Monday, January 23, 2012

அமலா பாலின் ஓவர் அலட்டலும் நிருபரின் ஏசலும்!


 
லிங்கத்தில் படிந்த தூசுகூட சில நேரங்களில் விபூதியாகிவிடும் என்பதற்கு அண்மைக்கால உதாரணம்தான் அமலா பால். நாலு பேர் சேர்ந்து ஒரே கருத்தை சொன்னால் காக்காயைகூட மயில் என்று ஒப்புக் கொள்கிற மர்ம தேசம்தான் கோடம்பாக்கம். இங்கே அமலா பால் வாழ்வதில் அதிக ஆச்சர்யமும் இல்லை. 'மைனா'வின் ஓட்டம், விக்ரமின் சலுகை இவ்விரண்டாலும் கோபுரத்தை பற்றிக் கொண்ட அமலா பால் போடுகிற ஆட்டம் இருக்கிறதே, ரொம்ப சீக்கிரத்தில் தமிழ் சினிமாவே இவருக்கு குட் பை சொல்லக் கூடிய நேரத்தை வரவழைக்கும் போலிருக்கிறது. சில தினங்களுக்கு முன் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தின் சேனல் பிரஸ்மீட் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் அப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான எல்ரெட் குமார். ஏகப்பட்ட கெஞ்சலுக்கு பிறகுதான் இங்கு வரவே ஒப்புக் கொண்டாராம் அமலா. வந்த இடத்தில்தான் வம்பளப்பு. சுமார் ரெண்டு மணி நேரம் தாமதமாக வந்த அமலா, அங்கிருந்த சேனல் நிருபர் ஒருவரை காட்டி, இவரை போக சொல்லுங்க. நான் சன், ஜெயா ரெண்டு சேனலுக்கு மட்டும்தான் பேட்டிக் கொடுப்பேன் என்றாராம். அமலாவை அழைக்கும் போது ஒரு பேச்சுக்கு 'ரெண்டு சேனல்தாம்மா வர்றாங்க' என்று சொன்ன எல்ரெட் குமார் மூணாவதாக ஒரு ஆளை வரச்சொல்லிவிட்டாரே என்ற கோபம்தான் அமலாவின் அலட்டலுக்கு காரணம் என்கிறார்கள். நிஜ அழகிகளேகூட நிருபர்கள் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கும் போது இந்த பவுடர் அழகியின் அலட்டல், பஞ்சராக்கிவிட்டது சேனல் நிருபரை. அவரும் பதிலுக்கு ஏசிய ஏசலில், ஏசி அறையே சூடாகியிருக்கிறது. இதுவே ஆந்திரா, பெங்களூர் என்றால் ஒட்டுமொத்த சேனலும் ஒன்று கூடியிருக்கும்.எப்பவுமே.. நம்ம ஊரு ஹச்.எஃப்.எம்-ல பவுடரோட கொழுப்பும் கொஞ்சம் ஜாஸ்தியாத்தான இருக்கும்........