Tuesday, January 17, 2012

பிப்ரவரி 15ல் ரஜினியின் 'கோச்சடையான்' படப்பிடிப்பு– கே.எஸ்.ரவிக்குமார்



K S Ravikumar

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கோச்சடையான் திரைப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் தொடங்கும் என்று படத்தின் மேற்பார்வையாளர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

ராணா படம் பூஜை போடப்பட்டு உடல் நலம் குன்றியதால் அந்த படம் கைவிடப்பட்டது. பின்னர் சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சைக்கு பெற்று திரும்பிய பின்னர் கோச்சடையான் படத்தில் ரஜினி நடிக்க உள்ள அறிவிக்கப்பட்டது.

எந்திரன் படத்திற்குப் பின்னர் ரஜினி நடிக்க உள்ள படம் கோச்சடையான். என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இத் திரைப்படத்தை இயக்க உள்ளார்.

அதற்கான பட வேலைகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கே எஸ் ரவிக்குமார் மேற்பார்வையிடுகிறார். திரைப்படத்திற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பிப்ரவரி 15ல் படப்பிடிப்ப..

இந்த திரைப்படத்திற்கான பூஜை வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் திரைப்படத்தின் சூட்டிங் பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக திரைப்படத்தின் மேற்பார்வையாளர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார். சூட்டிங்கில் கலந்து கொள்ளும் வகையில் ரஜினிகாந்த் பூரண உடல் நலம் பெற்றுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

முழுக்க முழுக்க 3 டி அனிமேஷன் படமாக தயாராக உள்ள கோச்சடையானை அவதார் பட உத்தியைப் பயன்படுத்தி, அத்தனை பாத்திரங்களும் நிஜத்தில் வருவது போலவே எடுக்க உள்ளனர். இந்தியாவில் இதுபோல தயாராகும் முதல் திரைப்படம் கோச்சடையான்தான். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.