Tuesday, January 31, 2012

29-வது முறையாக பிலிம்பேர் விருது வாங்கிய ஏ ஆர் ரஹ்மான்!



AR Rahman

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு இந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது அளிக்கப்பட்டது. 

ரோஜா படத்துக்காக முதல் முறையாக பிலிம்பேர் விருது பெற்றார் ரஹ்மான். அதன் பிறகு ஜென்டில்மேன், காதலன், ஆர்டிபர்மன் சிறப்பு பிலிம்பேர் விருது, பம்பாய், ரங்கீலா, காதல் தேசம், மின்சாரக்கனவு, தில்சே, ஜீன்ஸ், தால், முதல்வன், அலைபாயுதே, லகான், பகத்சிங், சாதியா, ஸ்வதேஸ், ரங் தே பசந்தி, சில்லுனு ஒரு காதல், குரு (பின்னணி இசை), சிவாஜி த பாஸ்,ஜானே து யா ஜானே நா, ஜோதா அக்பர், டெல்லி 6, விண்ணைத்தாண்டி வருவாயா, விண்ணைத் தாண்டி வருவாயா (தெலுங்கு) ஆகிய படங்களுக்கு பிலிம்பேர் விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன. 

இந்த முறை ராக்ஸ்டார் இந்திப் படத்தின் இசைக்காக அவருக்கு பிலிம்பேர் விருது வழங்கப்பட்டுள்ளது. இது அவர் பெறும் 29வது பிலிம்பேர் விருது. 

நேற்று முன்தினம் மும்பையில் நடந்த பிரமாண்ட விழாவில் இந்த விருதினை அவர் பெற்றுக் கொண்டார். இந்த விருதின் நுனியில் வைரங்கள் பதித்துக்கொடுத்திருந்தனர் பிலிம்பேர் விழா குழுவினர்.

முதல்முறையாக இளையராஜாவுடன் கைகோர்த்தார் கவுதம் மேனன்!!



Goutham menon and Ilayaraja
தமிழ் சினிமா இசைக்கு 2012- நல்லவிதமாக அமையப் போவதற்கான அமர்க்களமான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டன.

கடந்த சில ஆண்டுகளாக சத்தமே இசை என்று சத்தியம் பண்ணிக்கொண்டிருந்த கோலிவுட்டில், மீண்டும் சங்கீதம் மனதை வருடத் தொடங்கியுள்ளது.

இந்த வருடத்தின் ஆரம்ப மாதமான ஜனவரியில் தோணி, மயிலு என இளையராஜாவின் மிக இனிமையான இரண்டு இசைக் குறுந்தகடுகள் வெளியாகியுள்ளன. பெரும் போர்க்கள சத்தத்தில் சிக்கித் தவித்தவனுக்கு மென்மையான வருடல் மாதிரி அமைந்துள்ளன இந்தப் படங்களின் ஒவ்வொரு பாடலும்.

அடுத்த இனிய செய்தி, இயக்குநர் கவுதம் மேனன், இசைஞானி இளையராஜாவுடன் கைகோர்த்திருப்பது.

ராஜாவின் மிகத் தீவிரமான ரசிகர்தான் கவுதம் மேனன் என்றாலும், இதுநாள் வரை அவர் இளையராஜா இசையில் படம் எதுவும் செய்யவில்லை. இவர் பங்குதாரராக இருந்த நிறுவனம் தயாரித்த அழகர்சாமியின் குதிரையில் முதல்முறையாக இணைந்தார் தயாரிப்பாளர் என்ற முறையில். அந்தப் படம் பின்னர் க்ளவுட் நைன் கைக்கு மாறியது.

இப்போது நேரடியாக தனது இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு இளையராஜாவை இசையமைக்குமாறு கவுதம் மேனன் கேட்க, அதற்கு இசைஞானியும் ஒப்புக் கொண்டார்.

