Wednesday, November 30, 2011

ஜெயம் ரவி குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரஜினி!




Rajinikanth

ஜெயம் ரவியின் தந்தையும் தயாரிப்பாளருமான எடிட்டர் மோகனுக்கு நேற்று 70 வது பிறந்த நாள். இயக்குநர் ஜெயம் ராஜா, ஜெயம் ரவி ஆகியோருக்கு திருமணமாகி, குழந்தைகள் பிறந்த பின்னரும் இன்றும் ஒரு கூட்டுக்குடும்பமாகவே வசித்து வருகின்றனர்.

தந்தையின் 70வது பிறந்த நாளை இந்த குடும்பம் சந்தோஷத்துடன் கொண்டாட ஆரம்பித்த தருணத்தில், அவர்களை உற்சாகத்தின் எல்லைக்குப் போகவைத்தது ஒரு சம்பவம்... அது அவர்களே சற்றும் எதிர்ப்பார்க்காத சூப்பர் ஸ்டார் ரஜினியின் வருகை.

இப்போதெல்லாம் அவர் எந்த நிகழ்ச்சிக்கு வருவார், எப்போது வருவார் என்பதை யாராலும் கணிக்க முடிவதில்லை. உடல் நிலை காரணமாக அவரை யாரும் கட்டாயப்படுத்துவதில்லை. எனவே அவர் விருப்பப்படி, திடீரென வந்து பலருக்கும் இன்ப அதிர்ச்சி தந்து வருகிறார் ரஜினி.

ரஜினியின் வருகையால் துள்ளிக் குதித்த ஜெயம் ரவி, உடனே தனது ட்விட்டரில், "இன்று எங்கள் குடும்பத்துக்கு இன்ப அதிர்ச்சி... அப்பாவின் 70 வது பிறந்த நாளுக்கு நேரில் வந்து வாழ்த்தினார் ரஜினி சார்... என் குழந்தை ஆரவ்வின் கைகளைப் பிடித்து ரஜினி சார் கொஞ்சியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது...", என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெயம் ரவிக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி இன்னும் பலருக்கும் கிடைக்கட்டும்!

தமிழ் ரசிகர்களை இழிவாகப் பேசினேனா? - நடிகர் கார்த்தி விளக்கம்




Karthi
தமிழ் ரசிகர்களை இழிவாக பேசியதாக நடிகர் கார்த்தி சர்ச்சையில் சிக்கியுள்ள கார்த்தி அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் கார்த்தி ஐதராபாத்தில் நடந்த விருது வழங்கும் விழா நிகழ்ச்சியொன்றில் பேசிய கார்த்தியிடம், 'உங்களுக்கு தமிழ் ரசிகர்களை பிடிக்குமா? தெலுங்கு ரசிகர்களை பிடிக்குமா?' என கேள்வி கேட்டார் விழாவைத் தொகுத்தளித்த பெண்.

அதற்கு கார்த்தி, "நிச்சயமாக தெலுங்கு ரசிகர்களைத்தான் பிடிக்கும். தெலுங்கு ரசிகர்கள் ஒவ்வொரு சீனுக்கும் ஒவ்வொரு பிரேமுக்கும் கைதட்டி விசிலடிப்பார்கள். ஆனால் தமிழ் ரசிகர்கள் அப்படி இல்லை," என்று பதில் சொல்வது போல் வீடியோ இண்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.

இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழ் ரசிகர்களை இழிவாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தி கார்த்தி வீட்டு முன் முற்றுகை போராட்டம் நடத்த போலீசில் அனுமதி கேட்டுள்ளோம் என்று ஒரு கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து கார்த்தியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அப்படி பேசவில்லை என்று மறுத்தார்.

கார்த்தி கூறுகையில், "தமிழ்நாடும், தமிழ் ரசிகர்களும் எனது பெற்றோர் போன்றவர்கள். பெற்றோரை பற்றி யாராவது தவறாக பேசுவார்களா? கனவில் கூட யாரையும் நான் தவறாக நினைத்தது கிடையாது. தமிழக மக்களுக்கு என்னை பற்றி தெரியும். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு கிடையாது.

தமிழ் ரசிகர்கள் என்னை வளர்த்து ஆளாக்கியவர்கள். தமிழ் ரசிகர்கள் படங்களோடு உணர்வு பூர்வமாக ஒன்றி போக கூடியவர்கள். தெலுங்கு ரசிகர்கள் பொழுதுபோக்கு அம்சமாகத்தான் படங்களை பார்ப்பார்கள்.

ஹைதராபாத்தில் நடந்த விழாவில் ஆந்திராவில் எனது படங்களை பார்த்து வரவேற்பு கொடுப்பதற்காக தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி சொன்னேன். தெலுங்கில் பேசியதால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது," என்றார்.

தனுஷ் பாட்டைக் கிண்டல் செய்ய வேண்டாம் - சொல்கிறார் சிம்பு




Simbu and Danush
கொலவெறிடி பாட்டில் தமிழைக் கொலை செய்கிறார் தனுஷ் என்று தனது ரசிகர்கள் கிண்டலடித்து வருவது தவறு என சிம்பு கூறியுள்ளார்.

3 படத்துக்காக தனுஷ் எழுதிப் பாடியுள்ள வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் இன்று இந்தியா முழுக்க முணுமுணுக்கப்படும் பாடலாகிவிட்டது. பாலிவுட் சாதனையாளர் அமிதாப் பச்சன், அவர் மகன் நடிகர் அபிஷேக் பச்சன் என பலரும் இந்தப் பாடலை தங்களுக்குப் பிடித்த ஒன்றாகக் கூறியுள்ளனர்.

வட இந்திய செய்திச் சேனல்கள் இந்தப் பாடலை வைத்து அரசியல் தலைவர்களை கிண்டலடித்து அரசியல் காமெடி நிகழ்ச்சிகளை தயாரிக்க ஆரம்பித்துள்ளன.

ஆனால் சிம்புவின் ரசிகர்களோ, தமிழ்க் கொலை செய்கிறார் தனுஷ் என இணையதளங்கள், போஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனர்.

ரசிகர்களின் இந்தச் செயலை கண்டித்துள்ளார் நடிகர் சிம்பு.

தனது பேஸ்புக்ஸகில் இதுகுறித்த அவர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

தனுஷ் எழுதி பாடியுள்ள பாடலை எனது பாடல்களுடன் ஒப்பிட வேண்டாம். தனுஷ் சிறந்த நடிகர் மற்றும் எனது நண்பர். இருவருமே ஒரே துறையில் இருக்கிறோம்.

ஒரு பாடலை எழுதி பாட எல்லோருக்கும் உரிமை உண்டு. தற்போது சிறு சிறு ஆங்கில வார்த்தைகளை சேர்த்து பாடலாக்குவது ஒரு ட்ரெண்டாகிவிட்டது.

அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். எனவே பாடலை கேட்டு சந்தோஷப்படுங்கள். பாட்டை கேலி செய்த ரசிகர்கள் மீது கோபமாக இருக்கிறேன். கேலி செய்வதை நிறுத்துங்கள்," என்று கூறியுள்ளார்.

Monday, November 28, 2011

மயக்கம் என்ன - திரை விமர்சனம்



ருமை அண்ணன் செல்வராகவனும் தங்கத் தம்பி தனுஷும் இணையும் மூன்றாவது(4வதும்) படம் என்பதாலும், செல்வராகவன் மீண்டும் ’பாலியல் வறட்சி’ மேட்டரை கையில் எடுத்திருப்பதாலும் ஏற்கனவே பாடல்கள் சூப்பர் ஹிட் என்பதாலும் படத்திற்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால்....................அவ்வ்!


முதல்ல கதையைச் சொல்ல முயற்சி பண்றேன்..

