Friday, November 18, 2011

பாரதிராஜா - வைரமுத்து தொடங்கும் அல்லிநகர கல்வி அறக்கட்டளை!




Bharathiraja and Vairamuthu
இயக்குநர் பாரதிராஜாவும் கவிஞர் வைரமுத்துவும் தங்களின் சொந்த ஊர் மக்களின் கல்வி வளர்ச்சிக்காக புதிய கல்வி அறக்கட்டளை தொடங்குகிறார்கள்.

இந்தக் கட்டளைக்கு பாரதிராஜா - வைரமுத்து கல்வி அறக்கட்டளை என்று பெயர் சூட்டியுள்ளனர். தேனி மாவட்ட மக்களின் கல்வி வளர்ச்சிக்காக இந்த அறக்கட்டளை உதவும் என்று அறிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை அல்லி நகரம் வீரப்ப அய்யனார் கோயிலில் நடந்த பாரதி ராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் தொடக்க விழாவில் இந்த அறிவிப்பை இருவரும் வெளியிட்டனர்.

வைரமுத்து கூறுகையில், நாங்கள் பிறந்த இந்த மண்ணுக்கு ஏதாவது செய்தாக வேண்டும். அதற்காக பாரதிராஜா - வைரமுத்து கல்வி அறக்கட்டளையை ஆரம்பிக்க விரும்புகிறேன். இதற்கு ஆரம்ப நிதியாக நான் என் சொந்த பணத்திலிருந்து ரூ 5 லட்சம் தருகிறேன். மேலும் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்துக்கு நான் பாடல் எழுத தரப்படும் சம்பளத்தையும் தருகிறேன்," என்றார்.

அடுத்துப் பேசிய பாரதிராஜா, தன் பங்குக்கு ரூ 10 லட்சத்தை இந்த அறக்கட்டளைக்கு தருவதாகக் கூறினார். ஆனால் வைரமுத்துவுக்கு சம்பளம் என எதுவும் தரமாட்டேன் என்றும், அவர் விலை மதிப்பில்லாதவர் என்பதால், அவர் பாடலுக்கு சம்பளமாக எதையும் நிர்ணயிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இந்த அறக்கட்டளைக்கு பாலு மகேந்திரா ரூ 10000-ஐ நன்கொடையாகத் தருவதாக அறிவித்தார்.