அந்தப் படம்தான் 'நீதானே என் பொன் வசந்தம்'. என்பதுகளில் இளையராஜாவின் இசையில் வந்த அற்புதமான பாடலின் முதல் வரிதான் இந்தத் தலைப்பு. இந்தத் தலைப்பை இளையராஜாவின் இசை ரசிகன் என்ற முறையில் வைத்ததாக முன்பே கவுதம் மேனன் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அப்போது இசையமைப்பாளர் யார் என்பதை அவர் சொல்லவில்லை. ரஹ்மான் இசையமைக்கக் கூடும் என்று சொல்லப்பட்டது.

இதுநாள் வரை இந்த விஷயத்தை சஸ்பென்ஸாக வைத்திருந்த கவுதம் இப்போது வெளிப்படையாக அறிவித்தார். "ஆம்... இசைஞானி இளையராஜா சார்தான் நீதானே என் பொன் வசந்தம் பட இசையமைப்பாளர். அவரது ரசிகன் என்ற முறையில், அவருடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாகக் கருதுகிறேன். விரைவில் இசைக் கோர்ப்பு ஆரம்பமாக உள்ளது. என்னுடைய நீண்ட நாள் கனவு இது... இந்தப் படம் முடியும் வரை நான் கனவில் மிதக்கப் போகிறேன்,"என்றார்.

இதுகுறித்து இளையராஜாவிடம் கேட்டபோது, "ஆமாம்... இந்த ஆண்டு நான் சில முக்கியமான படங்களுக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளேன். ஒன்று கவுதம் மேனன் படம். இன்னொன்று ராஜீவ் மேனன் படம். வேலை முடிந்ததும் விரிவாகப் பேசலாம்," என்றார்.

படத்தின் ஹீரோ ஜீவா கூறுகையில், "நீதானே என் பொன் வசந்தம் படத்தில் இளையராஜா + கவுதம் மேனன்... முழுக்க முழுக்க காதல் பாடல்கள். ஆம்... நம் இசைஞானி இசையில் நான் நடிக்கும் படம்... ஆஹா நினைப்பே சுகமாக உள்ளது," என்றார்.

ஆஹா... கோலிவுட் இசையின் பொற்காலம் திரும்பிடுச்சி!

இனி நோ ரீமேக்... ஒரிஜினல்தான்! - ஷங்கர்



Vijay and Ileana
சென்னை: இனி ரீமேக் படங்களை எடுக்கவே மாட்டேன். நண்பன்தான் எனது கடைசி ரீமேக் படம். இனிவரும் படங்களை ஒரிஜினலாகவே எடுப்பேன், என்று கூறியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.

ரஜினியின் எந்திரன் என்ற மெகா வெற்றிக்குப் பிறகு ஷங்கர் விஜய்-ஜீவா-ஸ்ரீகாந்தை வைத்து இயக்கிய படம் 'நண்பன்'.

பொங்கலுக்கு ரிலீசான இந்தப் படம் நகர்ப்புறங்களில் பரவாயில்லை எனும் அளவுக்கு ஓடினாலும், கிராமம் சார்ந்த பகுதிகளில் பெரிதாகப் போகவில்லை. இதன் தெலுங்குப் பதிப்புக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்துள்ளன. ஆந்திராவில் பெரும்பாலானோர், இந்தப் படத்தின் ஒரிஜினல் இந்திப் பதிப்பான 3 இடியட்ஸைப் பார்த்துவிட்டதால், இந்த 'சினேகிதடு' தங்களைக் கவரவில்லை என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில் தனது அடுத்த படம் குறித்து பேச ஆரம்பித்துள்ளார் ஷங்கர்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "நண்பன் படம் இந்தியிலிருந்து அப்படியே எந்தக் காட்சியும் மாறாமல் ரீமேக் செய்ப்பட்டது. 3 இடிட்ஸையும் மாற்றக்கூடாது, அதேநேரம் ஒரிஜினல் படத்தில் இருந்த உணர்வும் வேண்டும் என்பதால் நிறைய சவால் இருந்தது எனக்கு. 