இது தமிழ்சினிமாவுலேயே வராத கதைன்னு தைரியமாச் சொல்லலாம்..தனுஷும் அவர் தங்கச்சியும் அப்பா-அம்மா இல்லாதவங்க..ஃப்ரெண்ட்ஸ் சப்போர்ட்ல ‘வாழ்றாங்க’..பீர் தான், சிக்கன் பிரியாணி தான்..நல்ல வாழ்வு..சுந்தர்ங்கிற மாக்கான் தான் க்ளோஸ் ஃப்ரெண்டு..அவர் அப்பாவும் ஒன்னா தண்ணி அடிக்கிற அளவுக்கு நல்லா பழகுறாரு..அந்த மாக்கான் ஃப்ரெண்டு ஒரு ஃபிகரை கூட்டிக்கிட்டு வந்து ‘இது நான் லவ் பண்ற பொண்ணு..லவ்வுக்கு ஒத்துக்கலை..டேட்டிங்குக்கு மட்டும் தான் ஒத்துக்கிச்சுன்னு சொல்றாரு..ஃப்ரெண்ட்ஸும் ரொம்ப நல்ல பொண்ணு-னு அதை குரூப்ல சேர்த்துக்கறாங்க.(குரூப்ல பொண்ணுங்களும் உண்டு). 

அப்புறம் பீர், விஸ்கின்னு நல்லா பழகுறாங்க..அந்தப் பொண்ணுக்கும் தனுஷுக்கும் ஒத்துக்கலை..முட்டிக்குது..மோதல் என்ன ஆகும்?..அப்புறம் தான் ஆடியன்சுக்கே தெரியுது, அது தான் ஹீரோயின்னு..ஏன்னா அதுவரைக்கும் மாக்கான் நண்பன் தான் அதை தடவுறாரு..(இதான் கலாச்சார அதிர்ச்சியோ...)

நண்பன் காதலியை லவட்டலாமா? நம்ம கலாச்சாரம் என்ன, பண்பாடு என்ன?-ன்னு தனுஷ்க்கு ஃபீலிங். கூடவே லவ் ஃபீலிங்கும். பொண்ணும் மாக்கான்கிட்ட தெளிவா மேட்டரைச் சொல்லாம அவன் காசுலேயே ஊர் ஊராச் சுத்தி தண்ணி அடிச்சுக்கிட்டே, லுக் விட்டுக்கிட்டே தனுஷை லவ் பண்ணுது..ஒரு 'அரை சீன் படம்' ரேஞ்சுக்கு இந்தக் கதை ஒரு பக்கம் போகும்போதே, மெயின் கதை(?) இன்னொரு பக்கம் ஓடுது..(கதை மட்டும் தான் அப்படி..சீனும் இல்லை!!)

அது என்னன்னா, தனுஷ் ஒரு ஃபோட்டோகிராஃபர்..புகழ்பெற்ற ஃபோட்டோகிராஃபரான ஒரு பெருசை (பேர் மறந்திடுச்சு..) ரோல் மாடலா நினைச்சு அவர் கிட்ட அசிஸ்டெண்டா சேர முயற்சி பண்றாரு..நேஷனல் ஜாக்ரஃபி, டிஸ்கவரில நம்ம ஃபோட்டோவும் வரணும்னு ஆசைப் படுறாரு..அந்த பெருசு ‘போய் பறவைகளை ஃபோட்டோ எடுத்துக் காட்டு..அதைப் பார்த்துட்டு முடிவு சொல்றேன்னு தனுஷ்கிட்டச் சொல்ல, நம்மாளும் சூப்பரா படம் எடுத்துக்கொடுத்தா, அந்தப் பெருசு அதை தன்னோட படம்னு சொல்லி ரிலீஸ் பண்ணிடுது..அந்தப் படம் என்னமோ ஒரு பெரிய பரிசையும் வாங்கிடுது..

என்னென்னமோ நடக்குதே..அப்போ கண்டிப்பா என்னமாவது நடக்கும்னு நாம நிமிர்ந்து உட்காருதோம்..கூடவே ஒரு சந்தோசம், செல்வராகவன் வக்கிரம் இல்லாம படத்தைக் கொண்டு போறாரேன்னு..அப்படில்லாம் விட்டுடுவாரா...

தனுஷும் ஹீரோயின் ரிச்சா கங்கோபாத்தியாயா (என்னா பேரு!)-வும் ஒரு சீன்ல..ச்சே..ச்சே..சீன் இல்லீங்க..ஒரு காட்சில உணர்ச்சி வசப்பட்டு டபக்குன்னு கட்டிப்பிடிக்கிறதை மாக்கான் நண்பன் பார்த்துடுறாரு...சின்ன சண்டை, நீயெல்லாம் நண்பனா டயலாக்ஸ் பேசிட்டு தனுஷ் ரிச்சாவைக் கட்டிக்கிடறாரு..மாக்கான் நண்பன், தனுஷோட தங்கச்சியை கட்டிக்கிடறாரு..(ஆமாம்யா..இதுக்கே அதிர்ச்சியானா எப்படி?)...

இப்போ தனுஷ் ஃபோட்டோவைக் காட்டி பெருசு பெரிய விருது வாங்குச்சா..அதை பேப்பர்ல பார்க்கிற தனுஷ், பால்கனில இருந்து தலைசுத்தி கீழ விழுந்து மண்டை சிதறுது..

மூன்று வருடங்களுக்குப் பிறகு...(அப்படித் தான் போட்டாங்க..)......

தனுஷ் மெண்டல் ஆகிடுதாரு..பொண்டாட்டியை (அதான்யா, ஹீரோயினை) போட்டு அடிக்காரு..(அய்யோ..) கேர்ல் ஃப்ரெண்ட் கல்யாண ரிசப்சன்ல மாப்பிளை மண்டையை உடைக்காரு..(அய்யய்யோ)..

தனுஷ் ஃப்ரெண்ட்ல ஒருத்தர் ஹீரோயினுக்கு ஆறுதல் சொல்றேன்னுட்டு அப்படியே இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்து ‘உன்னை நான் வச்சிக்கிறேன்’-ங்கிறதை டீசண்டா சொல்றாரு..(இப்போ அய்யய்யோவை வாய் விட்டே சொல்லலாம்..)..அய்யய்யோ...படம் பார்க்க வந்ததுக்கு இன்னும் என்னென்ன கண்றாவியெல்லாம் பார்க்கணுமோன்னு பதறுனோம்..

ஆனா அந்தப் பொண்ணு பத்தினி..”டேய், எவ்னோ டேட்டிங் வான்னு கூப்பிட்டதும் நடுராத்தில அவன் பின்னாடியே வந்தவ தாண்டா நான்..அவன் காசுலேயே பீர் அடிச்சு,அவன் ஃப்ரெண்ட்டையே கரெக்ட் பண்ணவ தாண்டா..அதுக்காக என் புருசனை விட்டுக்கொடுப்பேன்னு நினைச்சுடாதே..”-ன்னு (பயப்படாதீங்க..இது என் டயலாக் தான்..அது இதையே வேற மாதிரி டீசண்டா) சொல்லிடுது. அந்த நல்ல நண்பனும் ‘சாரி’ன்னு சொல்ல இதுவும் ‘ஓகே..இதை நீயும் மறந்திடு, நானும் மறந்திடுவேன்..நீ எப்பவும்போல அடிக்கடி என் வீட்டுக்கு வா(!!)’ன்னு சொல்லிடுது..

அடுத்து.....................மாசமா இருக்கிற ஹீரோயின் வயித்துல மெண்டலா திரியற தனுஷ் ஒரே மிதி..கரு ரத்தமா போகுது...தரையெல்லாம் ரத்தம்..அய்யோ, அம்மா-ன்னு ஹீரோயின்கூடச் சேர்ந்து ஆடியன்சும் கத்துறாங்க.. கதறுதாங்க..அந்தம்மா உடம்பு சரியாகி வீட்டுக்கு வருது..தனுஷ் அந்த ரத்தத்துக்குப் பக்கத்துலேயே படுத்திருக்காரு..அது வாளி நிறைய தண்ணியும், ப்ரெஷும் எடுத்து தேய் தேய்னு தேய்ச்சுக் கழுவிக்கிட்டே 10 நிமிசம் பேசி அழறாங்க..சாப்பிட்டுப் போன நமக்கு குடலைப் புரட்டிடுச்சு..உஸ்ஸ்ஸ்...

இவ்ளோ விஷயம் நடக்குன்னா செல்வராகவன் என்னமோ சொல்ல வர்றாரு...என்னவா இருக்கும்-னு யோசிக்கிட்டே கண்டினியூ பண்ணா..

