தையும் தேர்ந்தெடுத்து நடிக்கக் காத்திருக்கிறாராம்.

எனக்கென்று எந்த இமேஜையும் விரும்பவில்லை. எதைக் கொடுத்தாலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை அனைவரின் மனதிலும் விதைக்க ஆர்வமாக உள்ளேன். என் மீது எந்த முத்திரையும் விழுந்து விடாமல் கவனமாக இருக்கப் போகிறேன். இவருடன்தான் நடிப்பேன், அவருடன் நடிப்பேன் என்றெல்லாம் கூற மாட்டேன்.

எனது 2வது படத்திலேயே பெரிய இயக்குநரான அமீருடன் ஜோடியாக நடிக்கப் போவது பெருமையாக இருக்கிறது. படத்தின் கதை குறித்துக் கூற முடியாது.

இப்படத்திலும் நான் பாவாடை தாவணிதான், ஜாக்கெட் இல்லாமலும் நடிக்கப் போகிறேன். மாட்டு வண்டி கூட ஓட்ட வேண்டியிருக்கும் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். கேட்கவே திரில்லாக உள்ளது. கோபக்காரி கேரக்டரில் வருகிறேன்... அய்யய்யோ, கதையை சொல்ல ஆரம்பிச்சுட்டேனே...இதுக்கு மேல சொல்ல முடியாது என்று கூறி ஓடினார் இனியா.

நடிப்பில் மட்டுமல்ல, பேச்சிலும் கூட இனிமைதான்!