விஜய்யை அவரது வழக்கமான பாணியிலிருந்து மாற்ற முயற்சித்தேன். '3 இடியட்ஸ்' படத்தை விடவும் பாடல்கள் இதில் நன்றாக இருந்ததாக பாராட்டினார்கள். ரீமேக் படத்தை இயக்கியது எனக்கு புது அனுபவமாக இருந்தது. 3 இடியட்ஸ் இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி கூட நண்பனை பாராட்டினார்.

ஆனால் இனி ஒருபோதும் ரீமேக் படங்களை இயக்கமாட்டேன். நண்பன்தான் அந்த வகையில் முதலும் கடைசியுமான ரீமேக். 

சொந்தத் தயாரிப்புகள்...

நான் தயாரித்த பல படங்கள் நன்றாக ஓடவில்லை. இதனால் நிறைய பணத்தை இழந்துவிட்டேன். நானே என் கை காலை சுட்டுக்கொண்டேன். அவற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறேன். அடுத்து தயாரிப்பதற்காக நல்ல கதையை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். 

அடுத்த ஹீரோ யார்? விக்ரம், அஜீத், சிரஞ்சீவி?

இவர்களில் யாருமில்லை. எந்தக் கதையையும் முடிவு செய்யவில்லை. எந்த ஹீரோவுடனும் இன்னும் பேசவில்லை. நிறைய கதைகள் மனதில் உள்ளன. அடுத்த படம் ஒரிஜினல் கதையாகவே இருக்கும். என்ன படம் என்பது குறித்து மார்ச்சில் அறிவிப்பேன். இப்போது விடுமுறையை அனுபவிக்கிறேன்," என்றார்.

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர் நீங்களா என்று கேட்ட போது, "இதில் பெரிய சந்தோஷமில்லை. இந்தியாவிலேயே அதிக நம்பிக்கையான இயக்குநர் என்ற பெயர் கிடைத்தால்தான் சந்தோஷம்," என்றார் ஷங்கர்.

ஹன்சிகா மீது நயன் நலம் விரும்பிகள் காட்டம்!



Hansika Motwani
நடிகை நயன்தாரா, இயக்குனர் பிரபுதேவா உறவு அத்துக்கொள்ளும் நிலையில் இருப்பதற்கு ஹன்சிகா மோத்வானியே காரணம் என்று நயன்தாராவுக்கு நெருக்கமான வட்டாரம் காட்டமாக உள்ளது.

நடிகை நயன்தாரா மீது காதல் கொண்டதும் பிரவுதேவா தனது மனைவி ரமலத் மற்றும் பிள்ளைகளைப் பிரிந்துவிட்டார். அவர்கள் திருமணத் தேதி இன்று அறிவிக்கப்படும், நாளை அறிவிக்கப்படும் என்று காலம் ஓடியது தான் மிச்சம். தற்போது திருமணத் தேதி அறிவிக்கப்படும் முன்பே அவர்கள் பிரிந்துவிடுவார்கள் போன்று. திருமணத்திற்குப் பிறகு நயன் நடிப்பதை பிரபுதேவா விரும்பாததால் அவர் தெலுங்கில் நடித்த ஸ்ரீ ராம ராஜ்யம் படம் தான் தன்னுடைய கடைசி படம் என்று அறிவித்தார்.

அதற்குப் பிறகு எத்தனையோ பேர் இவ்வளவு தருகிறோம், அவ்வளவு தருகிறோம் நடிக்க வாருங்கள் என்று அழைத்தும் நயன் சம்மதிக்கவே இல்லை. இந்நிலையில் தற்போது நாகர்ஜுனா நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். பிரவுதேவா தன் பாட்டுக்கு புதுப் படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவர்கள் விரைவில் பிரிந்துவிடுவார்கள் என்று கோலிவுட்டில் பரவலாகப் பேசப்படுகிறது.