அடடே..என்ன ஆச்சரியம்..தனுஷ் திடீர்னு தெளிவாகிடுதாரு..அவர் ஃபோட்டோ குமுதம் அட்டைல வந்து, அப்படியே உலகம் பூரா சுத்தி, அந்த பெருசை விட பெரிய ஃபோட்டோகிராஃபர் ஆகி ஆஸ்கார் மாதிரி பெரிய பரிசை ஜெர்மன் போய் வாங்கிடுதாரு..

அப்புறம் தான் நாங்க எதிர்பார்த்த முக்கியமான விஷயமே வந்துச்சு..ஆமாங்க..படம் முடிஞ்சுடுச்சு!

எப்பவும் நான் படத்தோட கதையை விமர்சனத்துல சொல்றதில்லை..ஆனா எவ்வளவு யோசிச்சும், இந்தப் படத்தோட கதை என்ன, என்ன தான் சொல்ல வந்தாங்கன்னு புரியாததால, பார்த்ததை அப்படியே எழுதி இருக்கேன்..உங்களுக்காவது ஏதாவது புரிஞ்சா சொல்லுங்க..

படத்துல நல்ல விஷயம்னா பாடல்கள் தான்..ஜி.வி.பிரகாஷ் அருமையா டியூன் போட்டிருக்கார்..பிண்ணனி இசையும் நல்லா இருந்துச்சு..குறிப்பா ‘வெண்ணிலவே’ பாட்டுக்கு குடிச்சுட்டு மாக்கான் - ரிச்சா - தனுஷ் ஆடி முடிக்கவும் வந்த பிண்ணனி இசை.

அடுத்து ராம்ஜியின் ஒளிப்பதிவு..படமே ஃபோட்டோகிராஃப்ர் பத்தின படம் என்பதால் கேரளா-கர்நாடகான்னு அழகான லொகேசனா தேடி எடுத்திருக்காங்க..

தனுஷ் நல்ல நடிப்பு தான்..அண்ணன் படம் என்பதால் அடக்கியே வாசிச்சிருக்காரு..

ஹீரோயின் ரிச்சா முதல்ல பார்க்கும்போது சாதாரணமா தெரிஞ்சது..போகப்போக ‘நல்ல ஃபிகரா’ தெரிய ஆரம்பிச்சுடுச்சு..நல்லா முகத்துல எக்ஸ்பிரசன்ஸ் காட்டுது..அழகான கண்கள்..அகலமான முதுகுன்னு நல்லவொரு அறிமுகம்.

‘இது அடுத்த தலைமுறைக்கான படம்’னு செல்வராகவன் சொன்னாரு..அப்பவே உஷார் ஆகியிருக்கணும்..அம்பது வருசம் கழிச்சு பார்க்கவேண்டிய படத்தை அவசரப்பட்டு, இப்பவே பார்த்துட்டேன்..

படத்தில் தனுசின் நண்பர் சுந்தர் தன் காதலியை தனுசுக்கு தாரை வார்ப்பதிலேயே குறியாக இருக்கிறார்.எங்கு சென்றாலும் தனுசுடனே சுற்றுகிறார் அதிலும் முக்கியமாக சுந்தரின் காதலி ரிச்சா குளியலறையில் கதவை திறந்து வைத்துக்கொண்டு குளித்துக்கொண்டிருப்பார்.அந்த நேரத்தில் தனுசை காவலுக்கு இருக்க சொல்லிவிட்டு ஆய் வருகிறது என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பி போய்விடுவார்.காதலி குளியலறையில் குளிக்கும்போது எந்த காதலன் சார் ஒரு ஆணை துணைக்கு வைத்துவிட்டு வெளியே போவான்? அதிலும் ரிச்சா கதவை திறந்துபோட்டுக்கொண்டு குளிப்பாராம்... கேட்டால் பல்லி என்றால் பயம் என்பாராம்???கல்யாணம் ஆன பெண்ணை கட்டிப்பிடிப்பாராம்,கிஸ் அடிப்பாராம்..கல்யாணத்துக்கு முன் டேட்டிங் போவாராம்..ஊர்சுற்றுவாராம் ஆனால் அது காதல் இல்லையாம் ..டேட்டிங் செய்து கொண்டே வேறொருவரை ரூட் விடுவாராம்..செல்வராகவன் சார் உங்க வக்கிரத்துக்கு நாங்க ஊறுகாயா? இதற்கு நடுநிசி நாய்களே தேவலாம்.

மொத்தத்தில் செல்வராகவன் மயக்கத்தில் இருந்தபோது எடுத்த படம்.

 

வேற என்ன சொல்ல..........?

ராணாவில் நடிக்க மாட்டார் தீபிகா படுகோன்?



http://gallery.oneindia.in/celebs/deepika-padukone-11180.html
ராணா படத்தை அதன் தயாரிப்பாளர்கள் கிடப்பில் போட்டு விட்டதால் கடும் அப்செட்டாகியுள்ளாராம் தீபிகா படுகோன். இந்தப் படத்துக்காக கால்ஷீட் ஒதுக்கி இத்தனை காலமாக காத்திருந்தும், தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், படத்தை நிறுத்தி வைத்ததால் அவர் கடும் அப்செட்டாகி விட்டாராம். இதனால் ராணா படத்தில் நடிக்கும் எண்ணத்தையும் அவர் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எந்திரன் படத்துக்குப் பிறகு ரஜினியின் அடுத்த படம் குறித்து பெரும் குழப்பம் தொடர்ந்து நிலவி வந்தது. முதலில் சுல்தான் தி வாரியர் என்ற படத்தைக் கூறி வந்தனர். பின்னர் ராணா என்ற பெயரில் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இதற்கான பூஜையும் போடப்பட்டது. தீபிகா படுகோன் இப்படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தீபிகாவும் உற்சாகமாக இருந்தார். ஆனால் ரஜினிக்கு உடல் நலம் பாதிக்கப்படவே, ராணா படப்பிடிப்பு நின்று போனது. அவர் உடல் நலம் குணமடைந்து திரும்பினாலும் கூட அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படத்தில் இருப்பதால் அவரை ராணா படத்தில் நடிக்க வைப்பது குறித்து குடும்பத்தினரும், படக்குழுவினரும் தீவிர சிந்தனையில் மூழ்கினர்.

இந்த நிலையில்தான் கோச்சடையான் என்ற புதிய பட அறிவிப்பை வெளியிட்டனர். இந்தப் படத்தை அதி நவீன தொழில்நுட்பத்தில், எடுக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹீரோயினாக நடிக்க அனுஷ்காவை நாடியுள்ளதாக இப்படத்தின் இயக்குநர் மேற்பார்வைப் பணியைக் கவனிக்கப் போகும் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.

இதனால் ராணா பட நாயகி தீபிகா கடும் அப்செட்டாகியுள்ளாராம். ராணா படம் நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது குறித்து அவரிடம் கருத்து கேட்போரிடம், அதுகுறித்து என்னைக் கேட்டால் எனக்கு என்ன தெரியும். நான் இப்போது மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். ராணா படம் குறித்து எனக்கு ஒரு தகவலும் தெரியாது. எனவே அதுகுறித்து என்னிடம் கேட்காதீர்கள் என்கிறாராம்.

தீபிகா இப்படி மறைமுகமாக கூறினாலும் கூட இப்படத்தில் நடிக்கும் திட்டத்தை தீபிகா கைவிட்டு விட்டதாக அவருக்கு நெருங்கிய வட்டாரம் கூறுகிறது. மாறாக, ராணா படத்துக்காக ஒதுக்கி வைத்திருந்த கால்ஷீட்களை தற்போது புதிய இந்திப் படங்களுக்கு அவர் ஒதுக்கிக் கொடுத்து விட்டாராம். மீண்டும் ராணா படத் தரப்பில் தன்னை அணுகினாலும் அவர் மறுத்து விடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கமல்ஹாசனின் விஸ்வரூபம், ஏஆர்முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகும் புதிய படம் உள்ளிட்ட பல முக்கியப் படங்களிலும் நடிக்க தீபிகாவை அணுகினர். ஆனால் அவர் நடிக்க முன்வரவில்லை. தற்போது ரஜினி படத்திலிருந்தும் அவர் நழுவவுள்ளதாக தகவல்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

மகள் இயக்கத்தில் ரஜினிகாந்த்?



