Thursday, December 20, 2012

கும்கி - விமர்சனம்


 Kumki Review

ஒரு மெகா கொம்பன் யானை, அதை சமாளிக்க ஒரு டூப்ளிகேட் கும்கி யானை, இரு ஒரிஜினல் காதலர்கள்.... நெஞ்சை அள்ளும் அருவியும் அழகிய மலைச் சாரலும் பின்னணியாக... படிக்கும்போதே இதமாக இருக்கிறதல்லவா... பார்க்கும்போதும் சில காட்சிகள் அப்படித்தான் உள்ளன. ஆனால்...? மீதியையும் படிச்சு முடிங்க! ஆதிக்காடு...
 
 
 அற்புதமாக வளங்கள் நிறைந்த மழைக் காடு. வெளிக் காற்று படாமல் தாங்களுண்டு தங்கள் காடுண்டு என்று அமைதியாய் வாழும் மக்கள். ஆனால் அறுவடை நெருங்கும்போதெல்லாம் கொம்பனின் அட்டகாசம் தாங்காது. கொம்பன்? அந்த மலையை அடிக்கடி அதகளப்படுத்தும் காட்டு யானை. இந்தத் தொல்லையிலிருந்து தப்பிக்க, ஒரு கும்கி யானையை வரவழைத்து கொம்பனை விரட்டலாம் என முடிவு செய்கிறார்கள் ஊர்க்காரர்கள். சந்தர்ப்ப சூழல் காரணமாக, மாணிக்கம் என்ற டூப்ளிகேட் கும்கி, அதன் பாகன் விக்ரம் பிரபுவுடன் ஊருக்குள் நுழைகிறது. தங்களை காக்க வந்த தெய்வமாய் ஊர்மக்கள் அவர்களை வணங்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் வந்த இடத்தில் விக்ரம் பிரபுவுக்கும் ஊர்த் தலைவர் மகள் லட்சுமி மேனனுக்கும் காதல் அரும்புகிறது. 
 
காதல் வெளியில் தெரிந்தால் ஊரே ஒன்று சேர்ந்து கொன்றுவிடும். இந்த யானை ஒரிஜினல் கும்கி இல்லை... கோயில் யானை என்பது தெரிந்தாலும் நிலைமை அதேதான். இந்த சூழலை எப்படி சமாளிக்கிறான் ஹீரோ, கொம்பனை எப்படி விரட்டியடிக்கிறது மாணிக்கம் என்பதெல்லாம் க்ளைமாக்ஸில். கதை என்று பிரதானமாக எதுவும் இல்லை. ஆனால் அந்த சூழல் கதையை உருவாக்கியிருக்கிறது. காட்சியமைப்பில்தான் இன்னும் சிரத்தை காட்டாமல், யானை மற்றும் காட்டருவிகளின் பிரமாண்டத்திலேயே மயங்கிப் போய்விட்டார் இயக்குநர். விக்ரம் பிரபுவுக்கு இது முதல் படம். அந்தத் தடுமாற்றம் கொஞ்சம் தெரிந்தாலும், பல காட்சிகளில் சிவாஜி குடும்ப வாரிசு என்ற அடையாளம் மறைந்து, பொம்மனாகவே அவர் தெரிவதை மறுப்பதற்கில்லை. லட்சுமி மேனன் ஒரு மலைகிராமப் பெண்ணாகவே மாறியிருக்கிறார். அந்தக் கண்கள், உதடுகள் ஏக இம்சை செய்கின்றன! தம்பி ராமையாவும் அவருக்கு எடுபிடியாக வரும் அந்த தம்பியும் இல்லாமல் போயிருந்தால் ரொம்ப 'ராவாக' இருந்திருக்கும் இந்தப் படம். ஜோ மல்லூரி, ஜூனியர் பாலையா, அந்த பாரஸ்ட் ரேஞ்சர்கள், மாணிக்கம் யானை... 
 
குறையில்லாத நடிப்பு. க்ளைமாக்ஸில் வந்து அந்த யானை சண்டைக் காட்சியில் கிராபிக்ஸை இன்னும் பக்காவாக செய்திருக்கலாம். எளிதில் அவை கிராபிக்ஸ் என்று தெரிந்துவிடுவதால், ஒரு முழுமை கிடைக்காமல் போகிறது படத்துக்கு. படத்தின் நிஜமான ஹீரோ ஒளிப்பதிவாளர் எம் சுகுமார். பிரமாதம் என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமும் அந்த அருவி காட்சிதான். ஆதிக்காடு கிராமத்தை பார்த்த பிறகு, அந்த மலை கிராமம் எங்கே என்று பலரும் சுகுமாரை கேட்டுத் துளைக்கக் கூடும். இமானின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும்படி உள்ளன. பழைய பாடல்கள் அல்லது ட்யூன்களை நினைவூட்டினாலும் பின்னணி இசையும் ஓகே. படம் ஆரம்பித்ததிலிருந்து பெரிதாய் எதையோ எதிர்ப்பார்க்க வைத்துக் கொண்டே இருக்கிறார் இயக்குநர். விளைவு, க்ளாமாக்ஸ் நெருங்கும்போதுகூட, ஏதாவது ஒரு அதிர்வை எதிர்நோக்குகிறது மனசு. ஆனால் டைட்டில் ஓட ஆரம்பித்துவிட, அபாரமான ஏமாற்றத்தோடு சீட்டைவிட்டு எழுந்திருக்க வேண்டியதாகிறது. அங்குதான் சறுக்கிவிட்டது கும்கி!
Soruces: oneindia

நீதானே என் பொன்வசந்தம்...

நீதானே என் பொன்வசந்தம்... இந்த ஆண்டு முழுவதும் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட படம். இளையராஜாவின் இனிய இசை வேறு எக்கச்சக்க எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனால்...? ஜீவாவும் சமந்தாவும் குட்டியூண்டு இருக்கும்போதே ஆரம்பித்துவிடுகிறது நட்பும் சண்டையும். அந்த நட்பை 10ம் வகுப்பு படிக்கும்போது மீண்டும் புதுப்பிக்கிறார்கள். ப்ளஸ் டூவில் மீண்டும் பிரிகிறார்கள்.
 
 காரணம் பொஸஸிவ்னஸ்.. ஈகோ. ஒரு இடைவெளிக்குப் பிறகு கல்லூரி கலை நிகழ்ச்சியில் சந்திக்கிறார்கள். காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்தக் காதலுடன் கூடவே வருகிறது இருவரின் ஈகோவும். ஒரு கட்டத்தில் இனி பிரிவே நிரந்தரம் என்று தனித்தனி திசையில் போகிறார்கள். ஜீவாவுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்து, தாலிகட்டுவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன் மீண்டும் இருவரும் சந்திக்கிறார்கள்... இருவரும் இணைந்தார்களா என்பது க்ளைமாக்ஸ். neethane en ponvasantham review மேலும் படங்கள் நிறைய காட்சிகளை ஏற்கெனவே இதே கவுதம் மேனன் படத்தில் பார்த்த நினைவு படம் முழுக்க வந்துபோகிறது, க்ளைமாக்ஸ் தவிர. 
 
போதாக்குறைக்கு விண்ணைத்தாண்டி வருவாயாவை காமெடிக்காக உல்டா பண்ணியிருக்கிறார். படத்தின் உண்மையான ஹீரோ இசைஞானி இளையராஜாதான். படம் முழுக்க அவரது பாடல்களும் இசையும் நம்முடன் பயணிப்பதால், கவுதம் மேனன் ஜவ்வாய் இழுத்திருக்கும் காட்சிகளைக் கூட பொறுத்துக் கொள்ள முடிகிறது. சற்று முன்பு பார்த்த மேகம்... பாடலும் இசையும் அந்த சூழலும் நம்மை எங்கோ அழைத்துப் போகின்றன. இந்த இசையை, பாடல்களையும்கூட சிலர் விமர்சிக்கும்போது.. மணிவண்ணன் அடிக்கடி சொல்வது போல, 'என்னடா டேஸ்டு உங்க டேஸ்டு' என்றுதான் கேட்கத் தோன்றுகிறது! சமந்தா... சமீப ஆண்டுகளில் ஒரு நடிகைக்காக படம் பார்க்கலாம் என்று தோன்றியது அநேகமாக இவருக்காகத்தான் இருக்கும். அழகு, நடிப்பு என அனைத்திலும் அசத்துகிறார். ஜீவாவை பல காட்சிகளில் க்ளீன்போல்டாக்குகிறார். நண்பன் பட கேரக்டரின் நீட்சியாகவே படம் முழுக்க தெரிகிறார் ஜீவா. அவரது டல்லடிக்கும் மாடுலேஷன் சில பத்து கொட்டாவிகளுக்கு உத்தரவாதம். அதிலும் தவறையெல்லாம் இவர் செய்துவிட்டு, அதை சமந்தா மீது சுமத்துவது, 'நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே' என கமெண்ட் அடிக்க வைக்கிறது. அண்ணனுக்கு பெண் பார்க்கப் போய், அந்தஸ்து பிரச்சினையால் அவமானப்பட்டு வருகிறார் ஜீவாவின் அப்பா. அதன்பிறகு வரும் காட்சிகள் இருக்கிறதே... 'ஏன்டா இந்தப் படத்துக்கு வந்தே' என நம்மை நாமே கன்னத்தில் அடித்துக் கொள்ளலாம் போல அத்தனை நாடகத்தனம். ஜீவாவை விட, சில காட்சிகளில் மீசையில்லாமலும் சில காட்சிகளில் மீசையோடும் வரும் சந்தானம் பரவாயில்லை என்று சொல்ல வைக்கிறது. ஆனாலும் கல்லூரி மாணவராக அவரை ஏற்க முடியவில்லை. ஒளிப்பதிவாளர், எடிட்டர் இருவருமே மகா அசட்டையாக இருந்திருக்கிறார்கள் என்பது படம் முழுக்க தெரிகிறது.
 
ஆனால் இத்தனை குறைகள் இருந்தாலும், அந்த க்ளாமாக்ஸ் காட்சி, அனைத்தையும் மறக்கடிக்க வைத்துவிட்டதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். தாலி கட்ட 3 மணி நேரமே மிஞ்சியிருக்கும் ஒரு அதிகாலை... அழகிய (முன்னாள்) காதலி... நெஞ்சுக்குள் முட்டித் தவிக்கும் மோகத்தீ... தாங்கள் பழகிய, பாதம் பதித்த இடங்களை கடைசியாய் பார்த்துவர கிளம்புகிறார்கள்... அந்த இரண்டு மணி நேர காதல் தவிப்பை கவுதம் மேனன் படமாக்கியிருக்கும் விதம்... கொள்ளை அழகு. இந்த ரசனையை படம் முழுக்க காட்டியிருந்தால் நீதானே என் பொன்வசந்தத்தை காதலர்கள் கொண்டாடியிருப்பார்கள்!

Soruces : oneindia

கணவர் தற்கொலை; நித்யஸ்ரீ மகாதேவன் தற்கொலை முயற்சி

கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் இன்று சென்னை கோட்டூர்புரத்தில் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து, நித்யஸ்ரீயும் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். கணவர் தற்கொலை செய்து கொண்ட செய்தியை கேட்ட நித்யஸ்ரீ விஷத்தை குடித்துள்ளார். இதனை தொடர்ந்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Sources from http://www.dailythanthi.com/node/68808

Monday, December 3, 2012

சிம்புவுடன் ரூமுக்குள்ளிருந்து வந்தாரா லேகா வாஷிங்டன்??


Lekha Refutes Rumour On Her Links W
சென்னை: ஹோட்டல் அறையிலிருந்து சிம்புவுடன் ஒன்றாக வெளியே வந்தார் லேகா வாஷிங்டன்... இதுதான் லேட்டஸ்ட் வதந்தி. ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் லேகா.
லேகா வாஷிங்டன் அதிக அளவில் படங்களில் நடிப்பதில்லை. ரொம்ப செல்க்ட் செய்தே நடிக்கிறார். விளம்பர் படங்களில்தான் தற்போது அதிக அளவில் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் விரைவில் அவர் சிம்புவுடன் ஒரு படத்தில் இணைவதாக செய்திகள் வெளியாகின. மேலும் லேகா இயக்கும் குறும்படத்தில் சிம்புவும் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் கூறின.
அதை விட பரபரப்பானது, லேகாவும் சிம்புவும் ஒரு ஹோட்டலில் தங்கியதாகவும், அறைக்குள்ளிருந்து இருவரும் ஜோடியாக வெளியே வந்ததாகவும் வந்த கிசுகிசுதான். ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் லேகா.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது இயக்கத்தில் உருவாகும் குறும்படத்தில் சிம்பு நடிக்கப் போவதாக சமீபத்தில் ஒரு நியூஸ் வந்தது. அதேபோல நானும், சிம்புவும் ஹோட்டல் அறையிலிருந்து வெளியே வந்ததாகவும் இன்னொரு செய்தி வெளியானது. இரண்டுமே பொய்யானது, தவறானது.
நான் குறும்படம் எதுவும் இயக்கவில்லை. எந்த ஹோட்டல் அறையிலிருந்தும் சிம்புவுடன் நான் வெளியே வரவில்லை. இதை எனது இணைய தள பக்கத்திலும் தெளிவுபடுத்தி இருந்தேன்.
கெட்டவன் படத்தில் சிம்புவுடன் நடிப்பதாக இருந்தது. அந்த படம் நின்றுவிட்டது. அப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று நான் கூறவில்லை. இது பற்றி பத்திரிகைகளில் தவறாக செய்தி வந்தது. சிம்பு எனக்கு நண்பர். நேரில் பார்க்கும்போது பேசிக்கொள்வோம். அவ்வளவுதான் என்றார் லேகா.

