Tuesday, November 15, 2011

ஆயிரத்தில் ஒருவன்... இரண்டாம் பாகம் உருவாக்கும் செல்வராகவன்!



Aayirathil Oruvan
செல்வராகவன் இயக்கத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் வந்து பெரிய அளவு சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களைச் சந்தித்த படம் ஆயிரத்தில் ஒருவன்.

கார்த்தி, ரீமா சென், ஆன்ட்ரியா நடித்த இந்தப் படத்தின் கதை, சரித்திரத்தையும் சமகாலத்தையும் இணைத்து சொல்லப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் தொடர்ச்சியை எடுக்க திட்டமிட்டுள்ளார் செல்வராகவன். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், "ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கும் திட்டம் உள்ளது. ஸ்கிரிப்ட் ரெடியாகிவிட்டது. கொஞ்சம் இடைவெறிவிட்டு இந்தப் படத்தை எடுக்கும் திட்டமுள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈழப் போராட்டத்தை மறைமுகமாகக் குறிக்கும் வகையில் காட்சிகளும் வசனங்களும் ஆயிரத்தில் ஒருவனின் அமைந்திருந்ததால், இந்த இரண்டாம் பாகம் குறித்த ஆர்வமான விசாரிப்புகள் ரசிகர்கள் மத்தியில் கிளம்பியுள்ளன.