Rajinikanth

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் 3 படத்தில் அவரது தந்தையும், சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் வரக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள படம் 3 . தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிக்கும் இந்த படத்தில் வரும் 'ஒய் திஸ் கொலைவெறி டி' பாடல் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கேட்கிறது. யாரைப் பார்த்தாலும் ஒய் திஸ் கொலைவெறிப் பாட்டைத் தான் பாடுகிறார்கள். அந்த அளவுக்கு பிரபலமாகிவிட்டது.

அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கூட இந்த பாட்டைக் கேட்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்நிலையில் 3 படத்தில் தனது செல்ல மகளுக்காக ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் வரக்கூடும் என்று கூறப்படுகிறது.

உடல் நிலைத் தேறியதும் ஷாருக் கானுக்காக மும்பை சென்று ரா ஒன் படத்தில் நடித்துக் கொடுத்துவிட்டு வந்தார் ரஜினி. தனது மகள் இயக்கி, மருமகன் ஹீரோவாகவும், தனது நண்பர் கமல் மகள் ஸ்ருதி ஹீரோயினாகவும் நடிக்கும் படத்தில் கௌரவத் தோற்றத்தில் வரமாட்டாரா என்ன?

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் 3 படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளது. இந்நிலையில் ரஜினி வேற நடித்தால் படம் நிச்சயம் சூப்பர் ஹிட் தான்.

மனைவிக்கு மரியாதை தந்தா... கணவனுக்காக அவள் எதையும் செய்வாள்! - செல்வராகவன்



Selvaragavan
ஒரு கணவன் தன் மனைவிக்கு குறைந்தபட்ச மரியாதை அளிக்க ஆரம்பித்தால் கூடப் போதும், அவள் அவனுக்கா எதையும் செய்வாள், என்கிறார் இயக்குநர் செல்வராகவன்.

செல்வராகவன் இயக்கியுள்ள புதிய படம் மயக்கம் என்ன நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியானது. பலரும் இந்தப் படத்தை பாராட்டி வருகின்றனர்.

படத்தின் மனைவிக்கு முக்கியத்தும் அளித்திருப்பது குறித்து அவரிடம் கேட்டபோது, "ஒரு பெண்ணுக்கு உரிய மரியாதையைத் தர வேண்டும். குறிப்பாக வாழ்க்கைத் துணை என்ற அந்தஸ்துக்குரிய மனைவிக்கு, கணவர்கள் மரியாதை தரவேண்டும்.

குறைந்தபட்ச மரியாதை தந்தாலே, அவர்கள் கணவனுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள். மயக்கம் என்ன படத்தில் அந்தக் கருத்தை ஒரு பிரச்சாரமாக சொல்லாமல், லேசாக தொட்டுக் காட்டியிருப்பேன்.

இந்தப் படத்தில், பெண்களை, அவர்களின் உணர்வுகளை ஆண்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளேன்," என்றார்.

அடுத்ததாக வரலாற்றுப் படம் ஒன்றை இயக்குகிறார் செல்வராகவன். இந்தப் படத்தில் ஆர்யா - அனுஷ்கா ஜோடியாக நடிக்கின்றனர்.

6 நிமிடத்தில் 'கொலை வெறி' பிறந்தது-தனுஷ்


Danush


எங்கு பார்த்தாலும் கொலை வெறி, கொலை வெறிதான். தனுஷ், தமிழையும், ஆங்கிலத்தையும் போட்டுக் குழைத்து உருவாக்கியுள்ள இந்தப் பாடல்தான் எங்கு பார்த்தாலும் கேட்கப்படுகிறது. ஏன் இந்த கொலை வெறி என்று கேட்கும் அளவுக்கு இந்தப் பாடல் மீது இளைஞர்களுக்கு பயங்கர கொலை வெறியாகியுள்ளது. அந்த அளவுக்கு இந்தப் பாடல் அவர்களிடையே பிரபலமாகியுள்ளது.

இதுகுறித்து தனுஷிடம் கேட்டால் பயங்கர குஷியாகி விடுகிறார். அந்தப் பாடலை ஆறே நிமிடத்தில் நான் எழுதினேன். இந்தப் பாடல் வரிகள் மகா எளிமையானவை. அதில் நிறைய இங்கிலீஷ் வார்த்தைகளை நான் பயன்படுத்தியுள்ளேன். அனைவருக்குமே புரியும்படியாக இதை எழுத நினைத்தேன். அதன்படியே அதுவும் வந்தது. இதை ஒரு பாடலாக பயன்படுத்த நாங்கள் திட்டமிடவில்லை.இதுதான் இங்கு ஹைலைட்.

இதை தமிழிங்கிலீஷ் பாடல் என்று கூறி விட முடியாது. நான் ஆங்கிலத்தில் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தாலும் கூட அதில் தமிழ் வாசனை வீசும் (அப்டியா..??) அனைத்துத் தமிழர்களும் இதைக் கேட்க வேண்டும் என்பதே அதற்குக் காரணம் (ஓஹோ...) என்கிறார் தனுஷ்.

தமிழர்கள் அத்தனை பேரும் இதைக் கேட்க வேண்டும் என்பது தனுஷின் விருப்பம். ஆனால் பாலிவுட்டில்தான் இதை மாய்ந்து மாய்ந்து கேட்டு வருகிறார்களாம். எப்படி இப்படியெல்லாம் தமிழில் கலக்குகிறார்கள் என்று அவர்களுக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கிறதாம். நாமும்தான் இந்தியில் ஆங்கிலத்தைப் போட்டு கிண்டிக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும் தனுஷ் மாதிரி நம்மால் செய்ய முடியாமல் போனது ஏன் என்ற சிந்தனையில் பாலிவுட் மூழ்கியுள்ளதாம்.

ரூம் போட்டு சிந்திக்கப்பட வேண்டிய விஷயம்தான்...!

புல்லரித்துப் போன அமிதாப்!

இதற்கிடையே, இந்த கொலை வெறிப் பாடல் அமிதாப் பச்சனையும் அசரடித்து விட்டதாம். இதுகுறித்து அவர் புல்லரித்துப் போய் தனது பிளாக்கில் எழுதியிருப்பதாவது...

ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி.. ஆஹா, என்ன ஒரு பாடல். உதடுகளை விட்டு நீங்க மறுக்கும் பாடல். மனதை அப்படியே மாற்றிப் போடுகிறது. அருமையான அனுபவம். பாடலைக் கேட்கும்போதே உதடுகளில் புன்னகை வந்து உட்கார்ந்து விடுகிறது, கூடவே சிரிப்பும் வருகிறது. முகத்தில் பலவித ரசங்கள் மாறி மாறி நடமிடுகின்றன.

யூடியூபில் இப்போது இந்தப் பாடல்தான் சக்கை போடு போடுகிறது. காட்டுத் தீ போல இது பரவியுள்ளது. ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் கணவரான தனுஷ்தான் இந்தப் பாடலை எழுதியுள்ளார். இளம் நடிகர் படையின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் தனுஷ், மிக இனிமையாக இந்தப் பாடலை எழுதியுள்ளார். யாரைப் பார்த்தாலும் இப்போது இந்தப் பாடலைத்தான் கேட்கிறார்கள் என்று உணர்ச்சிவசப்பட்டுள்ளார் அமிதாப்.

Sunday, November 27, 2011

மயக்கம் என்ன... தனுஷ்- செல்வராகவனுக்கு ரஜினி பாராட்டு




Danush and Richa Gangopadhyay
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “மயக்கம் என்ன” படத்தின் சிறப்புக் காட்சியை ரஜினி பார்த்தார்.

மயக்கம் என்ன படம் இன்று ரிலீசானது. இப்படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார். இதன் சிறப்பு காட்சி ரஜினிக்கு பிரத்யேகமாக ரியல் இமேஜ் அரங்கில் திரையிட்டு காட்டப்பட்டது.

வழக்கமாக செல்வராகவன் படம் ரிலீசுக்கு முன் சிறப்பு காட்சிகள் திரையிடுவது இல்லை. ஆனால் ரஜினிக்காக ஏற்பாடு செய்து இருந்தார்.