Thursday, November 29, 2012

நூறு கோடியைத் தாண்டியதா துப்பாக்கி? கோடம்பாக்க ஜோசியர்களின் தப்புக் கணக்கு!!



சமீப நாட்களாக எந்த இணையதளம் அல்லது செய்தித் தாளைத் திறந்தாலும் துப்பாக்கி படத்தின் வசூல் கணக்குதான் பக்கத்துக்குப் பக்கம் விளம்பரமாகவோ, செய்தியாகவே வெளியாகிக் கொண்டிருக்கிறது.
thuppakki box office collection some facts and figures
இது உண்மைதானா?
கோடம்பாக்கத்தின் பிரபல வசூல் ராஜா (அதாங்க பாக்ஸ் ஆபீஸ் பண்டிட்!) ஒருவரை தொடர்பு கொண்டு விசாரித்தோம்.
துப்பாக்கி படம் இதுவரை பிரேக் ஈவன் எனப்படும் அசலைத் தாண்டிய நிலைக்கு வந்திருக்கிறது என்பதுதான் உண்மை. அதெப்படி இவங்களுக்கு மட்டும் ரூ 100 கோடியைத் தாண்டிவிட்டது என்றுதான் தெரியவில்லை என்றார்.
சென்னை நகரில் மட்டுமே இந்தப் படம் ஓரளவு சுமாரான கூட்டத்துடன் ஓடிக் கொண்டிருப்பதாகவும், வெளியூர்களில் தூக்கப்படும் நிலையில்தான் இருக்கிறதென்றும் அவர் தெரிவித்தார். சென்னை விவரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள, சென்னை சினிமா ரசிகர்களின் நாடித் துடிப்பான காசி திரையரங்குக்கு சென்றோம். காலைக் காட்சிக்கு 25 சதவீத ரசிகர்கள் மட்டுமே வந்திருந்தனர்!
"ஏற்கெனவே நண்பன் படம் வெளியான போது, அந்தப் படம் தமிழ் சினிமாவின் அனைத்து சாதனைகளையும் முறியடித்து ரூ 100 கோடிக்கு மேல் வசூலைக குவித்து விட்டது என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் நிஜம் என்னவென்பது அடுத்த சில தினங்களில் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இப்போது மீண்டும் துப்பாக்கி படத்துக்கு அதே வேலையை ஆரம்பித்துள்ளனர். மாற்றான் பிஸினஸை நாங்கள் முறியடித்துவிட்டோம் என்று காட்டத்தான் இந்த பில்டப்," என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத இன்னொரு 'பண்டிட்'!
'தமிழ் சினிமாக்காரர்கள் வசூல் சாதனை என்று எதையாவது கொடுத்தால் அப்படியே நம்ப வேண்டிய அவசியமில்லை. காரணம், அதற்கு கணக்கு வழக்கும் இல்லை. பதிவேடுகளும் கிடையாது. குத்து மதிப்பாகத்தான் அடித்துவிடுவார்கள். கமல்ஹாஸன் தன் உன்னைப் போல் ஒருவன் படத்தக்கு 10 கோடி நஷ்டம் என்று வங்கியில் கணக்கு காட்டினாராம். அதை நம்பிக் கொண்டதைப் போல,துப்பாக்கியின் ரூ 100 கோடி வசூலையம் நம்பிக் கொள்ள வேண்டியதுதான்', என்கிறார் நம்மிடம் பேசிய ஒரு சீனியர் சினிமா ஜர்னலிஸ்ட்.
எதுக்கும் இந்த வம்பு.. தியேட்டர் வாரியாக வசூல் விவரங்களை தாணுவோ எஸ்ஏசியோ விளம்பரமாகக் கொடுத்துவிட்டால்... ரசிகர்கள், இன்கம்டாக்ஸ்காரர்களுக்கு வசதியாக இருக்குமே!

Wednesday, November 28, 2012

அம்மாவின் கைப்பேசி... ஒலகத் தரம்னா... அது இதாங்க!



முதல் படமான அழகியிலிருந்தே அடிக்கடி தங்கர் பச்சான் அரற்றுவது 'ஒலக சினிமா'. வெறும் சினிமாக்காரராக இல்லாமல், கொஞ்சம் எழுதவும், ஏகத்துக்கும் பேசவும் தெரிந்தவர் என்பதால் இந்த அரற்றல் சமயத்தில் ஒப்பாரி ரேஞ்சுக்குப் போய்க் கொண்டிருக்கிறது.

ammavin kaipesi review

ஆனால் தமிழ் சினிமா ரசிகர்களின் போறாத காலம், அந்த ஒலக சினிமா அம்மாவின் கைப்பேசியாக வந்து தொலைத்துவிட்டது.

இனி தமிழ் சினிமா ரசிகர்களுக்காக சினிமா எடுக்க மாட்டேன் என பாஞ்சாலி சபதம் ரேஞ்சுக்கு சபதமெடுத்திருக்கும் பச்சான் வெளியிட்டுள்ள கடைசி தமிழ்ப் படம் என்ற சின்ன ஆறுதலோடு, படத்தின் விமர்சனத்தைப் படியுங்கள்.
பொறுப்பில்லாமல், வெட்டித்தனமாக சுற்றிக் கொண்டிருக்கும் கடைசி மகன் சாந்தனுவை, நாலு காசு சம்பாதித்து ஊரார் மதிக்கும்படி வரவேண்டும் என்று ஒரு நாள் வீட்டைவிட்டே துரத்திவிடுகிறார் அவரது அம்மா. அம்மாவின் ஆசையை சாந்தனு நிறைவேற்றினாரா? என்பது வழக்கம் போல க்ளைமாக்ஸ்.
இடையில் பிரசாத் என்ற பாத்திரத்தில், மீனாளை இறுக்கியணைச்சு உம்மா கொடுத்து பிழிந்தெடுக்கும் தங்கர் பச்சான் லூட்டிகளுக்கு தனி கட்டுரை தயார் பண்ண வேண்டும்.

படத்தின் ப்ளஸ் என்று எதையாவது சொல்ல ஆசைதான். ஆனால் தங்கரின் இந்த உலக கைப்பேசியில், அப்படி உருப்படியாக ஒரு காட்சியும் இல்லை. எதற்கெடுத்தாலும் கிராமத்தைக் காட்டுவதாகக் கூறி ஆடு, கோழி, கீரிப்பிள்ளை என கேமிராவில் சிக்கியதையெல்லாம் காட்சியாகத் திணித்து கடுப்பேற்றியிருக்கிறார் மனிதர்.

இங்கிருப்பவர்களுக்கு இசையே தெரியவில்லை என்று கூறி மும்பையிலிருந்து தங்கர் பிடித்து வந்திருக்கும் குல்கர்னியின் பாடல்களைக் கேட்டு, வயிறு அப்செட்டாகி பின் வாசல் வழியாக ஓடுகிறார்கள், படத்துக்கு வரும் பத்துப் பதினைந்து பேரும்!

என்னது... சாந்தனு நடிப்பு பத்தி கேக்கறீங்களா...? பாவம்... அவர் என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றார்...!!

நல்லா நடிக்கத் தெரிஞ்ச பொண்ணு இந்த இனியா... அவரையும் லிப் டு லிப்புக்கு மட்டும் ஊறுகாயா உபயோகப்படுத்தி ஓரமா உட்கார வச்சிடறார் தங்கர்.
தங்கர் பச்சானின் தகர டப்பா பாத்திரம் மட்டும் இல்லாமலிருந்தால் கூட இந்தப் படத்தை கொஞ்சம் சகித்திருக்கலாமோ என்னமோ...

அம்மாவின் கைப்பேசிகள்தான் துப்பாக்கிகளை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன.. நியாயமாக விஜய், முருகதாஸ்கள் தங்கருக்கு நன்றி சொல்ல வேண்டும்!

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்.


Naduvula Konjam Pakkathai Kanom From Nov 30
கடந்த மாதமே வெளியாகவிருந்து, கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட படம் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்.
காரணம்... படத்துக்குக் கிடைத்த பாஸிடிவ் விமர்சனங்கள்.
அன்றைக்கு இந்தப் படத்தை எப்படியாவது வெளியிட்டுவிட்டால் போதும் என்ற மனநிலையில், கிடைத்த 35 அரங்குகளில் வெளியிடத் தயாராக இருந்தனர்.
ஆனால் படத்தைப் பார்த்த திரையுலக பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், 'நல்ல படத்தை ஏன் கொல்கிறீர்கள்... கொஞ்சம் தள்ளிப் போட்டு பெரிசாக வெளியிடுங்கள்,' என்று அறிவுறுத்த, நிறுத்தி வைத்தார்கள்.
அது ரொம்ப நல்லதாகப் போயிற்று. படத்தைப் பற்றி கேள்விப்பட்ட ஜேஎஸ்கே பிலிம்ஸ், சதீஷ் குமார், இந்தப் படத்தை நல்ல விலைக்கு வாங்கிக் கொண்டார்.
நாளை மறுநாள் 155 அரங்குகளில் பிரமாண்டமாக வெளியிடுகிறார்.
இதுகுறித்து இயக்குநர் பாலாதி தரணீதரன் கூறுகையில், "கடவுளுக்கும் பத்திரிகை உலகினருக்கும்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். சினிமா மீது உண்மையான அக்கறையோடு, இந்தப் படத்தைப் பார்த்தார்கள் பத்திரிகையாளர்கள். அவர்களின் நேர்மையான விமர்சனம் இந்தப் படத்துக்கு நல்ல விலையையும், மிக அருமையான வெளியீட்டுச் சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
நாங்கள் 35 தியேட்டர் கிடைச்சாலே பெரிய விஷயம்னு நினைச்சோம். ஆனால் இன்னிக்கு பத்திரிகையாளர்கள் யோசனையால், 155 அரங்குகளில் வெளியிடும் நிலை வந்திருக்கிறது.
படத்தில் தேவையில்லாத 25 நிமிடக் காட்சிகளைக் குறைத்துவிட்டோம். இன்னும் க்றிஸ்ப்பாக வந்திருக்கிறது படம். நாளை மறுநாள் படம் வெளியாகிறது," என்றார்.
பீட்சா படத்துக்குப் பிறகு இன்னொரு வெற்றிப்படமாக இந்த நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் அமையும் என நம்புவதாக ஹீரோ விஜய் சேதுபதி சந்தோஷமாகக் குறிப்பிட்டார்.
படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார்.

Thursday, November 22, 2012

விஜய்யின் துப்பாக்கி வெடியும் சாம்பிராணி புகையும்!- ஒரு 'போஸ்ட் மார்ட்டம்' ரிப்போர்ட்!


