Monday, November 28, 2011

மனைவிக்கு மரியாதை தந்தா... கணவனுக்காக அவள் எதையும் செய்வாள்! - செல்வராகவன்



Selvaragavan
ஒரு கணவன் தன் மனைவிக்கு குறைந்தபட்ச மரியாதை அளிக்க ஆரம்பித்தால் கூடப் போதும், அவள் அவனுக்கா எதையும் செய்வாள், என்கிறார் இயக்குநர் செல்வராகவன்.

செல்வராகவன் இயக்கியுள்ள புதிய படம் மயக்கம் என்ன நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியானது. பலரும் இந்தப் படத்தை பாராட்டி வருகின்றனர்.

படத்தின் மனைவிக்கு முக்கியத்தும் அளித்திருப்பது குறித்து அவரிடம் கேட்டபோது, "ஒரு பெண்ணுக்கு உரிய மரியாதையைத் தர வேண்டும். குறிப்பாக வாழ்க்கைத் துணை என்ற அந்தஸ்துக்குரிய மனைவிக்கு, கணவர்கள் மரியாதை தரவேண்டும்.

குறைந்தபட்ச மரியாதை தந்தாலே, அவர்கள் கணவனுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள். மயக்கம் என்ன படத்தில் அந்தக் கருத்தை ஒரு பிரச்சாரமாக சொல்லாமல், லேசாக தொட்டுக் காட்டியிருப்பேன்.

இந்தப் படத்தில், பெண்களை, அவர்களின் உணர்வுகளை ஆண்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளேன்," என்றார்.

அடுத்ததாக வரலாற்றுப் படம் ஒன்றை இயக்குகிறார் செல்வராகவன். இந்தப் படத்தில் ஆர்யா - அனுஷ்கா ஜோடியாக நடிக்கின்றனர்.