படம் ரஜினிக்கு மிகவும் பிடித்துப் போனதாம். இப்படத்தில் தனுஷ் ‘ஓட ஓட ஓட தூரம் பாட பாட பாட பாட்டு முடியல…’ என்ற பாடலை எழுதி பாடி உள்ளார். இப்பாட்டு ரஜினியை மிகவும் கவர்ந்து விட்டதாம். படம் முடிந்ததும் தனுசையும், செல்வராகவனையும் ரஜினி பாராட்டினார். தனுசுக்கு இப்படம் இன்னொரு மகுடம் என்று கூறி வாழ்த்தினார்.

செல்வராகவனையும் நீண்ட நேரம் பாராட்டினார் ரஜினி.

கள்ள உறவு: அதிமுக ஆதரவு கவிஞர் சினேகன் கைது செய்யப்படுவாரா?




Snehan

சென்னை: மடிப்பாக்கம் எஞ்ஜினீயர் மனைவியை கடத்தியதாக கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில், சினேகன் கைது செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.

பிரபல சினிமா பாடல் ஆசிரியரும், நடிகருமான சினேகன் மீது, எஞ்ஜினீயர் பிரபாகரன் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.

அதில், தனது மனைவியையும், குழந்தையையும் கடத்திச் சென்றுவிட்டதாக கூறியிருந்தார். அந்த புகார் மனு அடிப்படையில் பிரபாகரனிடமும், அவரது மனைவியிடமும் வரதட்சணை ஒழிப்பு போலீசார் கவுன்சிலிங் மூலம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த புகார் அடிப்படையில் கவிஞர் சினேகன் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று சென்னை நகர சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் தாமரைக்கண்ணனிடம் நேற்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், "சினேகன் மீது புகார் கொடுத்த பிரபாகரனிடமும், அவரது மனைவியிடமும் வரதட்சணை ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அடுத்த கட்டமாக சினேகனிடமும் விசாரணை நடத்தப்படும். தவறு செய்திருந்தால் கண்டிப்பாக சட்டபூர்வ கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என்றார்.

சினேகன் அதிமுக ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழிப்போக்கன்... வில்லன்... விவேக்!




Vivek

முன்னணி காமெடியனான விவேக் வில்லன் வேடத்துக்கு மாறியுள்ளார்.

தமிழ், கன்னட மொழிகளில் தயாராகும் வழிப்போக்கன் என்ற படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார். இது அவரது முதல் வில்லன் வேட படமாகும்.

பெங்களூரில் நடந்த இந்த படத்தின் பூஜையில் பங்கேற்ற பின் விவேக் கூறுகையில், "வழிப்போக்கன் படம் கன்னடம், தமிழ் மொழிகளில் தயாராகிறது.

இது எனது முதல் கன்னட படம். இப்படத்தில் நான் வில்லனாக படம் முழுக்க வருகிறேன். கிளைமாக்சில் எனது வில்லத்தனம் வெளிப்படும். எனக்கு கன்னட மொழி தெரியாது. படப்பிடிப்பில் அதைkd கற்றுக் கொள்வேன்.

கன்னடத்தில் டப்பிங் பேசுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இது எனக்கு சவாலான படமாக இருக்கும்," என்றார்.

சமீப காலமாக வெளியாகும் படங்களில் இவரது காமெடியே வில்லத்தனமாக மாறிவிட்டதால் மெயின் வில்லனாகிவிட்டார் போலிருக்கிறது!
  

அணையின் வரலாறு தெரியாம டேம் 999ல் நடித்துவிட்டேன்: விமலாராமன்




Vimala Raman
முல்லைப்பெரியாறு அணையின் வரலாறு பற்றி தெரியாமல் டேம் 999 படத்தில் நடித்துவிட்டேன் என்று அப்படத்தின் நாயகி விமலாராமன் தெரிவித்துள்ளார்.

முல்லைப்பெரியாறு அணை உடைவது போன்று எடுக்கப்பட்டுள்ள படம் டேம் 999. இதில் விமலாராமன் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த விமலாராமனுக்கு தமிழ் படங்களில் நடிக்க தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து விமலாராமனை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, அவர், "நான் தெலுங்குப் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதன் படப்பிடிப்புக்காக கடந்த 1 வார காலமாக குலுமணாலியில் உள்ளேன். படப்பிடிப்பு ஒரு குக்கிராமத்தில் நடப்பதால் டேம் 999 படத்தை எதிர்த்து நடக்கும் போராட்டங்கள் குறித்து முழுமையாகத் தெரியவில்லை.

சென்னையில் இருக்கும் எனது நண்பர்கள் படத்துக்கு எதிர்ப்பு இருப்பது குறித்து எஸ்.எம்.எஸ். அனுப்பினார்கள்.

நான் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர். நான் ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவள். கே. பாலசந்தர் தனது 'பொய்' படம் மூலம் என்னை அறிமுகப்படுத்தினார். எனக்கு அணையின் வரலாறு பற்றி எதுவும் தெரியாது. இயக்குனர் என்னிடம் கதை சொன்னபோது அதை படமாகத் தான் பார்த்தேன். தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் எண்ணமே எனக்கு இல்லை," என்றார்.

ரஜினி ஜோடி அனுஷ்கா?




Rajini and Anushka
கோச்சடையான் படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்தே, ரஜினியின் ஜோடி யார் என்ற பேச்சும் கிளம்பிவிட்டது.

இந்தப் படத்தில் அனுஷ்கா ஜோடியாக நடிப்பார் என்கிறார்கள்.

கோச்சடையான் கி.பி. 735-ல் வாழ்ந்த பாண்டிய மன்னன் ஆவான். வீரதீரம் நிறைந்த அவனது வரலாற்றை அடிப்படையாக வைத்து இப்படம் தயாராவதாகக் கூறப்படுகிறது.

உலகிலேயே அதிக வசூல் குவித்த அவதார் மற்றும் டின் டின் படங்களின் அதி நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி எடுக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ஷன் மேற்பார்வையை கே.எஸ். ரவிக்குமார் கவனிக்கிறார்.

ரஜினி மகள் சவுந்தர்யா இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இப்படத்துக்கு இதர நடிகர், நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. கதாநாயகியாக நடிக்க அனுஷ்கா, அசின், வித்யாபாலன் ஆகியோர் பரிசீலிக்கப்படுகின்றனர்.

அனுஷ்காவுக்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அனுஷ்கா தற்போது விக்ரம் ஜோடியாக தாண்டவம் படத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே இவர் ராணா படத்துக்கு கால்ஷீட் தரத் தயாராக இருந்தார். ஆனால் அந்த நேரத்தில்தான் படப்பிடிப்பு தள்ளிப் போனது.

சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேனா? - நமீதா விளக்கம்



Namitha
சினிமாவிலிருந்து விலகிவிட்டதாகவும் கட்டுமானத் தொழிலில் முழு கவனம் செலுத்துவதாகவும் வந்த செய்திகளை மறுத்துள்ளார் நடிகை நமீதா.

நடிகை நமீதா குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர். 2002-ல் சினிமாவில் அறிமுகமானார். விஜயகாந்த் ஜோடியாக நடித்த முதல் தமிழ் படம் எங்கள் அண்ணா சூப்பர் ஹிட்டானது.

தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் நடித்தார். நமீதா நடிப்பில் கடைசியாக கடந்த வருடம் 'இளைஞன்' படம் ரிலீசானது. அதன் பிறகு படங்கள் இல்லை. தற்போது மும்பையில் கட்டுமான நிறுவனம் தொடங்கி அபார்ட்மெண்ட் வீடுகள் கட்டி கொடுத்து வருகிறார்.

கட்டுமான நிறுவன தொழில் அதிபர் ஆனதால் சினிமாவுக்கு முழுக்குப் போட்டு விட்டதாக செய்தி பரவியது. இதுபற்றி கேட்டபோது, நமீதா மறுத்தார். அவர் கூறுகையில், "சினிமாவை விட்டு நான் விலக வில்லை. மும்பையில் கட்டுமான நிறுவனம் தொடங்கி இருப்பது உண்மைதான். அதற்கு நான் உரிமையாளர் மற்றபடி தொழிலை கவனித்துக் கொள்ள நிறைய பேரை நியமித்துள்ளேன்.