பரபரவென காட்சிகள் நகர்வது போல படமெடுத்தால் போதும்... மக்கள் குறைகளை மறந்துவிடுவார்கள் என்ற வீச்சறுவா புகழ் ஹரியின் பாலிசிதான் இனி சரிப்பட்டு வரும் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது முருகதாஸ் என்ற கமெண்ட் இப்போது எல்லோர் வாயிலும் வர ஆரம்பித்துவிட்டது, துப்பாக்கி படம் ஓடும் அரங்குகளில்.
தீபாவளிக்கு வந்த படங்களில் பரவாயில்லை என்ற மவுத் டாக் வந்துவிட்டது. அதை நம்பி, விஜய்யும் விடிய விடிய பார்ட்டி கொடுத்து, அந்த தெம்போடு அடுத்த துப்பாக்கிக்கு ரெடியாகிவிட்டார்.
ஆனால் துப்பாக்கி ஓடும் தியேட்டர்களில் ஜனங்களின் பல்ஸ் என்ன என்று பார்க்கப் புறப்பட்டோம்.
அடடா... அவங்கதாங்க நிஜமான விமர்சகர்கள். எந்த முன் தயாரிப்புமின்றி, படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் அவர்கள் அடிக்கிற கமெண்டைக் கேட்டால், ஏன்டா இப்படி ஒரு படத்தில் நடித்தோம் என விஜய்யும் (அவருக்கு அப்படியெல்லாம் தோணுமாங்கிறது சந்தேகம்தான்...), இவரோடு ஏன் சேர்ந்தோம் என இயக்குநர் முருகதாஸும் நிச்சயம் வருத்தப்படுவார்கள்.
இந்தப் படத்தில் எந்தக் காட்சியிலாவது நம்பகத்தன்மை அல்லது உண்மை இருக்கிறதா என்பது முதல் கேள்வி.
படம் முழுக்க மிலிட்டரி ஆபீ.. ஸர் விஜய், ஏதோ செட் தோசை சுடுவது போல எல்லோரையும் சுட்டுக் கொண்டே இருக்கிறார். எழவு... அதைக் கேட்க ஒரு போலீஸ் கூட குறுக்கே வரவே மாட்டேங்குது. மும்பையில் போலீஸ்காரங்க அவ்வளவு டம்மி பீஸுங்களா...?
அட ஒரு கப்பலுக்கு வெடி வைக்கிறாய்ங்கய்யா... அந்தக் காட்சியை 50 ரூபாய்க்கு இங்கிலீஷ் பட சிடி வாங்கிப் பாத்து அப்படியே சுட்டு எடுத்திருந்தா கூட நல்லா வந்திருக்கும். கெரகம்... இவர்களது லோ குவாலிட்டி கிராபிக்ஸை பாருங்கள்... கப்பல் வெடிச்சதும் ஏதோ சாம்பிராணி போட்ட மாதிரி சவசவன்னு கிளம்புது புகை!
ஆமா... இந்த சத்யனையெல்லாம் யாரும் கேப்பாரே இல்லையா... காமெடி என்ற பெயரில் அவர் போடற சத்தம் கர்ண கொடூரம்டா சாமி.. பேசாம அவரை ஊமையாவே நடிக்க வச்சிருக்கலாம்..!
அவருக்கு கொஞ்சமும் சளைக்காத சொதப்பல் காமெடி பீஸ் ஜெயராம்.
மும்பையில் 12 இடங்களில் குண்டு வெடிப்பை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனா ஹீரோ நம்ம இளைய தளபதியாச்சே... மொத்த கிரெடிட்டும் அவருக்குத்தானே சேரணும்... சும்மா... இடது கையால் சொடக்குப் போட்டபடியே தீவிரவாதிகள் கூட்டம் மொத்தத்தையும் ஒழித்துக் கட்டுகிறார் பாருங்க... 2008 மும்பை குண்டு வெடிப்பப்போ இந்தாளு எங்கேய்யா போயிருந்தார்னு தியேட்டர்ல கமெண்ட் அனல் பறக்குது!
அப்புறம் இந்த ஹீரோயின்...
குணா படத்துல கமல் சொல்வாரே.. நடு நடுவே மானே தேனே பொன்மானேன்னு போட்டுக்கன்னு... அப்படித்தான்... துப்பாக்கி சத்தம் கொஞ்சம் காதைக் கிழிக்கும்போது, இந்தப் பொண்ணை லம்பாடி டிரஸ்ல ஆடவிட்டு, டமார்னு மறைச்சு வெச்சுக்கிறார் டைரக்டர். அப்புறம் ஒரு மூணு ரீல் கழிச்சு திரும்ப கண்ல காட்டறார். இப்படியே காட்டி காட்டி... க்ளைமாக்ஸ்ல கரெக்டா ஹீரோவோட டூயட் ஆட வரவச்சுடறார்!
படத்தை பார்க்கும்போது பலர் கோபத்தில் அங்கும் இங்கும் திரும்பிப் பார்ப்பதும், பக்கத்தில் இருப்பவர் ரொம்ப நேரத்துக்கு முன்பே தூங்கிவிட்டதை பார்த்து, 'அட, இது நல்லா ஐடியாவா இருக்கே' என்று அவர்களில் பலரும் தூங்க ஆரம்பித்ததும் தான் நமது ரவுண்ட்-அப்பின் ஹைலைட்!
ரமணா மாதிரி சென்சிபிளான படம் கொடுத்த முருகதாஸ்தானா இதுன்னு ரொம்ப சந்தேகமாவும்... இவரும் விஜய் கூட சேர்ந்து இப்படி ஆகிட்டாரேங்கிற வருத்தமும்தான், படம் முடிஞ்சதும் எனக்கு மிஞ்சிச்சு!

Tuesday, November 20, 2012

நித்யானந்தா செஞ்சதுல தப்பே இல்லையாம்... சொல்கிறார் வடிவேலுவிடம் ஆட்டய போட்ட சிங்கமுத்து!





Singamuthu Backs Nithyananda

'நித்யானந்தா என்ன தப்பு பண்ணிட்டாரு? எல்லாரும் செய்றதைத்தான் அவரும் பண்றாரு. விஸ்வாமித்திரர்ல இருந்து செஞ்சது தானே. நித்யானந்தா மேல புகார்கள் வந்த பிறகு நானே பிடதியில போய்ப் பிரசங்கம் பண்ணினேன்..'
-இப்படி திருவாய் மலர்ந்திருப்பவர் சிங்கமுத்'தானந்தா!
ஒரு வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில்தான் இப்படி அவர் கூறியுள்ளார்.
அந்தப் பேட்டியில், நீங்கதான் ஆன்மீகத்துல ஈடுபாடுள்ளவராச்சே, நித்யானந்தா செஞ்சது சரிதானா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு சிங்கமுத்து தந்துள்ள பதிலைப் பாருங்கள்:
''நித்யானந்தா என்ன தப்பு பண்ணிட்டாரு? எல்லாரும் செய்றதைத்தான் அவரும் பண்றாரு. விஸ்வாமித்திரர்ல இருந்து செஞ்சது தானே. நித்யானந்தா மேல புகார்கள் வந்த பிறகு நானே பிடதியில போய்ப் பிரசங்கம் பண்ணினேன்.
அங்கே பல ஆன்மிகவாதிகளின் வரலாற்றைச் சொல்லி 'நித்யானந்தா செஞ்சது தப்பே இல்லை'னு பேசினேன். இருந்தாலும் நித்யானந்தாவைத் தனியாப் பார்த்து,
'ரஞ்சிதா விவகாரம் உண்மையா?'னு கேட்டேன். பிடதி ஆசிரமத்துக்குள்ள சுத்திட்டு இருந்த ஆயிரக்கணக்கான இளம்பெண்களைக் காட்டி 'இவங்களைவிடவா ரஞ்சிதா அழகு? அவர் ஆஸ்துமா பிரச்னையால் இங்கு வந்தார். குணப்படுத்தினேன். அதில் இருந்து ஆசிரமத்துக்கு வந்து சேவை செய்ய ஆரம்பித்துவிட்டார்'னு சொன்னார்!'

Thursday, November 15, 2012

துப்பாக்கி - விமர்சனம்




நடிப்பு: விஜய், காஜல் அகர்வால், சத்யன், ஜெய்ராம், வித்யூத் ஜம்வால்
ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
தயாரிப்பு: கலைப்புலி தாணு
எழுத்து, இயக்கம்: ஏ ஆர் முருகதாஸ்
ஆக்ஷன் படங்கள் என்றால் லாஜிக் பார்க்கக் கூடாது என்பது கோடம்பாக்கத்தின் எழுதப்படாத விதி. துப்பாக்கியும் அதற்கு விலக்கில்லை. ஆனால் அதையெல்லாம் தாண்டி பார்க்கும்படி ஒரு பக்கா ஆக்ஷன் மசாலா தந்திருக்கிறார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ். அந்த வகையில் இந்த ஆண்டு பெரிய பட்ஜெட் படங்களின் தொடர் வீழ்ச்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது துப்பாக்கி.

tuppakki review
படத்தின் கதையை விலாவாரியாக சொல்வது, படத்தை ரசிக்க முடியாமல் செய்துவிடும். ஆனாலும் ஒன்லைனை மட்டும் 'சில லைன்களில்' சொல்லிவிடுகிறோம்.


மிலிட்டரியிலிருந்து 40 நாட்கள் லீவில், யூனிபார்மைக் கூட கழட்டாமலேயே வருகிறார் மும்பைத் தமிழன் விஜய். அதே யூனிபார்முடன் காஜலை பெண்பார்க்கப் போகிறார். ஒரு பஸ்ஸில் குண்டு வெடிக்கிறது. அப்போது பிக்பாக்கெட் ஒருவனைப் பிடிக்கிறார் விஜய். அந்த நேரத்தில் இன்னொருவன் சம்பந்தமே இல்லாமல் ஓட, விஜய் அவனைத் துரத்திப் பிடித்து விசாரிக்கும்போதுதான் மிகப் பெரிய தீவிரவாத நெட்வொர்க் தெரிகிறது.

தீவிரவாதிகள் 12 இடங்களில் குண்டு வைக்கத் திட்டமிட்டிருப்பது தெரிந்த விஜய், கையில் கிடைத்த தீவிரவாதியை தப்பிக்க விட்டு, தீவிரவாதிகளின் தலைமையை அழிக்க முயல்வதும், அந்த தலைமை விஜய்யை அழிக்க முயல்வதும், இதில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதும்தான் கதை.
பழைய எம்ஜிஆர் பாணி கதைதான் என்றாலும் அதை முருகதாஸ் கையாண்ட விதம் ரசிகர்கள் தன்னை மறந்து பல காட்சிகளில் கைத்தட்ட வைக்கிறது.
போலீஸ் வேடமே விஜய்க்குப் பொருந்தவில்லை... இதில் மிலிட்டரி ஆபீசர் கெட்டப் எப்படியோ.. என்ற யோசனையோடு உட்கார்ந்தால்.. அட.. அசத்தலாகப் பொருந்துகிறது!

பஞ்ச் வசனங்கள் குறைத்து, லொட லொட சவால் பேச்சுக்களைத் தவிர்த்து அடக்கி வாசிக்கிறார் விஜய். பார்க்கவே ரொம்ப நல்லாருக்கு... துப்பாக்கி வெற்றிக்குப் பிறகும் இந்த அடக்கம் தொடர்ந்தால் இன்னும் நல்லாருக்கும்!
காஜல் அகர்வால் கண்ணுக்கு லட்சணமாக வந்து போகிறார். அவர் வேலை பாட்டுக்கு டான்ஸ் ஆடுவதும், தீவிரவாதம் போரடிக்கும் போது விஜய்யுடன் ரொமான்ஸ் பண்ணுவதும்தான். அதை பக்காவாக செய்கிறார்.

சத்யன், ஜெய்ராம் காட்சிகள் சமயத்தில் ஜோர்... கொஞ்சம் போர்!
வில்லன் வித்யூத் ஜம்வாலுக்கு கொடுத்த முக்கியத்துவம் ஹீரோவை இன்னும் ஒருபடி உயர்த்திப் பிடிக்கிறது.

ஆக்ஷன் காட்சிகளை எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம், தீவிரவாதிகளால் விஜய் அண்ட் கோவின் தங்கைகள் கடத்தப்பட அதை விஜய் கண்டுபிடிக்கும் காட்சிகள்!

12 தீவிரவாதிகளையும் தீர்த்துக்கட்ட விஜய் போடும் பிளான்.. அக்மார்க் மாஸ்டர் ப்ளான்...
படத்தில் லாஜிக் மிஸ்டேக் என்று பார்த்தால் ஏகப்பட்டதைச் சொல்லமுடியும். ஆனால் அதை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு தியேட்டருக்குப் போனால் எந்தப் படத்தையும் ரசிக்க முடியாதுதான். முக்கியமாக துப்பாக்கியின் வேகம், விறுவிறுப்பு, சுவாரஸ்யத்துக்காக... குறைகளை மன்னிக்கலாம்!
சந்தோஷ் சிவனுக்கு சவால்கள் ஏதுமில்லை.

கஜினியில் விஸ்வரூபமெடுத்து, ஏழாம் அறிவில் சிறுத்துப் போன முருகதாஸ்... மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார். இந்த வெற்றி அவரையும் ஹீரோ விஜய்யையும் அதிகம் பேச வைக்காமல் இருக்கக் கடவது!

துப்பாக்கி.. அதிர்வெடி!

Thanks thatstamil

போடா போடி - விமர்சனம்


போடா போடி - விமர்சனம்


நடிப்பு: சிம்பு, வரு சரத்குமார் (வரலட்சுமி), ஷோபனா, விடிவி கணேஷ்
இசை: தரன் குமார்
மக்கள் தொடர்பு: நிகில்
ஒளிப்பதிவு: டங்கன் டெல்போர்டு
தயாரிப்பு: ஹிதேஷ் ஜபக்
இயக்கம்: விக்னேஷ் சிவன்

பெண்ணென்பவள் திருமணத்துக்குப் பின் கணவனை கவனித்துக் கொண்டு, பிள்ளை பெற்று, அதை வளர்ப்பதிலேயே காலத்தைக் கழிக்க வேண்டுமா... அவளுக்கென்று கேரியர் வேண்டாமா...
தன் கண் முன் மனைவி ஆண் நண்பர்களுடன் எப்படி இருந்தாலும் அதை கணவன் சகித்துக் கொண்டுதான் இருக்க வேண்டுமா?

poda podi review

-இந்த ஈகோ மோதல்தான் போடா போடி படம். அதனை முடிந்தவரை சுவாரஸ்யமாகக் கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.


அனிமேஷன் டிசைனர் சிம்புவும், நடனக் கலைஞர் வரு சரத்குமாரும் காதலிக்கிறார்கள். காதல் என்றால் பொய் இல்லாமலா... இந்தக் கதையில் பொய்யாய் அவிழ்த்துவிடுபவர் ஹீரோயின் வரலட்சுமி. ஆனால் எதற்காகவும் நடனத்தை விட்டுத் தர மறுக்கிறார். இந்தப் பொய் மற்றும் பிடிவாதத்தால் வெறுத்துப்போய் 'போடி உன் காதலும் வேண்டாம் கத்தரிக்காயும் வேண்டாம்' என்று ஓடுகிறார் சிம்பு.

ஊடல் முடிந்து மீண்டும் கூடுகிறார்கள். இந்த முறை, திருமணம் செய்து கொண்டால் வரலட்சுமியை வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்ற யோசனை உதிக்க, சிம்பு அதை செயல்படுத்த முயல்கிறார். ஆனால் திருமணத்துக்குப் பிறகும் நடனத்தை விடமுடியாது, தன் பழக்கங்களையும் மாற்றிக் கொள்ளமுடியாது என்கிறார் வரலட்சுமி. கர்ப்பமாக்கிவிட்டால் நடனமாட முடியாதே என்ற அபார யோசனையை சித்தப்பா விடிவி கணேஷ் சொல்ல, அதையும் செயல்படுத்திப் பார்க்கிறார்.