இந்நிலையில் ஏற்கனவே 2 பெண்கள் உள்ள பிரபுதேவாவின் வாழ்க்கையில் கொழுக், மொழுக் நடிகை ஹன்சிகா மோத்வானி புகுந்ததால் தான் நயன்-பிரபுதேவா உறவு முறியப்போகிறது என்று நயனுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

எப்போ, ஹன்சிகாவுடன் எங்கேயும் காதல் படத்தில் பிரபுதேவா இணைந்து பணியாற்றினாரோ அப்போதே எல்லாம் முடிந்து விட்டதாகவும் அவர்கள் புலம்புகிறார்களாம்.

அது சரி..!

சரண்யா 'அப்படி' நடிக்கிறாரா?



Mazhai Kaalam Movie
நடிகை சரண்யா தான் நடிக்கும் மழைக் காலம் படத்தில் ஆடையில்லாமல் ஒரு காட்சியில் தோன்றுகிறாராம்.

நடிகைகள் ஆடையில்லாமல் நடிப்பதை பெரிய விஷயமாகப் பார்த்த காலம் மலையேறிவிட்டது. முதலில் பாலிவுட் நடிகைகள் ஆடை துறக்க ஆரம்பித்தனர். அண்மையில் கன்னடத்தில் பூஜா காந்தி அவ்வாறு நடித்தார். தற்போது தமிழில் சரண்யா ஆடை இழந்துள்ளார்.

காதல் படத்தில் சந்தியா தோழியாக நடித்து புகழ் பெற்றவர் சரண்யா. அடுத்து அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் பேராண்மை. தற்போது அவர் மழைக்காலம் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஆடையில்லாமல் நடித்துள்ளாராம்.

ஒரு கலைக் கல்லூரியில் தன்னை ஒரு ஓவியன் வரைய ஏதுவாக ஆடையின்றி தோன்றி நடித்தாராம். அதாவது டைட்டானிக் படத்தில் லியோனார்டோ வரைய கேட் வின்ஸ்லெட் போஸ் கொடுத்த மாதிரி. ஹாலிவுட் நடிகையான கேட் வின்ஸ்லெட் போஸ் கொடுத்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழில் சரண்யாவின் போஸ் விவகாரம் எவ்வளவு பரபரப்பை எற்படுத்தவிருக்கிறதோ. சென்சார் பிரச்சனையால் சரண்யா போஸ் கொடுத்த காட்சி நிழல் போன்று தான் காண்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்ல சூர்யா, இப்ப விஜய், எப்பூடி...காஜல் குஷி!



Kajal Agarwal
நடிகை காஜல் அகர்வால் ஒரே குஷியாக உள்ளாராம். அதற்கு காரணம் நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்.

நடிகை காஜல் அகர்வால் ஆண்கள் பத்திரிக்கைக்கு அரை நிர்வாணப் போஸ் கொடுத்தார் என்று பிரச்சனை வந்தபோதிலும் அவர் காட்டில் ஜில்லென்று என்று மழைக் கொட்டிக் கொண்டு தான் இருக்கிறது. தெலுங்கில் முன்னணி நாயகர்களின் படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இது தவிர தமிழில் சூர்யாவுடன் மாற்றான் படத்தில் ஒப்பந்தமாகி ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.

ஏற்கனவே தமிழில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சூர்யாவுடன் நடித்த பெருமிதத்தில் இருந்த காஜல் அடுத்து நம்ம இளைய தளபதி விஜயுடன் துப்பாக்கி படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். அப்புறம் அவர் குஷியாக இருக்க மாட்டாரா என்ன. மாற்றான் ஷூட்டிங் முடிந்த கையோடு விஜயுடன் நடிக்க சென்றுவிட்டார் காஜல்.