நான் சில நாட்கள் மும்பையில் தங்கி தீவிர உடற்பயிற்சி மூலம் எனது உடம்பை குறைத்தேன். இப்போது நிரந்தரமாக சென்னைக்கு குடி வந்துவிட்டேன்.

மங்கை அரிராஜன் இயக்கும் படமொன்றில் நடிக்கிறேன். என்.கே. விஸ்நாதனனின் 'ஓடி விளையாடு பாப்பா' என்ற 'ரீமேக்' படத்திலும் நடிக்கிறேன்.

இது தவிர தெலுங்கு படமொன்றுக்கும் ஒப்பந்தமாகியுள்ளேன். அப்படத்தில் முழுக்க சேலை கட்டி நடிக்கிறேன். நல்ல கதைகளுக்காக காத்து இருக்கிறேன். அப்படி கதைகள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன்," என்றார்.

சுல்தான் தி வாரியர் வேறு; கோச்சடையான் வேறு! - கே எஸ் ரவிக்குமார்




Rajini and KS Ravikumar
கோச்சடையான் படம் புதிய கதை, புதிய தொழில்நுட்பத்துடன் உருவாகிறது. சுல்தான் படத்துக்கும் கோச்சடையானுக்கும் தொடர்பில்லை என்றார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் சுல்தான் - தி வாரியர் என்ற படத்தை தயாரித்து இயக்குவதாக அறிவித்தார் சௌந்தர்யா ரஜினி. அனிமேஷன் தொழில் நுட்பத்தில் அந்தப் படத்தை உருவாக்கினார். இடையில் ரஜினி எந்திரனில் நடிக்கத் தொடங்கியதால், அந்தப் படம் நிறுத்தப்பட்டது.

எந்திரன் வெளியான பிறகு சுல்தான் வரும் என்றார்கள். ஆனால் பல்வேறு தடைகளால் சுல்தான் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்ட நிலையில் ராணா படத்தை அறிவித்தார் ரஜினி.

ராணா தொடங்கிய ஏப்ரல் 29-ம் தேதியன்றே, ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதன் பிறகு நடந்ததெல்லாம் ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

சிங்கப்பூரிலிருந்து சிகிச்சை முடிந்து வந்த ரஜினி, ராணா படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பிப்பார் என்று கூறப்பட்டது. இதோ அதோ என பல தேதிகளை பத்திரிகைகள் ஹேஷ்யங்களாக வெளியிட்டு வந்தன. ஆனால் ரஜினி தரப்பில் இதுகுறித்து எதுவும் சொல்லப்பட வில்லை. வரும் ஜனவரியில் இதுகுறித்து சொல்வதாக கூறியிருந்தனர். ரஜினியும் இதை பின்னர் உறுதி செய்தார்.

இந்த நிலையில், திடீரென ரஜினியின் புதிய படம் கோச்சடையான் அறிவிக்கப்பட்டது.

இந்தப் படம் அனிமேஷனாகக் கூட இல்லாமல், ஜோம்ஸ் கேமரூனின் அவதார், ஸ்பீல்பெர்கின் டின் டின் படங்களைப் போல மோஷன் கேப்சரிங் உத்தியில் படமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க 3 டி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியானால் இந்தப் படம் முன்பு கைவிடப்பட்டதாக கூறப்பட்ட சுல்தானா என்று கேட்டபோது, இந்தப் படத்தின் இயக்குநர் மேற்பார்வை பொறுப்பை ஏற்றுள்ள ரவிக்குமார் கூறுகையில், "சுல்தான்தான் ராணா என்று முன்பு சொன்னார்கள். இரண்டு வேறு வேறு என்று முன்பு நான் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன், சுல்தானுக்கும் கோச்சடையானுக்கும் சம்பந்தமில்லை. கோச்சடையான் முற்றிலும் புதிய கதை, புதிய திரைக்கதை.

ரஜினி சார்தான் இதில் நடிக்கிறார். இதில் ஒரு ஹைடெக் செட்டுக்குள் அவர் நடிக்கும் காட்சிகளை படமாக்கி, அவற்றை மோஷன் கேப்சரிங் உத்தியில் மாற்றுகிறோம். அவ்வளவுதான். மற்றபடி, இது முழுக்க முழுக்க ரஜினி படம்.

ராணா ஒரு ஹெவியான படம். அதற்கு முன் இந்தப் படத்தில் நடிப்பது ரஜினிக்கு ஒரு ரிலாக்ஸான அதேநேரம் சுமையற்றதாக இருக்கும். அதனால்தான் இந்த முடிவு. ராணா நிச்சயம் 2012-ல் தொடங்கும்," என்றார்.

கோச்சடையான் தொடங்க ரஜினியின் உடல்நலம் காரணமல்ல!! - சௌந்தர்யா




Soundarya Rajini
சென்னை: ராணாவை நிறுத்திவிட்டு கோச்சடையானை ஆரம்பிக்க, ரஜினியின் உடல்நிலை காரணமல்ல. அவர் நலமுடன் இருக்கிறார். இந்தப் படத்திலும் முழுமையாக அவர்தான் நடிக்கப் போகிறார், என சௌந்தர்யா ரஜினி விளக்கம் அளித்துள்ளார்.

கோச்சடையான் என்ற புதிய படத்தை ரஜினி அறிவித்ததிலிருந்து அது தொடர்பாக பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சௌந்தர்யா கூறுகையில், "தென்கிழக்கு ஆசியாவில் மோஷன் கேப்சரிங் என்ற தொழில்நுட்பத்தில் ஒரு நடிகருக்கு படம் தயாராவது அப்பாவுக்குதான் (ரஜினி). கோச்சடையான் என்பது சிவபெருமானின் பெயர். இந்தப் படம் சுல்தான் அல்ல. இது முற்றிலும் புதிய படம்.

அதேநேரம் ராணா படத்தை நிறுத்தவில்லை. தள்ளி வைத்திருக்கிறோம். நிச்சயம் ஆகஸ்ட் 2012-ல் தொடங்கிவிடும்.

கோச்சடையான் வெறும் அனிமேஷன் படம் அல்ல. இந்தப் படத்தில் முழுமையாக அப்பா நடிக்கிறார். அவரது காட்சிகள் ஒரு ஸ்டுடியோவுக்குள் படமாக்கப்பட்டு, மோஷன் கேப்சரிங் முறையில் மாற்றப்படும். உடல்ரீதியாக அவர் மிகவும் ஃபிட்டாக இருக்கிறார். கோச்சடையான் தொடங்க அவர் உடல்நலம் காரணமல்ல. இந்தப் படத்தில் நடிக்க அப்பாவே விரும்பி, ஆரம்பிக்கச் சொன்னார்.

பிற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும்," என்றார்.

ட்விட்டர், பேஸ்புக்கில் போலி கணக்கு: சைபர் கிரைம் போலீசில் நயன்தாரா புகார்!




Nayanthara
ட்விட்டர் மற்றும் பேஸ்புக் சமூகத் தளங்களில் தன் பெயரில் போலியாக கணக்கு தொடங்கி ரசிகர்களுடன் உரையாடி வரும் நபர்கள் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார் நடிகை நயன்தாரா.

டுவிட்டர், பேஸ் புக்கில் தனது பெயரில் மோசடி நடப்பதாக நடிகை நயன்தாரா குற்றம் சாட்டி இருந்தார். அடையாளம் தெரியாத சிலர், நயன்தாரா பெயரில் இவற்றை உருவாக்கி ரசிகர்களுடன் தொடர்பு வைத்து இருந்தனர். அதை உண்மை என நம்பி நிறைய பேர் நயன்தாராவுக்கு வாழ்த்துக்களும், அவர் நடித்த படங்கள் பற்றிய விமர்சனங்களும் அனுப்பி வைத்தனர்.

அத்துடன் முல்லைப் பெரியாறு அணை உடைவது போன்று எடுக்கப்பட்ட `டேம் 999' படத்துக்கு நயன்தாரா ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்து இருப்பது போன்ற செய்தியும் அதில் இடம் பெற்று இருந்தது.