குழந்தை பிறக்கிறது. இருவரின் சண்டையில் ஒரு விபத்து நேர, அதில் குழந்தை இறக்கிறது. சிம்புவும் வரலட்சுமியும் பிரிகிறார்கள். பிரிந்த மனைவியை ஒடிப்போய் மல்லுக்கட்டி மீண்டும் குடித்தனம் நடத்த கூட்டி வருகிறார் சிம்பு, நடனமாடியே தீருவேன் என்ற அவரது நிபந்தனையை ஏற்றுக் கொண்டு.
ஆனால், மீண்டும் ஈகோ மோதல் வெடிக்கிறது. நடனமாடும்போது அடுத்தவன் உன்னைத் தொடுவதை எப்படி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது என்ற சிம்புவின் ஆதங்கத்தின் மூலம்...

கடைசியில் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டுகிறார்கள். கண்டவனுடன் ஆடுவதைவிட, கணவனுடனே ஆடித் தொலைக்கிறேன் என வரலட்சுமி முடிவு செய்ய, சிம்பு டான்ஸ் பார்ட்னராகிறார்.

ஆனால் டான்ஸ் காம்பெடிஷனில் அவர் சொதப்புகிறார். 'சரி, எனக்குதான் சல்சா டான்ஸ் வரவில்லை.. அதனால் எனக்கு நன்றாக ஆட வரும் குத்து டான்ஸுக்கு நீ மாறிக் கொள்' என சிம்பு அட்வைஸ் பண்ண, சல்சா குத்துக்கு மாறுகிறது. சக்ஸஸ் ஆகிறது.

ஆனால்... அடுத்து டான்ஸ் காம்பெட்டிஷனில் இன்னும் 14 ரவுண்டுகள் இருக்கின்றன. அதில் எப்படி ஜெயிப்பது என்று வரலட்சுமி கேட்க, அதற்கு சிம்பு ஒரு டெக்னிக் வைத்திருக்கிறார். அது மீண்டும் வரலட்சுமியை கர்ப்பமாக்குவது.. அப்புறம்....சுபம்!

ஸ்ஸப்பா... ஒருவழியா கதையை எழுதி முடிச்சிட்டேன். கதையை எழுதும் போதுதான் இத்தனை இம்சையாக இருக்கிறதே தவிர... அதை புது இயக்குநர் விக்னேஷ் சிவன் படமாக்கிய விதம், கொஞ்சம் புதுசாகவும் சுவாரஸ்யமாகவும்தான் இருக்கிறது.

நெத்தியடியாக ஒரு தோல்வி கிடைத்தால்தான் சிம்பு மாதிரி ஹீரோக்கள் வாயையும் கையையும் அடக்கிக் கொண்டு நடிப்பார்கள் போலிருக்கிறது. ஒஸ்தியில் பட்ட அடி, இந்தப் படத்தில் அவரை அப்படியே திருப்பிப் போட்டிருக்கிறது (அட்லீஸ்ட் அப்படி நடிக்கவாவது செய்ய வைத்திருக்கிறது).
அவரை விட வெயிட்டான ரோல் வரலட்சுமிக்கு. அதை செவ்வனே செய்திருக்கிறார். குரலும் தோற்றமும் சற்று கடூரம்தான் என்றாலும், அவரது ஈடுபாடும், டான்ஸும் அவற்றை மறக்கடிக்க வைக்கிறது. அவரை ஏன் இந்தப் படத்துக்கு ஹீரோயினாக்கினார்கள் என்பதை சரியாக நியாயப்படுத்தியிருக்கிறார் வரலட்சுமி.

விடிவி கணேஷ் வரும் காட்சிகளில் தியேட்டர் கலகலக்கிறது. ஆனால் இன்னும் எத்தனைப் படத்துக்கு இது ஒர்க் அவுட் ஆகும் என்ற கேள்வியையும் தவிர்க்க முடியவில்லை.

ஷோபனாவுக்கு ஒரு ரெண்டுங்கெட்டான் கேரக்டர்.
ஒட்டுமொத்தமாக படம் சூப்பர் என்று சொல்ல முடியாவிட்டாலும், பல காட்சிகள் ரசிக்கும்படி இருப்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். குறிப்பாக பிரிந்த மனைவியை கூட்டிப் போக வரும் சிம்பு, ஷோபனாவிடம் வாதிடுவது. குழந்தைக்காக அவர் பாடும் ங்கொப்பன் மவனேயை ரசிக்க முடியவில்லை என்றாலும், அதை எடுத்திருக்கும் இடம், விதம் அழகு. முழு கிரெடிட்டும் ஒளிப்பதிவாளருக்குதான்!

டாய்லெட்டுக்குள் வெறுப்புடன் வீசியெறிந்த திருமண மோதிரத்தை வரலட்சுமி மீண்டும் எடுப்பது, படத்தில் சபாஷ் பெறும் இன்னொரு காட்சி!
காதல், ஊடல், சண்டை, பிரிவு, மீண்டும் கூடல், ஊடல், சண்டை என ரோலர் கோஸ்டர் மாதிரி காட்சிகள் நகர்வதில் ஒரு கட்டத்தில் களைப்புத் தட்டுவதும் உண்மைதான். ஆனால் அந்த டான்ஸ் காம்பெடிஷன் நெருங்க நெருங்க, நாமும் அதில் ஐக்கியமாவதை உணர்கிறோம்...

தரணின் இசை பரவாயில்லை. பாடல்கள் எதுவும் நினைவிலும் இல்லை. மீண்டும் மீண்டும் தன் பழைய பாடல்களையே புதுப் பாட்டாக கோர்ப்பதை சிம்பு எப்போது விடப் போகிறாரோ!
புது இயக்குநர் விக்னேஷ் சிவன், எடுத்த எடுப்பிலேயே கொஞ்சம் வித்தியாசமான கதையை வித்தியாசமான அணுகுமுறையோடு ரசிகர்களுக்கு தந்திருக்கிறார். ஆனால் இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்றும் சொல்ல முடியாது!


எதிர்ப்பார்ப்பில்லாமல் போனால் ரசிக்கலாம்!

Thanks Thatstamil.com

Monday, November 5, 2012

மாமல்லபுரம் கடலில்... சோனாவும் பிரேம்ஜியும் குளித்தபோது...!



Sona Drown Mamallapuram Sea

நடிகை சோனா மகாபலிபுரம் அருகே கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, அலையில் இழுத்துச் செல்லப்பட, கூடவே குளித்த பிரேம்ஜியும் குழுவினரும் ஓடிப்போய் காப்பாற்றினாராம்.
ஒன்பதுல குரு என்ற படத்துக்காகத்தான் இப்படி இருவரும் ஜலக்கிரீடை நடத்திக் கொண்டிருந்தார்களாம், இயக்குநர் பிடி செல்வகுமார் மேற்பார்வையில்.
அப்போது இருவரும் அலையில் சிக்கினார்களாம். சோனாவுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தபடி அலற, படக்குழுவும் பிரேம்ஜியும் கடலுக்குள் பாய்ந்து சோனா தலைமுடியை பிடித்து இழுத்து கரைக்கு கொண்டு வந்தார்களாம்.
உயிர் பிழைத்தது குறித்து சோனா கூறுகையில் (சத்தியமா இது பப்ளிசிட்டி இல்லையாங்க!!)," ஒன்பதுல குரு படத்தில் நான் குளிப்பது போன்றும், என்னோடு நடிப்பவர்கள் கடலில் விழுந்து விடுவது போன்றும் காட்சிகளை எடுத்தனர். இயக்குனரிடம் என்னை இன்சூரன்ஸ் செய்து உள்ளீர்களா என்று அப்போது வேடிக்கையாக கேட்டபடி நடித்துக் கொண்டு இருந்தேன்.
திடீரென என்னுடன் நடித்தவர்கள் கடலில் விழுவதற்கு பதிலாக தவறிப் போய் நான் விழுந்துவிட்டேன். பயந்துபோய் உயிரை காப்பாற்றிக்கொள்ள போராடினேன்.
படப்பிடிப்பு குழுவினர் வந்து மீட்டனர். இது எனக்கு பயங்கரமான அனுபவமாக இருந்தது," என்றார்.

Top 10 Tamil actors salary list

டாப் 10 தமிழ் நடிகர்களின் லேட்டஸ்ட் சம்பள விவரம்!

ஆண்களிடம் சம்பளத்தையும், பெண்களிடம் வயதையும் கேட்க கூடாது என்று சொல்வார்கள். ஆனால் இந்த இரண்டையும் அறிந்து கொள்வதில் தான் நம்மில் பலருக்கு ஆர்வம அதிகம்.

அதிலும் தமிழ் நடிகர்களின் சம்பளத்தை அறிந்து கொள்வதில் நமக்கு மிகுந்த ஆர்வம உண்டு. ஏனென்றால் அதன் மூலம் மட்டுமே நாம் நடிகர்களின் மார்க்கெட் நிலவரத்தை அறிந்துகொள்ள முடியும்.

தமி

ழ் சினிமாவின் பட்ஜெட் இன்று எங்கேயோ போய்விட்டது. அதிலும் தமிழ் சினிமா நடிகர்களின் சம்பளம் கற்பனைக்கும் எட்டாத அளவில் உள்ளது. படம் வெற்றி அடைந்தால் சம்பளத்தை கூட்டும் நடிகர்கள், படம் தோல்வி அடைந்தால் சம்பளத்தை குறைப்பதில்லை. தமிழ் நடிகர்களின் சம்பளம் ரகசியமாக இருந்தாலும் தோராயமாக நாம் அவற்றை கணக்கிட முடியும்.

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய நடிகர்களிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளார். அதுமட்டுமல்ல ஆசியாவிலேயே இரண்டாவது அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்த் உள்ளார். எனவே முதலாம் இடத்திற்கு இங்கு போட்டி இல்லை. ஆனால் அடுத்த ஒன்பது இடங்களுக்கு மிகுந்த போட்டி உள்ளது. எனவே இந்த ஒன்பது இடங்கள் அடிக்கடி மாறக்கூடியது. ஒரு நடிகரின் ஒரு படம் வெற்றி அடைந்தால் சம்பளம் கூடுவதும், தோல்வி அடைந்தால் சம்பளம் குறைவதும் ரேங்க் பட்டியலை மாற்றிவிடக்கூடும். இது இப்போதைய நிலவரம்தான். அடுத்து வெளிவரக்கூடிய படங்களின் வெற்றி தோல்விகள் இந்த தரப்பட்டியலை மாற்றலாம்.

இடம்
நடிகர்
புகைப்படம்
சம்பளம் (கோடியில்)
குறிப்பு
1
ரஜினிகாந்த்
35 – 40
எந்திரன் படத்திற்கு
சம்பளம் உட்பட
லாபத்தில் பங்கு
என ரஜினி பெற்றது
ரூ. 54 கோடி
என்கிறது சினிமா
வட்டாரம்.

2
சூர்யா
24
மாற்றான் படத்திற்கு
சூர்யா பெற்ற
சம்பளம்
24 கோடியாம்.

3
விஜய்
20
யோகன் படத்திற்கு விஜய்க்கு பேசப்பட்ட சம்பளம் 20 கோடி.

4
கமல்ஹாசன்
19.5
கமல்ஹாசன் சம்பள
விவரம் தெளிவாக
தெரியவில்லை. விஸ்வரூபம்
படத்திற்கு
கமலின் சம்பளம்
19.5 கோடி என்கிறது
சினிமா வட்டாரம்.

ஆனாலும் மற்றொரு
தரப்போ ரூ. 45 கோடி
என்கிறது.

5
அஜித்
14 – 16
பில்லா 2 படத்திற்கு
அஜித் பெற்ற சம்பளம்
14 முதல் 16 கோடி
வரை இருக்கலாம்
என்கிறது சினிமா
வட்டாரம்.

6
விக்ரம்
10
சமீபத்திய சில
படங்கள் தோல்வி
அடைந்ததால்
விக்ரமின் சம்பளம்
ரூ. 10 கோடிதான்.

7
கார்த்தி
6 – 8
கார்த்தி நடிக்கும்
புது படத்திற்கு 6
முதல் 8 கோடி
வரை சம்பளம்
பேசப்பட்டுள்ளதாக தகவல்.

8
தனுஷ்
5
தனுஷின் “ 3 ” எதிர்பார்த்த அளவு வெற்றி அடையாததால் அவருடைய சம்பளம் 4.5 முதல் 5 கோடி வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

9
சிம்பு
4
சிம்புவின் சமீபத்திய படங்கள் வெற்றியடையாவிட்டாலும் அவரின் சம்பளம் 3 முதல் 4 கோடியாக உள்ளது.

10
விஷால்
2
விஷாலின் சம்பளம் இரண்டு கோடியாக உள்ளது

Friday, November 2, 2012

ஆளே இல்லாத டீக்கடையில யாருக்கு டீ ஆத்துறீங்க பாஸ்?



