Tuesday, December 6, 2011

பூர்விகா செல்போன் கடையிடம் ரூ.20 லட்சம் கேட்டு அஞ்சலி நீதிமன்றத்தில் புகார்



Anjali
பூர்விகா செல்போன் கடை விளம்பரத்தில் நடித்ததற்காக தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை கொடுக்காமல் இழுத்தடிப்பதற்காக அந்த கடை உரிமையாளரிடம் இருந்து ரூ.20 லட்சத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்று நடிகை அஞ்சலி நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

நடிகை அஞச்லி நடிக்க வந்த புதிதில் பூர்விகா செல்போன் கடை விளம்பரத்தில் நடித்தார். அதற்காக ரூ.5 லட்சம் சம்பளம் பேசிய கடைக்காரர்கள் வெறும் ரூ.46,000 மட்டும் தான் கொடுத்துள்ளனர். மீதிப் பணத்தைக் கேட்டதற்கு இந்தா, அந்தா என்று 5 ஆண்டுகளாக இழுத்தடிக்கின்றனர்.

சம்பள பாக்கியைக் கொடுக்காவிட்டாலும் கடந்த 5 ஆண்டுகளாக அஞ்சலி நடித்த அந்த விளம்பரத்தை பூர்விகா கடை பயன்படுத்தி வருகிறது. பொறுத்துப் பொறு்ததுப் பார்த்த அஞ்சலி இறுதியாக நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

தனக்கு சம்பள பாக்கியையும் கொடுக்காமல் கடந்த 5 ஆண்டுகளாக தான் நடித்த விளம்பரத்தைப் பயன்படுத்துவதற்காக அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் பெற்றுத் தருமாறு அஞ்சலி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

பூர்விகாவின் அனைத்துக் கிளைகளிலும் அஞ்சலியின் புன்னகை நிறைந்த படம் உள்ளது. ஆனால் அதற்கு சிரித்தவாறு போஸ் கொடுத்தவருக்கு சம்பளத்தை கொடுக்காமல் அவரை கடுப்பேற்றியுள்ளனர்.