இது குறித்து நயன்தாரா, கவனத்துக்கு கொண்டு சென்றதும் அதிர்ச்சியானார். நான் டுவிட்டரிலோ பேஸ் புக்கிலோ இல்லை. போலியாக அவை உருவாக்கப்பட்டு உள்ளது. அவற்றை சம்பந்தப்பட்டவர்கள் நீக்க வேண்டும் என்று நேற்று அறிவித்தார்.

ஆனால் அப்படியும் அவர் பெயரில் அந்த தளங்களில் பக்கங்கள் தொடர்ந்து இயங்கின.

இதையடுத்து அவர் சைபர் க்ரைம் போலீஸ் உதவியை நாடியுள்ளார். இதுகுறித்து நயன்தாரா கூறுகையில், "நடிகை என்பதால் டுவிட்டரில் என் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது நான் இல்லை என்று தெளிவுப்படுத்தி விட்டேன். போலியாக உருவாக்கப்பட்ட எனது பெயரை ட்விட்டரில் இருந்து நீக்கி விடும்படி சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் அது நடக்கவில்லை. எனவே சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளேன்," என்றார்.

அன்புக்கு ஒன்று... ஆசைக்கு ஓன்று! - தன்ஷிகாவுக்கு கிளி சொன்ன ஜோசியம்




Dhansika
தனக்கு வரும் கணவர் அன்புக்கு ஒன்றும் ஆசைக்கு ஒன்றும் என இரண்டு மனைவிகள் கொண்டவராக இருப்பார் என கிளி ஜோசியம் சொன்னதால், ஷாக் ஆனார் நடிகை தன்ஷிகா.

பாலிமர் டிவியில் ஞாயிறுதோறும் ஒன்பது மணியளவில் ஒளிபரப்பாகி வரும் சம்திங் சம்திங் வித் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் "பேராண்மை'' மற்றும் ''அரவான்'' படங்களின் நாயகி தன்ஷிகா கலந்துகொண்ட சிறப்பு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக உள்ளது.

'அயன்' ஜெகன் தொகுப்பாளராக இருந்து நடிகை தன்ஷிகாவோடு மிகவும் மாறுபட்ட முறையில் சுவாரஸ்யமாக கலந்துரையாடிய இந்த நிகழ்ச்சி படமாக்கப்பட்டபோது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது.

நிகழ்ச்சியின் ஒரு அம்சமான கிளி ஜோசியத்தில் தன்ஷிகா என் வருங்காலக் கணவர் எப்படி இருப்பார்? எப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவராக இருப்பார் என்று கேட்டார்.

அதற்கு கிளி எடுத்துக் கொடுத்த சீட்டை வைத்து ஜோசியர், "உங்கள் கணவர் அன்புக்கு ஒன்றும் ஆசைக்கு ஒன்றும் வச்சிருப்பார் என்று பதிலளித்தார்."

உடனே பதறிய தன்ஷிகா, "அய்யய்யோ எனக்கு அப்படிப்பட்ட கணவரே வேண்டாம்... என் கணவர் எனக்காக மட்டுமே வாழும் அன்புகொண்டவராக அவர் இருக்கவேண்டும்," என்றார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர்களோடுஆடிப்பாடி நிகழ்ச்சியை கலகலப்பூட்டிய நடிகை தன்ஷிகா தனது நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் 'அரவான்' படம் பற்றிய வெளிவராத தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

இந்த சுவாரசியமான நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை பாலிமர் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது!

Wednesday, November 23, 2011

கோவணத்தோடு 200 பேர் குஷ்பு வீட்டுக்கு வந்தால் வரவேற்பாரா?-இந்து மக்கள் கட்சி கேள்வி!



Kushboo

சென்னை: நமீதா குட்டைப்பாவாடை அணிவதை விரும்புவார். இதைப் போய் பிரச்சினையாக்குவதா என்று கேட்டுள்ளார் நடிகை குஷ்பு.அப்படியானால் அவரது வீட்டுக்கு கோவணம் அணிந்தபடி 200 பேர் வந்தால் அவர்களை அவர் சந்திப்பாரா, வரவேற்பாரா அல்லது பேசத்தான் செய்வாரா என்று இந்து மக்கள் கட்சி கேட்டுள்ளது.

சினிமா நடிகைகள் பலர் படு கவர்ச்சியாக உடை அணிந்தும், குட்டைப் பாவாடை அணிந்தும் பொது நிகழ்ச்சிகளுக்கு வருவது சமீப காலமாக சர்ச்சையாகியுள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது முதல்வராக இருந்த கருணாநிதி முன்பு, நடிகை ஷ்ரேயா படு கவர்ச்சிகரமாக டிரஸ் போட்டு வந்து அனைவரையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தினார்.

இந்த நலையில் நமீதா அணியும் கவர்ச்சி ஆடைகளும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. இதுகுறித்து 'கருத்து புகழ்' குஷ்பு கருத்து தெரிவிக்கையில், 

நமீதாவை எனக்கு ரொம்ப காலமாகவே தெரியும். அவர் குட்டை பாவாடை அணிவதை எப்போதும் விரும்புவார். அதோடு கூடவே ஒரு துண்டையும் எடுத்துச் செல்வார்.

ஒருத்தர் அணியும் ஆடை என்பது அவரது தனிப்பட்ட வசதியையும் விருப்பத்தையும் பொருத்தது. மற்றவர்கள் உத்தரவு போட முடியாது. சினிமாவில் இருப்பவர்கள் யாரும் இதை எதிர்க்கவில்லை. வெளியில் உள்ள சில சுயநல சக்திகள் இரண்டு நிமிட புகழுக்காக எதிர்ப்பு காட்டுகின்றன என்று கூறியிருந்தார்.

இதற்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செயலாளர் பி.ஆர்.குமார் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழகம், கலாசாரம் பண்பாட்டுக்கு முன்னோடியான மாநிலம், அதனால் தான் கற்புக்கரசியான கண்ணகிக்கு சிலை வைத்துள்ளோம். குஷ்பு சொல்வது போல் இரண்டு நிமிட புகழுக்காக குட்டை பாவாடை அணியும் நடிகைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. சினிமாவில் அதுபோல் அணியலாம். பொதுவிழாக்களுக்கு அதுபோல் வரக்கூடாது என்கிறோம்.

கிராமத்தில் விவசாய வலி தொழிலாளர்கள் பலர் கோவணம் கட்டிக் கொண்டு வேலை பார்க்கின்றனர். அதுபோல் கோவணம் அணிந்து கொண்டு 200 பேர் குஷ்பு வீட்டுக்கு வந்தால் அவர்களை குஷ்பு சந்திப்பாரா? அல்லது பேசத்தான் செய்வாரா?

அதுபோலத்தான் நடிகைகள் கவர்ச்சி ஆடையில் பொது விழாக்களில் பங்கேற்பதை நாங்கள் பார்க்கிறோம். அதை எதிர்க்கிறோம். அத்தகு நடிகைகளுக்கு வக்காலத்து வாங்கி எங்களை எதிர்ப்பதை குஷ்பு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

கையப் புடிச்சி இழுத்தியா...' ஸ்டைலில் மழுப்பும் சினேகன் - ஜமுனா கலாதேவி



Snehan
சென்னை: சினேகன், ஜமுனா கலாதேவி கள்ளத் தொடர்பு புகார் குறித்த விசாரணையில் இருவருமே சரியான பதில் சொல்லாததால், கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் வருமாறு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. புகார் கொடுத்த பிரபாகரனையும் கூப்பிட்டுள்ளனர் போலீசார்.