Maatraan Spl Prg Sun Tv

தலைப்பை பார்த்த உடன் என்னவென்று நினைக்கிறீர்களா? எல்லாம் மாற்றான் படத்தை பற்றிதான். ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்த சூர்யா என்று எதிர்பார்ப்போடு போனவர்களுக்கு ஏமாற்றத்தை தந்த படம் என்றாலும் படத்திற்கு விளம்பரம் மட்டும் சேனல்களில் குறைவின்றி செய்யப்படுகிறது.
பக்கம் பக்கமா பலே பேச்சு
அது போகட்டும் காசு இருக்கு விளம்பரம் பண்றாங்க என்று விட்டுவிடலாம். ஆனால் சேனல்களில் படத்தைப் பற்றி பக்கம் பக்கமாக பேசும்போதுதான் சிரிப்பு வருகிறது.
சீன் பை சீன் விளக்கம்
ஞாயிறு காலை 9.30 மணிக்கு சன் டிவியை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். மாற்றான் இயக்குநர் கே.வி. ஆனந்த் தொடங்கி எழுத்தாளர்கள் சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோர் சீன் பை சீன் படத்தை பற்றி விளக்கினார்கள்.
லிங்குசாமியின் காமெடி
இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் பேசினார் இயக்குநர் லிங்குசாமி. ஏதாவது ஒரு படத்தைப் பற்றி பேசினாலே முதல்நாள் முதல்ஷோ பார்க்கவேண்டும் என்று நினைப்போம். அதே மாதிரிதான் மாற்றான் படமும் என்று போட்டாரே ஒரு போடு. மிகப்பெரிய காமெடி கேட்டதுபோல சிரிக்கத்தான் முடிந்தது.
மாற்றான் பார்ட் 2!
இதைவிட பெரிய நகைச்சுவை என்னவென்றால், மாற்றான் புரமோஷனுக்கு சன் டிவிக்கு போயிருந்தவரிடம், 'இப்படத்தின் செகன்ட் பார்ட் வருமா?' என்று கேட்டதுதான் தாமதம் என்ன சொல்வது என்று தெரியாமல் பார்ட் பார்ட்டாக சிரித்து சமாளித்திருக்கிறார் சூர்யா.

சசிகுமாருடன் கைகோர்க்கிறார் சூர்யா?



Surya Join Hands With Sasikumar

அடுத்து சசிகுமார் படத்தில் சூர்யா நடிப்பதற்கான ஆரம்ப வேலைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சசிகுமார்தான் இன்றைக்கு கோடம்பாக்கத்தின் மினிமம் கியாரண்டி நடிகர் கம் இயக்குநராக உள்ளார்.
ஹீரோ என்று பார்த்தாலும், முன்னணி நாயகர்களுக்கு இணையாக வந்துவிட்டார். சுந்தரபாண்டியன் அவரை ஒரு படி மேலே உயர்த்திவிட்டது.
இந்த நிலையில் அவரது இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஹீரோவாக சூர்யா நடிக்கக் கூடும் என்று தெரிகிறது.
சூர்யாவுக்காக சசிகுமார் கதை ஒன்றை தயார் செய்து இருப்பதாகவும் அவரும் நடிக்க சம்மதித்து விடடதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சூர்யா கூறுகையில், "சசிகுமாரும், நானும் சந்தித்துப் பேசியது உண்மைதான்.
கதை பற்றியும் விவாதித்துள்ளோம். ஆனால் இன்னும் எதுவும் முடிவாகவில்லை. பார்க்கலாம்," என்றார்.
அப்படி முடிவானால், சிங்கம் 2 முடிந்தபிறகு இந்தப் படத்துக்கான வேலைகள் ஆரம்பமாகுமாம்!

Thursday, November 1, 2012

பீட்சா :விமர்சனம்


 கதையின் கரு: பீட்சா கடையில் வேலை செய்யும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடந்த திகிலான அனுபவங்கள்.


நரேன் நடத்தும் ‘பீட்சா’ கடையில், ‘டெலிவரி பாய்’ ஆக வேலை செய்கிறார், விஜய் சேதுபதி. இவருடைய காதல் மனைவி, ரம்யா நம்பீசன். இவருக்கு ஆவி, பேய் கதைகளில் ஈடுபாடு அதிகம். விஜய் சேதுபதி அதைக் கேட்டாலே நடுங்குகிறார்.ஒருநாள் இரவில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஒரு தனிமை பங்களாவுக்கு, ‘பீட்சா’ டெலிவரி செய்ய போகிறார், விஜய் சேதுபதி. அழைப்பு மணியை அழுத்தியதும், ஒரு பெண் கதவை திறக்கிறாள். சில்லறை எடுத்து வருவதாக கூறிவிட்டு, மாடிக்கு போனவள் திரும்பி வராததால், விஜய் சேதுபதி மாடிக்கு போகிறார்.



அங்கே அந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். சற்று நேரத்தில் அவளுடைய உடல் மாயமாக மறைந்து விடுகிறது. அதிர்ச்சியும், பதற்றமும் அடைந்த விஜய் சேதுபதி அங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்கிறார். கதவு உள்பக்கமாக பூட்டிக்கொள்கிறது.அந்த வீட்டுக்குள் விஜய் சேதுபதிக்கு நடக்கும் திகிலான அனுபவங்களும், அதன்பிறகு நடைபெறும் எதிர்பாராத திருப்பங்களும்தான் கதை.


விஜய் சேதுபதி, கடை முதலாளி நரேன் வீட்டுக்கு போவதில் இருந்து திகில் ஆரம்பம். பேய் பிடித்த நரேனின் மகள் விஜய் சேதுபதியை உக்கிரமாக பார்க்கும் பார்வை, குலை நடுங்க வைக்கிறது.பீட்சா பெட்டியுடன் விஜய் சேதுபதி அந்த பேய் பங்களாவுக்குள் போனதும், கதவு உள்புறமாக பூட்டிக்கொள்வது, சில்லறை எடுத்து வரப்போன பெண் திரும்பி வராதது, அவரைத்தேடி நரேன் மாடி ஏறுவது என காட்சிக்கு காட்சி இதய துடிப்பு எகிறுகிறது.


கடைசியில், ‘சஸ்பென்ஸ்’ உடையும்போது, அட, இதற்கு போய் இவ்வளவு பயப்பட்டு இருக்கிறோமே என்று சிரிப்பு வருகிறது.


பீட்சா டெலிவரி செய்யும் இளைஞராக விஜய் சேதுபதி, முக்கால்வாசி படம் வரை அனுதாபம் சம்பாதிக்கிறார். அவருடைய காதல் மனைவியாக ரம்யா நம்பீசன். இருவரின் நெருக்கம், கதகதப்பான கிளுகிளுப்பு.‘ஆடுகளம்’ நரேன், ஓவியர் வீரசந்தானம் போன்ற பழகிய முகங்களுடன் சில புதுமுகங்களும் இருக்கிறார்கள்.


சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும், கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும் மிரட்டலான அம்சங்கள்.ஒரு இளம் காதல் தம்பதிகளின் இயல்பான ஊடல்–கூடலுடன் ஆரம்பிக்கும் படம், மெதுவாக திகில் பாதையில் பயணித்து, ஒரு கட்டத்தில் தியேட்டரை அமைதியில் உறைய வைக்கிறது.
கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக்கற்கள் காணாமல் போனதை பீட்சா கடை அதிபர் நரேன் அத்தனை சுலபமாக எடுத்துக்கொள்வது, காதுகளில் முழம் கணக்கில் பூ சுற்றுகிற சீன். ‘சஸ்பென்ஸ்’ உடையும்போது, எல்லாமே காசுக்காகவா? என நம்ப முடியவில்லை.


கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது போல், பீதியூட்டியவன் அந்த பீதிக்குள் சிக்குகிற முடிவு, சூப்பர்.

ரஜினியுடன் நடித்த அனுபவம்... புல்லரிக்கும் தீபிகா படுகோன்



Deepika Padukone Admires Rajinikanth

ரஜினியுடன் நடித்த அனுபவத்தை புல்லரித்து சொல்லிக் கொண்டிருக்கிறார் கோச்சடையான் நாயகி அனுஷ்கா.
மேலும் இந்தியாவிலிருந்து வெளியாகும் முதல் சர்வதேசப்படம் என்ற பெருமை ரஜினியின் கோச்சடையானுக்கு கிடைக்கும் என்கிறார் அம்மணி.
ரஜினி, தீபிகா படுகோனே ஜோடியாக நடித்த ‘கோச்சடையான்' படம் விரைவில் ரிலீசாக உள்ளது. டப்பிங், ரீரிக்கார்டிங் போன்ற இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
படத்தின் நாயகி தீபிகா சமீபத்தில் அளித்த பேட்டியில், ரஜினியுடன் நடித்தது குறித்து குறிப்பிட்டிருந்தார். 'ரஜினியுடன் நடித்தது மறக்க முடியாத இனிய அனுபவம்' என்றார் அவர்.
மேலும் அவர் கூறுகையில், "ரஜினி படப்பிடிப்பு அரங்குக்குள் நுழையும்போதே தெம்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார். தொழில் மீது அவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பை அவரது கண்களிலேயே காண முடியும். உடல் நிலை பாதிக்கப்படுவதற்கு முன்பு எந்த அளவு ஈடுபாட்டுடன் இருந்தாரோ அதே அளவு ஈடுபாட்டுடன் இப்போதும் இருக்கிறார். அதில் கொஞ்சம்கூட குறையவில்லை," என்றார்.

இந்தியாவின் அழகி நமீதா - ஜப்பான் டிவி சேனல் அறிவிப்பு



டோக்கியோ: இந்தியாவின் அழகி நமீதா என ஜப்பானின் புகழ்பெற்ற டோக்யோ தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அழகிய பெண்களின் புகைப்படங்கள், அவர்களின் அணுகுமுறை போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பிரபலத்தை அழகியாக அறிவிக்கிறது டோக்யோ டிவி.
namitha is indian beauty says japanese tv channel
இந்த ஆண்டு இந்தியாவின் அழகியாக புகழ்பெற்ற நடிகை நமீதாவை அறிவித்துள்ளது டோக்யோ தொலைக்காட்சி.
இந்தியாவின் புகைப்படக் கலைஞர் கார்த்திக் சீனிவாசன் எடுத்த புகைப்பட ஆல்பத்திலிருந்து நமீதாவின் ஒரு புகைப்படத்தைத் தேர்வு செய்து, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து அந்த தொலைக்காட்சி வெளியிட்டுள்ள அறிவிப்புக் கடிதம்:
'யாரி சுகி கோ ஜி - அர்பன் லெஜன்ட்ஸ் ஸ்பெஷல்' (Yari-sugi ko-ji -Urban Legends
Special) எனும் தலைப்பில் வரும் நவம்பர் 2-ம் தேதி ஒரு சிறப்பு ஒளிபரப்பை மேற்கொள்கிறோம். இதில் இந்தியாவுக்கான அழகியாக நடிகை நமீதாவை தேர்வு செய்துள்ளோம்.
வரும் நவம்பர் 2-ம்தேதி இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சுவாரஸ்யமான உண்மைகள், சம்பவங்களை தொகுத்து வழங்குவதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அழகிகள் பற்றி சிறப்பு நிகழ்ச்சியை வழங்குகிறோம். அழகு என்பது நாட்டுக்கு நாடு எப்படி மாறுபடுகிறது என்பதைக் காட்டுவதுதான் நோக்கம்.
இதற்காக இந்திய கலைஞர் கார்த்திக் சீனிவாசன் எடுத்த நடிகை நமீதாவின் படத்தை இந்திய அழகின் பிரதிநிதியாக தேர்வு செய்துள்ளோம்.
Namitha
இந்திய அழகின் பிரதிநிதியாக நமீதாவின் படத்தை தேர்வு செய்துள்ளோம் என்பதைத் தெரிவிக்கவே இந்த முறையான அறிவிப்பு," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

”சோனியா நினைவு நாள்” ... பகீர் அழைப்பிதழ் அனுப்பிய தமிழக காங்கிரஸ் கட்சி!



 Sonia Gandhi S 28th Death Anniversary

சென்னை: தமிழகக் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி மீதான பாசத்துக்கே அளவு இல்லை போலும்! தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தி நினைவுநாள் தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட செய்தி அறிக்கையில், "அன்னை சோனியா காந்தியின் 28-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு" என்று அனுப்பி வைக்க அனைவருமே பதறிப் போயினர்!
அனைத்து ஊடகங்களுக்கும் மின் அஞ்சல் மூலம் "அன்னை சோனியா நினைவு நாள்" நிகழ்ச்சி அழைப்பிதழை அனுப்பிவிட்டுவிட்டனர். செய்தியாளர்கள்தான் பதறியடித்துக் கொண்டு காங்கிரஸ் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விவரம் தெரிவிக்க "திருத்தப்பட்ட" அழைப்பிதழை அனுப்பி வைத்தனர்.
"தட்டச்சுப் பிழையால் இத்தகைய தவறு நேர்ந்துவிட்டது, திருத்திய செய்தியை வெளியிடவும்" என்று விளக்கம் வேறு!
அப்ப காங்கிரஸ் கட்சியில் அன்னை என்றால் சோனியா மட்டும்! அது எட்டானாலும் எழவானாலுமா? பெருங்கூத்தாக இருக்கிறதே!

Tuesday, October 30, 2012

முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு கொட்டும் மழையில் வந்து அஞ்சலி செலுத்தி ஜெ.


