Friday, November 18, 2011

ஐஸ்வர்யா மகள் பாடகியாவாரா?




Aishwarya Rai
ஐஸ்வர்யா, அபிஷேக் தம்பதியருக்குப் பிறந்துள்ள பெண் குழந்தை என்னவாக வருவார் என்ற கேள்வி இப்பொழுதே பட படக்க ஆரம்பித்துவிட்டது. குழந்தையின் பிறந்த எண்ணை கணக்கிட்டுப் பார்த்த பிரபல எண்ணியல் நிபுணர் தாய்வாக்ன சர்மா, இந்த குழந்தை சிறந்த பாடகியாக வருவார் என்று கணித்துள்ளார்.

ஐஸ்வர்யா, அபிஷேக் தம்பதியருக்கு கடந்த திங்கட்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை பிறந்த தேதியை கணக்கிட்ட எண்ணியல் வல்லுநர் தாய்வாக்ன சர்மா, அந்த குழந்தை மிகச்சிறந்த பாடகியாக வருவார் என்று கணித்துள்ளார்.

கூடும் எதிர்பார்ப்பு

பிரசித்தி பெற்ற நாளிதழ் ஒன்று இதனை ஆமோதித்து கருத்து வெளியிட்டுள்ளது. ஐஸ், அபிஷேக் தம்பதியரின் மகள், அவரது பாட்டனார் அமிதாப் பச்சனைப் போல சிறந்த பேச்சாற்றல் திறமை கொண்டவராகவும் வர வாய்ப்புள்ளதாக அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது முப்பாட்டனார் அதாவது அமிதாப்பின் தகப்பனார் ஹரிவன்ஸ் ராய் பச்சனைப் போல சிறந்த எழுத்தாளராக வருவாரா என்றும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதற்கும் பெட் உண்டா?

அமிதாப் பச்சன் தனது பேத்தியை மிகவும் பிரசித்தி பெற்ற கல்வி சாலையில் படிக்க வைக்கப் போவதாக தெரிவித்துள்ளார். கலைத்துறை சார்ந்த படிப்பில் பேத்திக்கு விருப்பம் இருந்தால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப் போவதில்லை என்றும் அவர் டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். குட்டிக்குழந்தைக்கு ஐஸைப் போலவே அழகிய கண்கள் அமைந்திருப்பதில் பெற்றோர்களும், தாத்தா , பாட்டியும் பெருமிதம் கொண்டுள்ளனர்.

எது எப்படியோ அந்த குழந்தை உருவானது முதல் பிறக்கும் வரை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது தற்போது பிறந்து சில நாட்களிலேயே என்னவாக வரப்போகிறது என்ற கேள்விகள் வலம் வரத் தொடங்கியுள்ளது. பிறப்பதற்கு பெட் கட்டியவர்கள் இதற்கும் பெட் கட்டுவார்களோ என்னவோ ?