நடிகரும், பாடல் ஆசிரியருமான சினேகன் மீது மடிப்பாக்கம் என்ஜினீயர் பிரபாகரன் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்த புகார் மனுவில், நடன கலைஞரான தனது மனைவி ஜமுனா கலாதேவியையும், தனது 5 வயது பெண் குழந்தையையும், நடிகர் சினேகன் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்றும், அவர்கள் இருவரையும் மீட்டு தன்னோடு வாழ வைக்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

சினேகனும் ஜமுனாவும் 'ஒன்றாக இருந்ததை' தான் நேரில் பார்த்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

பிரபாகரனின் இந்த புகாருக்கு நடிகர் சினேகன் மறுப்பு தெரிவித்தார். ஜமுனா கலாதேவியை, பிரபாகரனின் விருப்பத்தோடு தான் நடித்துள்ள 'உயர்திரு 420' என்ற படத்தில் நடன உதவி இயக்குனராக ஒருநாள் மட்டும் பயன்படுத்தியதாகவும், அதன்பிறகு பிரபாகரன் சந்தேகப்பட்டதால் ஜமுனா கலாதேவியை நடன உதவி இயக்குனராக பணியாற்ற அனுமதிக்கவில்லை என்றும், ஜமுனா கலாதேவியை தான் கடத்தவில்லை என்றும் சினேகன் கூறினார்.

இந்த பிரச்சினையில் பிரபாகரனுக்கும், ஜமுனா கலாதேவிக்கும் இடையே ஒரு சுமுக தீர்வை ஏற்படுத்துவதற்காக பெண் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் மூலம் கவுன்சிலிங் முறையில் விசாரணை நடத்தப்படும் என்றும், ஜமுனா கலாதேவி மீதும், சினேகன் மீதும் கொடுக்கப்பட்டுள்ள புகார் உண்மையானதா? என்பது பற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்திருந்தனர்.

பிரபாகரன் மீது குற்றச்சாட்டு

இந்த நிலையில், போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரிகள், ஜமுனா கலாதேவியிடம் நேற்று முன்தினம் செல்போனில் பேசி விளக்கம் கேட்டனர். அதற்கு ஜமுனா கலாதேவி, பிரபாகரன் மீது குற்றம்சாட்டினார்.

"எந்தவித வேலையும் செய்யாமல், என்னுடைய சம்பாத்தியத்தில் வாழ்ந்து வந்தார் பிரபாகரன். அவரது சந்தேக குணத்தால் அவரோடு வாழமுடியாது என்று முடிவு எடுத்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினேன். இந்த நிலையில், தன்னை அவமானப்படுத்தும் நோக்கத்தில் பிரபாகரன் பொய் புகார் கொடுத்துள்ளார்," என்று ஜமுனா கலாதேவி கூறினார்.

சினேகனிடம் விசாரித்தபோது அவர் இந்தப் பிரச்சினையில் சம்பந்தமே இல்லாததுபோல பதில் அளித்தாராம்.

இதில் சினேகன், ஜமுனா, பிரபாகரன் மூவருமே உண்மையை மறைப்பதாக போலீசார் கருதுவதால், மூவரையும் கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

நடன இயக்குநர்கள் சங்கம் மறுப்பு அறிக்கை

இந்த நிலையில், சினிமா- டி.வி. நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுந்தர பிரேம்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "ஜமுனா கலாதேவி எங்கள் சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்யவில்லை. அவர் 'உயர்திரு 420' படத்திலும் நடன இயக்குனராக பணியாற்றவில்லை.

நடன இயக்குனராக பணியாற்ற வேண்டுமென்றால் பிரபல நடன இயக்குனர் ஒருவரிடம் 10 ஆண்டுகள் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்க வேண்டும். மேலும் எங்கள் சங்கத்திலும் உறுப்பினராக பதிவு செய்திருக்க வேண்டும். ஜமுனா கலாதேவி எங்கள் சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்யவில்லை. மேலும் அவர் சினிமா நடன இயக்குனராகவும் 'உயர்திரு 420' படத்தில் பணியாற்றவில்லை என்பதையும், இந்த அறிக்கை மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்," என்று கூறியுள்ளார்.

'கொஞ்சம் ஓவராத்தான் போய்க்கிட்டிருக்கு' ஜெய்- அஞ்சலி அக்கப்போர்!



Anjali and Jai
வடிவேலு பாணியில் சொன்னால், 'கொஞ்சம் ஓவராத்தான் போய்க்கிட்டிருக்கு' ஜெய்- அஞ்சலி அக்கப்போர்.

ஏழாம் அறிவு இசை வெளியீட்டுவிழாவில், தனக்கும் ஜெய்க்கும் இடையில் 'ஏதோ இருப்பதாக' வாக்குமூலம் கொடுத்து பப்ளிசிட்டி பண்ணியவர்தான் அஞ்சலி. இதை வைத்து இருவருக்கும் காதல் என்று செய்திகள் வரத் தொடங்கின.

இப்போது தனக்கும் 'அந்த நடிகரு'க்கும் (ஜெய்க்கும்) காதல் இல்லை, 'அந்த நடிகரு'டன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று அறிக்கை விட்டார். என்னமோ ஜெய் என்ற நடிகரையே தெரியாது என்ற அளவுக்கு இருந்தது அஞ்சலியின் அறிக்கை.

சும்மா இருப்பாரா 'அந்த நடிகர்'... இப்போது அவரும் பதிலுக்கு அறிக்கை விட்டிருக்கிறார்.

"நடிகை அஞ்சலியுடன் எனக்கு காதல் இல்லை. அதே நேரம் நான் நிச்சயமாக ஒரு நடிகையை திருமணம் செய்துகொள்ள மாட்டேன்'' என்று ஜெய் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், "நானும், அஞ்சலியும் `எங்கேயும் எப்போதும்' படத்தில்தான் முதல்முதலாக ஜோடி சேர்ந்து நடித்தோம். அதன்பிறகு, '7-ஆம் அறிவு' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்தான் அவரை சந்தித்தேன்.

இடையில், நாங்கள் வேறு எங்கும் சந்தித்துக்கொள்ளவில்லை. வேறு எந்த படத்திலும் சேர்ந்து நடிக்கவில்லை. எங்களுக்குள் காதல் இல்லை.

நிச்சயம் நடிகையை மணக்கமாட்டேன்

நான், நிச்சயமாக காதல் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். அதுவும் குறிப்பாக, ஒரு நடிகையை திருமணம் செய்துகொள்ள மாட்டேன். என் குடும்பத்தினர் பார்க்கும் பெண்ணை சந்தோஷமாக திருமணம் செய்து கொள்வேன்.

என் கவனம் எல்லாம் என் தொழிலில்தான் இருக்கிறது. ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளேன். என் கவனம், அந்த படத்தின் மீதுதான்!,'' என்று ஜெய் கூறியுள்ளார்.

நம்பிட்டோம் ராசா!

Tuesday, November 22, 2011

Vijay-Murugadoss movie titled Thuppaki

Vijay Murugadoss movie titled Thuppaki
The much awaited Vijay- Murugadoss has now been officially named Thuppaki(Gun in English) .The flick was tentatively titled Maalai Neram Mazhaithul, with Murugadoss himself announcing the new title – ‘Thuppaki’ to the media just a few hours back. This forthcoming Vijay flick is a 65 crore big budget offering, that will go on floors on November 23rd.

 
We had already reveled the news of controversial lady Kajal Aggarwal bagging this fresh new Vijay-Murugadoss offering with her other big flick being Surya-KV Anand  starrer Maatraan.  Fresh from the success of 7aam Arivu, Director Murugadoss plans to shoot most of the movie in the suburbs of Mumbai and some portions will be captured in Thiruchendur itself. Thuppaki will be produced by Vijay’s Dad S.A.Chandrasekaran and has an impressive team with the camera angles being adjusted by lensman Santhosh Sivan and composer Hariss Jayaraj providing the jingling tunes.
Ilayathalapathy fans ready yaaa ?

Rajinikanth refuses Sharukh Khan’s BMW 7 Series Gift

Rajinikanth refuses Sharukh Khan's BMW
Earlier we reported, Bollywood hero Sharukh Khan was planning to gift brand new BMW 7 series car to our own Superstar for making his special appearance as Chitti in Shahrukh Khan’s recent release Ra One.
However, the latest buzz is that Rajini,who is well known for his simplicity has politely turned down SRK’s present. The Superstar is said to have told SRK that he does not have the habit of using such luxurious vehicles and never uses them. Shahrukh is said to have bowled over by Rajini’s simplicity.
Even still the Superstar reserves the white fiat car, which he bought at the beginning of his career and always wishes to travel in his white coloured ambassador.

This shows an example of Rajini’s simplicity and down to earth nature. Rajini is a person who never forgets his roots even after reaching heights.
Kudos Rajini!!