பசும்பொன் கிராமத்தில்
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் இன்றுகாலை 105வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நடந்தது. இதில் அரசின் சார்பில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், செல்லூர் ராஜூ, முனுசாமி, செந்தில் பாலாஜி, காமராஜ், சுந்தரராஜன், கோகுல இந்திரா, செந்தூர் பாண்டியன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல பல்வேறு கட்சிகளின் சார்பிலும் பிரதிநிதிகள் வந்து அஞ்சலி செலுத்தினர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார்.
சென்னையில் ஜெ. அஞ்சலி
சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலை இன்று மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அங்கு முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் முதல்வர் அஞ்சலி செலுத்த வந்திருந்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பலரும் உடன் வந்து கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
திமுக சார்பில் டி.ஆர்.பாலு
திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் டி.கே.எஸ். இளங்கோவன், ஜெ. அன்பழகன், டி.ஆர்.பாலு மகன் ராஜா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், குமரி அனந்தன், திருநாவுக்கரசர், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோரும் தேவர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.
பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோரும் பல்வேறு கட்சியினர், அமைப்பினரும், தேவர் சமூகத்தினரும் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மட்டமான படங்கள் சகிக்காமல் தமிழ் சினிமாவைக் காப்பாற்ற இயக்குநரானேன்!’- மணிரத்னத்தின் ஊமைக் குசும்பு



Conversations With Maniratnam Irks Film Makers

எழுபதுகளில் நான் பார்த்த மோசமான படங்கள்தான் என்னை இயக்குநராக மாற்றின. தமிழ் சினிமாவைக் காப்பாற்றத் தூண்டின, என மனம் போன போக்கில் பேசி சர்ச்சை கிளப்பியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
கான்வர்சேஷன் வித் மணிரத்னம் என்ற புத்தகத்தில் அவரது பேட்டி இடம்பெற்றுள்ளது. பொதுவாக அதிகம் பேசாதவர் என்று அறியப்படும் மணிரத்தனம், இந்தப் பேட்டியில் நிறைய பேசியுள்ளார். அப்படி பேசியதால்தான் இவரது மனதுக்குள் எத்தனை இருட்டு நிறைந்து கிடக்கிறது என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அந்தப் பேட்டியின் ஒரு பகுதி இது:
‘ஒரு ஒழுக்கமான எம்.பி.ஏ.ஸ்டூடண்டா நான் பாட்டுக்கு என் வேலையை பாத்துக் கொண்டு இருந்திருக்க வேண்டியவன் நான். ஆனால் எழுபதுகளில் வந்த மட்டமான தமிழ்ப் படங்கள்தான், தமிழ் சினிமாவை நாமாவது காப்பாற்ற வேண்டும் என என்னை உணரவைத்தது.
பாலசந்தர் மற்றும் மகேந்திரன் படங்கள் தவிர்த்து, 70 களில் தமிழ் சினிமாவில் பல குப்பையான படங்களை நான் தொடர்ந்து பார்க்க நேர்ந்ததால், கோபப்பட்டுதான் நான் சினிமா எடுக்க வந்தேன். அப்போது மற்ற இயக்குனர்களும் நல்ல படங்கள் எடுத்திருந்தால் நான் தமிழ் சினிமாவுக்கு வந்தே இருக்கமாட்டேன்," என்கிறார் மணிரத்னம்.
மணிரத்னம் எடுத்ததில் எது ஒரிஜினல், எது நல்ல படம் என்பதை அவரே விளக்கிச் சொன்னால்தான் உண்டு. தொடர்ந்து 4 தோல்விப் படங்கள் தந்தவர் இதே மணிரத்னம்தான். அனைத்துப் படங்களிலும் ஏதாவது ஒரு புராணத்தைக் கட்டிக் கொண்டு அழும், இவர் நாயகன் எடுத்த கதையை முக்தா சீனிவாசன் கடந்த ஞாயிறன்று பிரித்து மேய்ந்துவிட்டார்.
எழுதுபதுகளில் பல அருமையான படைப்புகள் வந்தன. எழுபதுகளில் இவர் குறிப்பிடுவது பாலச்சந்தரையும், போனால் போகட்டுமென்று மகேந்திரனையும் மட்டுமே.
அந்த காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த ஸ்ரீதரையோ பாலுமகேந்திராவையோ, ஏன் இன்றும் வியக்க வைக்கும் படைப்பான அவள் அப்படித்தான் தந்த ருத்ரையாவையோ விட்டுவிட்டது ஏனோ.. எழுதுபதுகளில்தான் பாரதிராஜா என்ற சினிமா புரட்சியாளன் அழுத்தமாக தடம் பதித்தான் என்பதும் இந்த இருட்டு ஸ்பெஷலிஸ்ட் மணிரத்னத்துக்கு தெரியாமல் போனது ஏனோ?
'மணிரத்னம் தன் படங்களின் நேர்மை குறித்த யோக்கியமான விவாதத்தை முதலில் தொடங்கி வைக்கட்டும். மற்ற படைப்பாளிகளை விமர்சிக்கும் தகுதி அவருக்கில்லை!' - இது மணிரத்னத்தின் பேட்டி குறித்து இன்றைய படைப்பாளி ஒருவரின் காட்டமான விமர்சனம்!
நியாயம்தானே!

Monday, October 29, 2012

நடிகர் சிவகுமாருக்கு என்ன ஆச்சு?

Sivakumar Family Denies Reports On His Health
நடிகர் சிவகுமாருக்கு உடல்நிலை சரியில்லை என்று வந்த செய்திகளுக்கு அவர் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகுமார் திடீரென்று கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக நேற்று மாலை ஒரு தகவல் பரவியது.
விசாரித்தபோது, 'இது வெறும் வதந்திதான்'' என்று சிவகுமார் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
"சிவகுமாரும், குடும்பத்தினரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை சென்றார்கள். அப்போது, சிறுநீரக கல் பரிசோதனை செய்து கொள்வதற்காக, சிவகுமார் அங்குள்ள வேதநாயகம் மருத்துவமனைக்கு சென்றார். அவருடன் மகன் நடிகர் சூர்யாவும் சென்றிருந்தார்.
சிவகுமாருக்கு டாக்டர் கந்தசாமி மருத்துவ பரிசோதனை செய்தார். பரிசோதனை முடிந்து சிவகுமார் வீடு திரும்பி விட்டார். அவர் நலமாக உள்ளார்,'' என்று சிவகுமார் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது.
சிவகுமாரின் பிஆர்ஓவும் பின்னர் இதுகுறித்து தனியாக அறிக்கை அனுப்பியிருந்தார்.

Sunday, October 28, 2012

தில்லு முல்லு


பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான தில்லு முல்லு படம் ரீமேக் ஆகிறது.  வேந்தர் மூவிஸ் சார்பில் எஸ்.மதன் இப்படத்தை தயாரிக்கிறார். இதில் ரஜினி வேடத்தில் சிவா நடிக்கிறார். நாயகியாக இஷா தல்வார் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், கோவை சரளா, டாக்டர் சீனிவாசன், சத்யன், இளவரசு, மனோபாலா, பிரமானந்தம் ஆகியோரும் நடிக்கின்றனர். திரைக்கதை, வசனம் எழுதி பத்ரி இயக்குகிறார். இவர் வீராப்பு, தம்பிக்கு இந்த ஊரு படங்களை டைரக்டு செய்தவர்.
இப்படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். இவர்கள் இணைந்திருப்பது பட உலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சூப்பர் ஹிட் பாடல்களுடன் வந்த ஏ.வி.எம்.மின் மெல்ல திறந்தது கதவு படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதனும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து இருந்தனர்.
லஷ்மண் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் வெண்ணிலா கபடி குழு படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர். பாடல்கள் கண்ணதாசன், வாலி, எடிட்டிங்: பிரவீன்ஸ்ரீகாந்த், ஸ்டண்ட்: ராக்கி ராஜேஷ், நடனம்: கல்யாண், தினேஷ், ஷோபி, அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.

செ‌ன்‌சா‌ர்‌ குழுவை‌ கண்‌கலங்‌கவை‌த்‌த நீ‌ர்‌பறவை‌ ‌


படங்களை பார்த்து சென்சார் போர்டு கண்ணீர் விடுவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லைதான். காரணம், இந்த மாதிரியான படங்களை கூட நாங்க பார்த்து சர்டிபிகேட் தர வேண்டியிருக்கே என்கிற வேதனையில் வருகிற கண்ணீர்தான் அது. ஆனால் அதே சென்சார் போர்டு குழுவினர் நிஜமாகவே படத்தைப் பார்த்து ஃபீல் பண்ணி கண்கலங்கினார்கள் என்றால் அது ஆச்சரியம்தானே. மூன்று தேசிய விருதுகளைதென்மேற்கு பருவகாற்று’ படத்தை இயக்கிய இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் ரெட் ஜெயன்ட் உதயநிதி தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் நீர்ப்பறவை. இந்தப் படத்திற்கு சென்சார் போர்டு சர்டிபிகேட் பெறுவதற்காக சென்சார் போர்டு உறுப்பினர்களுக்கு நீர் பறவை போட்டுக் காட்டப்பட்டது. இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் க்ளைமேக்ஸ் காட்சியைப் பார்த்து நிஜமாகவே கண் கலங்கிவிட்டார்களாம். ஒரு வார்த்தை கூட பேச முடியாதவர்களாக யு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள்.

வி‌மர்‌சனம்‌ – சுந்‌தரபா‌ண்‌டி‌யன்‌


‘சுப்பிரமனியபுரம்’ படத்தின் மூலம் நல்ல இயக்குநராகவும், ‘பசங்க’ படத்தின் மூலம் நல்ல தயாரிப்பாளராகவும், ‘நாடோடிகள்’, ‘போராளி’ ஆகியப் படங்களின் மூலம் நல்ல நடிகராகவும் தன்னை அடையாளப் படுத்திகொண்ட இயக்குநர் சசிகுமார், ‘சுந்தர பாண்டியன்’ படத்தின் மூலம் தன்னை பெண்களுக்கும் பிடிக்கும் காதல் ஹீரோவாக அடையாளப் படுத்திகொண்டிருக்கிறார்.
எப்போதும் கோவமும், கொதிப்புமாக வலம் வந்த சசிகுமார், ‘சுந்தர பாண்டியன்’ படத்தில் காதலும், கலகலப்புமாக வலம் வருகிறார்.
நண்பனின் காதலுக்கு உதவப் போகும் சசிகுமார், தான் காதலித்த பெண்ணை தான் தனது நண்பன் காதலிக்கிறான் என்று தெரிந்து கொண்ட பிறகும், தனது நண்பனின் காதலுக்காக உதவுகிறார். இதற்கிடையில் அதே பெண்ணை வேறு ஒருவன் காதலிக்க இருவருக்கும் இடையே பஞ்சாயத்து தலைவராகும் சசிகுமார் காமெடியான தீர்ப்பை சொல்ல, அதை விட காமெடி அந்தப் பெண் சசிகுமாரை காதலிப்பதாக சொல்கிறாள்.
இறுதியில் சசிகுமாருக்காக அவருடைய நண்பன் வழிவிட, சசிகுமார்-லஷ்மி மேனனின் காதல் வளர்கிறது. இதற்கிடையில் லஷ்மி மேனனை ஒன் சைடாக காதலிக்கும் அப்புக்குட்டி, தொடர்ந்து லஷ்மி மேனனுக்கு தொல்லைகொடுக்க, அதை கேட்கப் போகும் சசிகுமாரின் கோஷ்ட்டிக்கும், அப்புக்குட்டியின் கோஷ்ட்டிக்கும் ஓடும் பஸ்ஸில் கை கலப்பு ஏற்படுகிறது. இந்த சண்டையில் அப்புக்குட்டி பஸ்ஸில் இருந்து கீழே விழுந்து இறந்துப் போகிறார். இதனால் சசிகுமார் ஜெயிலுக்குப் போகிறார்.
இதற்கிடையில் அப்புக்குட்டியின் மரணத்திற்குப் பழிவாங்க சசிகுமாருக்கு அவருடைய நண்பர் ஒருவரே எதிரியாகிறார். அதே நேரத்தில் லஷ்மி மேனனின் முறை பையனான விஜய் சேதுபதியும் தனது முறைப் பெண்ணை காதலித்ததற்காக சசிகுமாரை கொலை செய்ய திட்டம் போடுகிறார். இவரும் சசிகுமாரின் ஒரு நண்பர் தான். இப்படி காதலுக்காக நண்பர்களையே எதிரிகளாக்கிக்கொண்ட சசிகுமாரை இவர்கள் என்ன செய்தார்கள்? ஜெயிலில் இருந்து சசிகுமார் வந்தாரா? லஷ்மி மேனனை கரம் பிடித்தாரா இல்லையா? என்பதுதான் க்ளைமாக்ஸ்.
சசிகுமாரின் முந்தையப் படங்களில் உள்ள நட்பு செண்டிமென்ட் இந்தப் படத்திலும் இருந்தாலும், இதில் அவர் ஹீரோயினை விரட்டி விரட்டி காதலிப்பது, நண்பனின் காதலுக்கு துணைபோவது போன்ற எப்பிசோட்கள் புதுசுதான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு கிராமத்து கதையை நகைச்சுவையும், விறுவிறுப்பும் கலந்து இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகர் கொடுத்திருக்கிறார்.
படத்தின் முதல் பாதியில், பஸ்ஸில் பயணிக்கும் ஹீரோயினை காதலுக்காக ஹீரோ விரட்டுவதையே  சொல்லியிருந்தாலும், அதை எந்தவித அலுப்பும் ஏற்படாத வகையில் திரைக்கதையை ரொம்பவே கஞ்சிதாமாக அமைத்து படத்தை ஜெட் வேகத்தில் இயக்குநர் நகர்த்தியிருக்கிறார்.
முதல் பாதியை காமெடியின் மூலம் நகர்த்திய இயக்குநர் இரண்டாம் பாதியில் சில எதிர்ப்பாராத திருப்பங்களுடன் நகர்த்தி இறுதியில் படத்தை ரசிக்கும்படி முடித்து அனைவருடைய பாராட்டையும் பெற்று விடுகிறார்.
சசிகுமார், இந்த படத்திலும் தன்னை நல்ல நடிகர் என்று நிரூபித்திருக்கிறார். அழுக்குச் சட்டை ஹீரோவாக வலம் வந்த சசிகுமாருக்கு இந்த படத்தில் பலவிதமான காஷ்ட்யூம்களை இயக்குநர் கொடுத்திருக்கிறார். முறைப் பெண்களை கேலி செய்வது, வயதானாவர்களுடன் விளையாடுவது. ஹீரோயினை காதலிப்பது என அனைத்து இடங்களிலும் சகஜமானக நடிப்பை சசிகுமார் வெளிப்படுத்தியிருக்கிறார். ரஜினி ரசிகராக இந்த படத்தில் நடித்திருக்கும் சசிகுமார், டி.ராஜேந்தர் ரசிகரைப் போல தாடியுடன் ஏன் வலம் வருகிறார் என்பது தான் புரியவில்லை!
மலையாளப் புது வரவு லஷ்மி மேனனுக்கு நல்ல ஹோம்லியான முகம். அந்த முகத்திற்கு ஏற்றவாறு பலவிதாமன எக்ஸ்பிரன்ஸ்களை கொடுத்து தனது கதாபாத்திரத்திற்கு கனம் சேர்த்திருக்கிறார். மாடர்ன் டிரஸ், கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்தால் வேலைக்காக மாட்டார். இப்படியே ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்தே காலத்தை ஓட்டுங்க அம்மணி.
படத்தில் நடித்த விஜய் சேதுபதி, அப்புக்குட்டி, நரேன், தென்னவன், செளந்தர ராஜா என அத்தனை பேரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தில் கதாபாத்திரங்கள் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், அத்தனை பேருடைய நடிப்பும் ரசிகர்கள் மனதில் பதியும் விதத்தில் இருக்கிறது.
அதிலும் அப்புக்குட்டி இந்த படத்தில் ஒரு புது பரிணாமத்தில் தோன்றியிருக்கிறார். அவருடைய அளவான நடிப்பும் அமர்க்களப்படுகிறது.
சூரி, இந்த படத்திலும் பரோட்டாவை விடவில்லை என்றாலும், படத்தின் முதல் பாதியை தனது டைமிங் காமெடி மூலம் ரொம்ப ஜாலியாக நகர்த்தி சென்றிருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு சூரிக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் காதலைப் பற்றி சொல்லும் மான்டேஜ் பாடலான “காதல் வந்து பொய்யாக…” பாடல் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. மற்றப் பாடல்களும் படத்திற்கு ஏற்றவாறு உள்ளது.
ச.பிரேம்குமாரின் ஒளிப்பதிவில் அழகான தேனி இன்னும் கூடுதலான அழகோடு ஜொலிக்கிறது. தேர்வு செய்திருக்கும் லொக்கேஷன்களும், அதை படம்பிடித்திருக்கும் விதமும் அருமை.
சசிகுமாரின் உதவியாளரான எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியிருக்கும் முதல் படம் இது. முதல் படத்திலேயே ரசிகர்களின் பல்சை நன்றாக அறிந்திருக்கிறார். அதனால் தான் ஒரே சூழலில் நகரும் திரைக்கதையாக இருந்தாலும், அதை ரசிகர்கள் ஆர்வத்துடன் ரசிக்கும்படி காட்சிகளை அமைத்திருக்கிறார்.
திரைக்கதையை கூர்மையாக அமைத்திருக்கும் இயக்குநர் பிரபாகர், வசனத்தையும் கூர்மையாக எழுதியிருக்கிறார். “எதிரியை ஜெயிக்க நினைக்கனும் அழிக்க நினைக்க கூடாது”, “குத்தினவன் நண்பனாக இருந்தால் அதை கடைசி வரை யாரிடமும் சொல்ல கூடாது.” போன்ற வசனங்கள் கைதட்டல் வாங்கும் வசனங்கள்.
நட்பு, காதல் என்பது தமிழ் சினிமாவின் பழைய ரசம் என்றாலும், அதை கொடுக்கும் விதத்தில் கொடுத்தால் சுவை கூடும் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கும் இயக்குநர் ‘சுந்தர பாண்டியன்’ படத்தை மக்களுக்கு பிடிக்கும் சூப்பர் பாண்டியனாக்கியிருக்கிறார்.

