Wednesday, December 7, 2011

அமிதாப்பைக் கவர்ந்த கொலவெறி-தனுஷுக்குப் பாராட்டு



Dhanush and Abhishek Bachchan
மும்பையில் இந்தி நடிகர் அமிதாபச்சனை சந்தித்த தனுஷை, கொலவெறி பாடலுக்கான வாழ்த்துகளை பெற்று கொண்டார்.

3 படத்தில் தனுஷ் சொந்தமாக பாடல் எழுதி பாடியுள்ள கொலவெறிப் பாட்டுதான் இப்போது தமிழ் கூறும் நல்லுலகை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரை ரசிகர்களையும் ஆட்டிப்பைத்து வருகிறது. பாடல் மெகா ஹிட்டானதால் தனுஷ் புகழ் மழையில் நனைந்து வருகிறார். தனுஷின் கொலவெறி பாடலை கேட்ட அமிதாப், தனது டுவிட்டர் தளத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார்.

தனுஷின் மாமனாரும் தமிழ் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த்தும், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாபச்சனும் நெருங்கிய நண்பர்கள். இந்த நிலையில் மும்பை சென்ற தனுஷ், அமிதாப்பச்சனை நேரில் சந்தித்து பேசினார். இதற்காக தனது மகன் அபிஷேக்கை மும்பையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த தனுஷை அழைத்து வர அனுப்பினார் அமிதாப். இதைக் கண்டு சிலித்துப் போய் விட்டாராம் தனுஷ்.

அபிஷேக்பச்சனின் காரில் அவரது வீட்டுக்கு தனுஷ் சென்றார். அப்போது வீட்டு வாசலில் காத்திருந்த அமிதாப்பச்சன், அவரை வீட்டிற்குள் வரவேற்றார். அதன்பிறகு தனுஷுடன் அமிதாப்பச்சன் நீண்டநேரம் பேசினார். அப்போது கொலவெறி பாடல் குறித்து அமிதாப் பச்சன் பாராட்டினார்.

அந்த சந்திப்புக்கு பிறகு அபிஷேக்பச்சனுடன் மிஷன்இம்பாசிபிள் ஆங்கில படத்தின் சிறப்பு காட்சியை காண தனுஷ் தியோட்டருக்கு புறப்பட்டு சென்றார்.