Sunday, October 28, 2012

செ‌ன்‌சா‌ர்‌ குழுவை‌ கண்‌கலங்‌கவை‌த்‌த நீ‌ர்‌பறவை‌ ‌


படங்களை பார்த்து சென்சார் போர்டு கண்ணீர் விடுவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லைதான். காரணம், இந்த மாதிரியான படங்களை கூட நாங்க பார்த்து சர்டிபிகேட் தர வேண்டியிருக்கே என்கிற வேதனையில் வருகிற கண்ணீர்தான் அது. ஆனால் அதே சென்சார் போர்டு குழுவினர் நிஜமாகவே படத்தைப் பார்த்து ஃபீல் பண்ணி கண்கலங்கினார்கள் என்றால் அது ஆச்சரியம்தானே. மூன்று தேசிய விருதுகளைதென்மேற்கு பருவகாற்று’ படத்தை இயக்கிய இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் ரெட் ஜெயன்ட் உதயநிதி தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் நீர்ப்பறவை. இந்தப் படத்திற்கு சென்சார் போர்டு சர்டிபிகேட் பெறுவதற்காக சென்சார் போர்டு உறுப்பினர்களுக்கு நீர் பறவை போட்டுக் காட்டப்பட்டது. இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் க்ளைமேக்ஸ் காட்சியைப் பார்த்து நிஜமாகவே கண் கலங்கிவிட்டார்களாம். ஒரு வார்த்தை கூட பேச முடியாதவர்களாக யு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள்.