வி‌மர்‌சனம்‌ – சா‌ட்‌டை‌


நடிகர்கள்: சமுத்திரக்கனி, யுவன், தம்பி ராமய்யா, ஜூனியர் பாலையா, யுவன், பாவா லட்சுமணன், கருத்தபாண்டி, மகிமா, சுவாசிகா
ஒளிப்பதிவு: ஜீவன்
இசை: டி இமான்
பிஆர்ஓ: மவுனம் ரவி
தயாரிப்பு: இயக்குநர் பிரபு சாலமன் (ஷாலோம் ஸ்டுடியோஸ்)
எழுத்து – இயக்கம்: எம் அன்பழகன்
சமூக அக்கறையும் சமரசமில்லாத திரைக்கதையும் இயல்பான பாத்திரங்களுமாய் வந்து அவ்வப்போது மனதை வெல்லும் படங்களின் வரிசையில் இன்னும் ஒரு படம், சாட்டை.
ஓரிரு இடங்களில் சினிமாத்தனமான உணர்ச்சிக் குவியலாய் காட்சிகள் அமைந்தாலும், அவற்றில் பெரிதாக நெருடலேதும் இல்லாததால், படத்துடன் ஒன்ற முடிகிறது.
ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் படித்து வந்த அரசுப் பள்ளி, ஆசியர்களின் அக்கறையின்மை, சோம்பேறித்தனம், ஒழுங்கின்மையின் உச்சத்தால் உருப்படாமல் போகிறது. புதிதாக அந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வருகிறார் இளம் ஆசிரியர் தயாளன். ஒரே ஆண்டில் அந்தப் பள்ளி ஒழுக்கம், கட்டுப்பாடு, கலைகள், விளையாட்டு என அனைத்திலும் மேன்மை பெற்று மாவட்டத்திலேயே முதலாவது பள்ளியாக வருகிறது…
எப்படி இது சாத்தியமானது? இந்தக் கேள்விக்கான விடையை ஒவ்வொரு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்ல, தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள்… குறிப்பாக பெற்றோர்களும் தவறாமல் பார்த்துத் தெளிய வேண்டியது இன்றைய அவசியம்!
நேர்மை, ஒழுக்கம், தொலைநோக்குப் பார்வை, எதற்கும் கலங்காத நேரிய சிந்தனை கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியராக சமுத்திரக்கனி. சற்றும் அலட்டிக் கொள்ளாத, நடிப்பென்று சொல்ல முடியாத நடிப்பு.
ஒழுங்கீனமான மாணவர்களை அவர்கள் போக்கிலேயே போய் வெல்வதும், கடைசி வரை ஒத்துழைக்க மறுக்கும் சக ஆசிரியர்கள், கடைசியில் தங்களை அறியாமலேயே கற்றுத் தருதலில் மகா ஆர்வத்துடன் இயங்கச் செய்வதும், அந்த ஸ்போர்ட்ஸ் மீட்டை அவர் நடத்தும் விதமும்… ஒரு பள்ளியின் நிகழ்வுகளை அசலாகக் கண்முன் நிறுத்தின.
அரசுப் பள்ளிகளில் படித்த ஒவ்வொருவரும் நிச்சயம் ஒரு தயாளனைச் சந்தித்திருப்பார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒன்றிரண்டல்ல.. குறைந்தது அரை டஜன் சிங்கப்பெருமாள்களாவது (தம்பி ராமய்யா) ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் இருக்கவே செய்கிறார்கள். தங்கள் பள்ளிக்கு ஸ்போர்ட்ஸ் மீட் நடத்தும் அந்தஸ்தைப் பெற்றுத் தந்த தயாளனுக்காக தலைமையாசிரியர் கைத்தட்டச் சொல்லும் இடத்தில் தம்பி ராமையா ஒரு பாவம் காட்டுகிறாரே… க்ளாஸ்!
உள்ளே போவதும் வருவதுமாக இருக்கும் அந்த அழுக்கு சாக்ஸ்.. அழுத்தமான குறியீடு!
தன் காலத்தில் பள்ளி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பாதா… என்ற ஆதங்கமும், சக ஆசிரியர்களைக் கட்டுப்படுத்த முடியாத இயலாமையும் சதா முகத்தில் இழையோட வரும் தலைமை ஆசிரியராக ஜூனியர் பாலையா. மனதை நெகிழ்த்துகிறார்.
இந்தக் கதையில் ப்ளஸ் டூ படிக்கும் மாணவன் – மாணவி காதலும் உண்டு. அந்தக் காட்சி வரும்போதெல்லாம் மனசு பதறுகிறது. நல்ல வேளை, அந்தக் காதலின் முடிவு யாருக்கும் பாதகமில்லாமல் அமைக்கப்பட்டிருப்பதில் ஒரு நிம்மதி. இந்தப் பாத்திரங்களில் நடித்துள்ள யுவன், மகிமா இருவருமே ப்ளஸ் டூ மாணவர்களுக்கே உரிய உடல்மொழியை வெளிப்படுத்தியுள்ளனர். கருத்த பாண்டி வரும் காட்சிகள் கலகல!
சாட்டையில் ஓட்டைகளும் உண்டு. ஒரே பாடலில் பணக்காரனாவது போன்ற க்ளீஷேக்கள் இந்தப் படத்திலும் உண்டு. ஒட்டுமொத்தப் பள்ளியும் ஒரு ஆசிரியரை மட்டுமே நம்பியிருப்பதாகக் காட்டுவது கொஞ்சம் சினிமாத்தனமான மிகைதானே! மன்னிப்பும் அளவு கடந்த நம்பிக்கையும் சில நேரங்களில் பிழையாகப் போகவும் வாய்ப்பிருக்கிறதல்லவா..
ஆனால் இன்றைக்கு மோசமாக உள்ள அரசுப் பள்ளி ஒவ்வொன்றும் இந்தப் படத்தில் வரும் பள்ளி மாதிரி திருந்தி உயர்ந்தால் எப்படியிருக்கும் என்ற ஏக்கம், அந்தக் காட்சிகளை ஏற்றுக் கொள்ள வைக்கிறது என்பதே உண்மை. பேதமில்லாத கல்விதான் நோக்கம் எனும்போது, அது அரசுப் பள்ளிகளிலேயே கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு இந்த பாழாய்ப் போன மிடில்கிளாஸ் என்றைக்குதான் வருமோ?
இமானின் இசை சுமார். இந்தப் படத்துக்கு அது ஒரு சம்பிரதாயம், அவ்வளவுதான். ஜீவனின் ஒளிப்பதிவு, கதையின் யதார்த்தத்தை மீறாமல் அமைந்திருக்கிறது.
புதிய இயக்குநர் அன்பழகன் தன் கதையில் எந்த வணிகத் திணிப்புகளுக்கும் இடம் கொடுக்காதது உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
படைப்புகள் படைப்பாளிகளுக்கானவை அல்ல, சமூகத்துக்கானவை என்பதை உணர்ந்து புதிய இயக்குநருக்குப் பக்கபலமாக இருந்த இயக்குநர்கள் சமுத்திரக்கனி, பிரபு சாலமனுக்குப் பாராட்டுகள்.

நாய்..நாய்..மைக்கைத் தூக்கிட்டு வந்துறீங்க.. அடிச்சுருவேன் பத்திரிகையாளர்களை கேவலமாக திட்டிய விஜயகாந்த்



 Vijayakanth Slam Media
சென்னை: தேமுதிக எம்.எல்.ஏக்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது பற்றி கேள்வி எழுப்பியதற்கு பத்திரிகையாளர்களை சகட்டு மேனிக்கு திட்டித் தீர்த்துவிட்டார் அக்கட்சி தலைவர் விஜயகாந்த். விஜயகாந்த் உடன் வந்த தேமுதிக எம்.எல்.ஏ. தாக்கியதில் மூத்த பத்திரிகையாளர் பாலு காயமடைந்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேற்று தேமுதிக எம்.எல்.ஏக்கள் சுந்தரராஜனும் தமிழ் அழகனும் சந்தித்துப் பேசினர். இதனைத் தொடர்ந்து தேமுதிகவில் பிளவு வெளிப்படையாக வெடித்தது.
இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் மதுரை செல்வதற்காக வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் மூத்த பத்திரிகையாளர் பாலு கேள்வி எழுப்ப சட்டென கோபமடைந்து ‘போய்யா..போய்.ய்யா' என்று கடுப்பாக மிரட்டினார்.
ஜெயலலிதாவிடம் கேளுங்க...
பின்னர் மைக்குகளை நீட்டிக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களிடம் வந்த அவர், நாட்டுல எவ்ளோ பிரச்சனை.. மின்வெட்டை பத்தி பேசலாம்.. டெங்குவை பத்தி பேசலாம்.அதைவிட்டுவிட்டு.." என்று கூறிக் கொண்டிருந்தவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டனர் பத்திரிகையாளர்கள். இதில் ஆவேசமடைந்த விஜயகாந்த், போய் ஜெயலலிதாவை கேளுய்யா.. போய் அங்கெல்லாம் கேளுய்யா" என்று ஆக்ரோஷமாக கூறியதுடன் "அடிச்சிருவேன்" என்றும் கையை ஓங்கியபடி நிலையத்துக்குள் நுழைய முயன்றார்.
நாய்...நாய்..
அப்போது முதலில் விஜயகாந்த் கோபமாக பேசிய பத்திரிகையாளர் பாலு மீண்டும் கேள்வி எழுப்ப., நாய்.. நாய்களா... வந்துட்டாங்க..உங்க கம்பெனியா சம்பளம் கொடுக்குது.. பேட்டி கொடுக்க... என்று ஆவேசமாகக் கூறியபடியே சென்றார். அப்போது செங்கல்பட்டு தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. முருகேசன் அந்த பத்திரிகையாளரைத் தடுக்க அவர் கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசில் புகார்
பத்திரிகையாளர் பாலு சென்னை விமான நிலைய காவல்நிலையத்தில் தம்மை தாக்கிய தேமுதிக எம்.எல்.ஏ. முருகேசன் மீது நடவடிக்காகை எடுக்கக் கோரி புகார் கொடுத்திருக்கிறார்.

Friday, October 26, 2012

வழுக்கி விழுந்து அலறித் துடித்த ஹன்சிகா!



Hansika Modhwani Injured
ஷூட்டிங்குக்காக மும்பை சென்ற நடிகை ஹன்சிகா மோத்வானி அங்கு ஹோட்டல் அறை பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டார். உடனடியாக விரைந்து வந்த ஹோட்டல் ஊழியர்கள் முதலுதவி செய்து சுளுக்கை எடுத்து விட்டனர். மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் சென்னையிலிருந்து மும்பை போனார் ஹன்சிகா. அங்கு ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கினார்.
நிகழ்ச்சிக்குச் செல்வதற்கு முன்பு குளிப்பதற்காக பாத்ரூமுக்குப் போனார். அப்போது தரையில் வழுக்கி கீழே விழுந்து விட்டார். இதனால் உடலில் சுளுக்கு மற்றும் வலி ஏற்பட்டு அலறித் துடித்தார்.
ஹோட்டல் ரூம் சர்வீஸை அவசரமாக போனில் அழைத்தார். இதையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்களே சுளுக்கை எடுத்து விட்டு ஹன்சிகாவுக்கு முதலுதவி செய்தனர். பின்னர் டாக்டர் வரவழைக்கப்பட்டார்.

ஒய்.ஜி.மகேந்திரனின் 'விசில்' ...ரஜினி கொடுத்த ஐடியா!



Rajini S Idea Yg Mahendra

விசில் மூலம் பாட்டுப்பாடுவது ஒரு கலை. அது நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு கைவந்த கலை. சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி பாராட்டு விழாவில் விசில் அடித்து பாரட்டுப் பெற்றார்.
மகேந்திரனுக்கு வெகு காலமாகவே தனது விசில் திறமையை ஊர் உலகத்திற்கு நிரூபிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. இந்த நிலையில், விசில் பாட்டுக்களை சிடியாக போடலாமே என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐடியா கொடுக்கவே அதை உடனே செயல்படுத்திவிட்டார் ஒய்.ஜி.மகேந்திரன்.
எம்.எஸ்.வி இசையில் வெளியான சுமார் ஏழு பாடல்களை தனது விசில் சப்தத்தால் பாடி, அதை சரிகம நிறுவனம் மூலம் சி,டியாகவும் வெளியிட்டு விட்டார்.
நினைத்த மாதிரியே ஊர் உலகம் பாராட்டும் இந்த இசை தகட்டின் முதல் ரசிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிதானாம். விசில் அடித்தால் கிராமங்களில் அடிக்க வருவார்கள், ஆனால் சிட்டி ஒய்.ஜி. மகேந்திரனுக்கோ பாராட்டு குவிகிறது.
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பீலிங்...!

தப்புத் தப்பா பேசறாங்களே... - காஜலின் வருத்தம்



Kajal S Explanation
என்னைப் பத்தி தப்புத் தப்பா பேசறாங்க... தப்பா செய்தி பரப்பறாங்க... அதான் எனக்கு கவலையா இருக்கு! - இப்படிச் சொல்லி வருத்தப்படுபவர் முன்னணி நாயகி காஜல் அகர்வால்.
காஜல் அறிமுகமான போது, தமிழில் அவரைச் சீந்த ஆளில்லாத நிலை.
ஆனால் தெலுங்கில் அவர் பெற்ற வெற்றி, பெரும் சம்பளத்தில் தமிழ் வாய்ப்புகளைத் தேடித் தந்தது.
ஆனால் அவரது இரண்டாவது ரவுண்டில் நான் மகான் அல்ல வெற்றி பெற்றாலும், சமீபத்தில் வெளியான மாற்றான் பெரும் ஏமாற்றத்தைத் தந்துவிட்டது.
விஜய்யுடன் நடித்த 'துப்பாக்கி' தீபாவளிக்கு வருகிறது. இந்தப் படத்தை அவர் பெரிதும் நம்பியுள்ளார். கார்த்தியுடன் 'ஆல் இன் அழகு ராஜா' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் மூன்று படங்கள் கைவசம் உள்ளன.
ஆனால் இனி புதிய படங்கள் எதுவும் அவருக்கு வருமா என்று கேட்கும் அளவுக்கு இன்டஸ்ட்ரியில் அவரைப் பற்றி தவறான செய்திகள் பரவி வருகிறது.
இதனால் கவலையடைந்துள்ள காஜல், "என்னைப் பற்றி நிறைய வதந்திகள் பரப்பப்படுகின்றன. சில படங்களில் இருந்து நான் நீக்கப்பட்டதாகவும், பத்திரிகையாளர்களை நான் மதிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. இவற்றில் உண்மை இல்லை.
தயவு செய்து என்னைப் பற்றி தவறாக செய்தி பரப்ப வேண்டாம். இது என் கேரியரையே பாதிக்கும் அளவுக்கு மாறியுள்ளது," என்றார்.
 

நடிகைகள் பற்றாக்குறையால் அல்லாடும் தமிழ் சினிமா!!

'நண்பா... அடுத்த படம் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன்... டாப் 5 ஹீரோயின்கள் பெயர் சொல்லேன்.... '
"அது வந்து... ம்ம்... டாப்பா... அப்படி யாரும் இல்லியே... அமலாபால், ஹன்ஸிகா, காஜல்... இவ்ளோதான் தேறுவாங்க போலிருக்கு. இதுல அஞ்சு பேரை எங்கே தேடறது...?"
heroine shortage kollywood

"ஏன்.. மத்தவங்கள்லாம் ஹீரோயினா தெரியலையா..."
"அவங்க நடிகைகள் என்ற அளவில்தான் இருக்காங்க... இரண்டு பேர்ல ஒருத்தரா நடிக்கிற நடிகைகள் அவ்வளவுதான்..."
"சரி, முன்னணி ஹீரோக்களோட நடிக்கிற மாதிரி யாரும் தேறுவாங்களா..."
"ம்ஹூம்.. மிஞ்சிப் போனா... அனுஷ்கா ஒருத்தர்தான். த்ரிஷா, நயன்தாரால்லாம் ரிடையர்மெண்ட் ஸ்டேஜ். ஏதோ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ மாதிரி..."
"சரி.. புதுசா ரெண்டு மூணு பேர் வந்தாங்களே... சுந்தர பாண்டியன் லட்சுமி மாதிரி.. அவங்கள்லாம் எப்படி?"
"அட சும்மாருங்க... அந்த லட்சுமி முதல் படத்துல 3 லட்சம் வாங்குச்சு. இப்போ அப்படியே ஜம்ப் பண்ணி 40 லட்சம் வரைக்கும் கேக்குது!"

தமன்னா, இலியானா?
'அட போங்கண்ணா... மெட்ராசிலிருந்து போன் கால் வருதுன்னா அவங்க டேமேஜருங்க.. ஸாரி மேனேஜருங்க கூட போனை அட்டன்ட் பண்றதில்லை!!'

இந்த நீத்து சந்திரா, சமீரா ரெட்டி?
என்ன விளையாடறீங்களா.. அவங்கள இப்போ யாரு ஞாபகத்துல வச்சிருக்காங்க!!
"என்னப்பா இப்படி சொல்லிட்டே... இந்த ரிச்சான்னு ஒரு பொண்ணு நல்லா ப்ரஷ்ஷா வந்துச்சே... இனியான்னு நடிக்கத் தெரிஞ்ச பொண்ணு... அப்புறம் ராதா மகள்கள்... இவங்களையெல்லாம் விட்டுட்டியே!"
நண்பா.. நிலைமையே தெரியாம கோடம்பாக்கத்துல சுத்திக்கிட்டிருக்க நீயெல்லாம்... அவங்கள்லாம் சம்பளத்தொகை சொல்லும்போது தெறிச்சு ஓடணும் போலிருக்கும்... அதுவும் ராதாவோட பொண்ணுங்க இருக்காங்களே... அவங்க ரெண்டு பேத்தையும் வச்சு கோடம்பாக்கத்தையே மொத்தமா சுருட்ட முடியுமா பாக்கறாங்கப்பா... அந்தக் காலத்துல அம்பிகா - ராதா மாதிரி, இப்போ கார்த்திகா - துளசிய கொண்டு வரணும்ங்கிறதுதான் திட்டமாம்!

சரி... இப்போ முன்னணில இருக்கிற நடிகைகள் சம்பளம் எவ்வளவு?
முன்னே மாதிரி ஒளிச்சி மறைச்சி பேசி பயனில்ல நண்பா... அவங்கே டிமான்ட் பண்ணி இம்சிக்கும் போது, நாம மட்டும் ஏன் அதை சொல்லாம இருக்கணும்... இதோ லிஸ்டு.. அனுஷ்கா, நயன்தாரா - ரூ 1.50 கோடி. த்ரிஷா, ஹன்சிகா ரூ 75 லட்சம். ஸ்ருதிஹாஸன் (நான் பாலிவுட்டுலருந்து வர்றேனாக்கும் என்ற பந்தாவுடன்) ரூ 70 லட்சும், அமலா பால் 70 லட்சம், அஞ்சலி 70 லட்சம்!!
கண்ணக் கட்டுது நண்பா.. நல்ல அம்சமா ஒரு பத்து ஹீரோயின்களை இறக்குமதி பண்ண வேண்டியதுதான். என் அடுத்த படத்துல நிச்சயம் ஒரு புது ஹீரோயின்தான்!!
-இது ஏதோ கற்பனையான உரையாடல் அல்ல... கடந்த மூன்று தினங்களில் வெவ்வேறு இயக்குநர்கள் - ஹீரோக்களுக்கிடையே க்கிடையில் நடந்த உரையாடல்களின் தொகுப்பு... நிஜமான டயலாகுங்க!!

Friday, April 13, 2012

Oru Kal Oru Kannadi review (ஒரு கல் ஒரு கண்ணாடி)

Movie introduction starting from flashback like rajesh old movies. Flim can be watchable because of santhanam , his comedy was awesome. Especially the climax comedy was superb...

Songs location was nice but choreography was not much good  for most of the songs, udayanithi needs to improve his dance as well acting.

Venam machi venam song was nice to watch. Santhanam romance scene with his pair  making us very bore.

Udanithy with hansika love sequences  not much touching and attracting , director missed it.

Climax asusal one guest appearance , that is Arya and  It resemblance like Boss engira baskaran and SMS.

Overall movie quality was Nice not much when compared to SMS and Boss engira baskaran but one time watchable.

Santhanam dressing looks like Ramarajan , it was nice..

 

Thursday, March 29, 2012

தனுஷ் "3" திரை விமர்சனம்


“3″ The KOLAVERI Movie 

Finally the Wait is over…..The KOLAVERI movie is here….. ’3′ hits the Screen,made by the ’3′ great artists who are the predecessors of ’3′ masters of Tamil Industry – Dhanush (son of Director KasthuriRaja who is also the producer of this movie),Shruti Hassan(Daughter of Kamalhassan), Aishwarya (Daughter of Rajnikanth as well as wife of Dhanush). Infact I didn’t find any other relation with this name and the movie….
The movie…its all about Ram (Dhanush) and Janani(Shruti) moving through all the feelings from their teenage +2 days till the tragedy after their marriage…and that is the suspense of the movie. The intro scene itself will give you a shock ,which is the funeral of Dhanush….ooohh ..I am sorry…I am not supposed this to say this…
The entire story runs in the Flashback….which is the real beauty and life of the movie. I am sure that everybody will resemble themselves to the teenage Ram who is driving a Yamaha RX100 bike,waiting under the tree for a passing look from the girl,joining the Tuition class with the best friend only to be with her for some time,and avoiding the best friend to have a ride in his bike with Girl friend…etc..etc.. These are the things to be highlighted about the 1st half,which made the movie…i should say THE BEST…
The 2nd half completely turns the mood and take you to another genre, which is the masterpiece of National Award Winner Dhanush – A Psychological Thriller. I really doubt about this phase which can entertain all the type of Audience because of a big transition,which is providing a Hot and Cold treatment with romance and bipolar disorder.
Dhanush lived in the character Ram,which resembles him to his ‘Thulluvatho Ilamai’ looks and ‘Kathal Kondein’ attitude. Shruti Hassan proved her acting skills specially in her teenage girl phase. Aishwarya surprised with her direction ability in the debut movie which is really appreciable. The main personality to be mentioned in Anirudh, the music Director. The boy made the world to dance with his Kolaveri Steps, pushed this movie to the next level with amazing background Scores. The BGM is a spicy add on to all the best scenes in this movie. There is a special applause goes to the parental characters did by Prabhu,Bhanupriya and Rohini. Altogether this is something changed the conventional patterns of tamil movie.Really Fresh
Verdict : Yo Soup Bwoys…it is SWEET and SOUR….. and TASTY