ஏய், பார்த்தியா முதலில் சூர்யாவுடன் நடித்தேன். அந்த ஷூட்டிங் முடிந்த கையோடு தற்போது கோலிவுட்டின் இன்னொரு முன்னணி ஹீரோவான விஜய்யுடன் நடிக்கிறேன். இதெல்லாம் நான் செய்த பாக்கியம் தான் என்று தனது தோழிகளிடம் சொல்லி, சொல்லி பூரிக்கிறாராம்.

பத்திரிக்கை பிரச்சனைக்குப் பிறகு காஜலின் மார்க்கெட் சரியும் என்று நினைத்தவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. அது இப்போதைக்கு சரியாது என்றுதான் தெரிகிறது...!

Monday, January 30, 2012

ஷாருக் மனைவி ரொம்ப ஹாட்!...'ஜொள்'கிறார் ரித்திக் ரோஷன்!



Gauri Khan

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் மனைவி கௌரி ரொம்ப ஹாட் என்று நடிகர் ரித்திக் ரோஷன் தெரிவி்ததுள்ளார்.

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானின் மனைவி கௌரி 2 குழந்தைகளுக்கு தாயான பிறகும் சிக்கென்று இருக்கிறார். அப்படி கட்டுக்கோப்பாக உடம்பை வைத்திருக்கும்போதே ஷாருக் பிரியங்கா சோப்ரா இடையே தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. இந்நிலையில் கௌரி கான் ரொம்ப ஹாட் என்று நடனத்தாலும், பார்வையாலும் வசீகரிக்கும் ரித்திக் ரோஷன் சொல்லியுள்ளார்.

ரித்திக் சொல்வது உண்மை தான். நடிக்காவிட்டாலும் பாலிவுட் நடிகை போன்று உடல்வாகு உள்ளவர் கௌரி. கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரபல வோக் பத்திரிக்கையின் அட்டையில் கௌரியின் படம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் கௌரியை பாலிவுட்டின் முதல் பெண்மணி என்று குறிப்பிட்டிருந்தனர்.

கடந்த 2009ம் ஆண்டில் அவர் தனது கணவர் ஷாருக்குடன் சேர்ந்து இயக்குனர், பேஷன் டிசைனர் கரண் ஜோஹாரின் பேஷன் ஷோவில் கேட் வாக் செய்தார். தற்போது ஷாருக் பிரியங்கா சோப்ராவுடன் அதிக நேரம் செலவழிப்பதால் கௌரி டென்ஷனில் உள்ளார். இது குறித்து கணவரிடம் கேட்டால் தகராறு தான் என்று பாலிவுட்டில் பரவலாகப் பேசப்படுகிறது. இது குறித்து ஷாருக்கும் வாய்திறக்கவில்லை, பிரியங்காவும் அமைதி காத்து வருகிறார்.

இப்படி இருக்கையில் ஏன் ரித்திக் ரோஷன் அப்படிச் சொன்னார் என்பது தெரியவில்லை..

கோச்சடையான் பூஜை போட்டாச்சு!



Rajinikanth
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் 'கோச்சடையான்' பூஜை நேற்று முன்தினம் சத்தமின்றி நடந்து முடிந்துவிட்டது.

கே எஸ் ரவிக்குமார் இயக்க மேற்பார்வையில், சௌந்தர்யா இயக்கும் இந்த அனிமேஷன் 3 டி படத்தில் ரஜினியுடன் பெரும் நட்சத்திப் பட்டாளமே களமிறங்கியுள்ளது. சரத்குமார், கத்ரீனா, சினேகா, நாசர் என முன்னணிக் கலைஞர்கள் கைகோர்த்துள்ளனர்.

கேஎஸ் ரவிக்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கத்தை மேற்பார்வை செய்கிறார். Motion Capturing தொழில்நுட்பத்துடன் ஹாலிவுட் படம் 'அவதார்' போல கோச்சடையான் உருவாக்கப்படுகிறது.

இந்தப் படத்தின் ஆயத்த வேலைகளில் கடந்த சில மாதங்களாக தீவிர ஈடுபட்டு வந்தனர் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் மற்றும் சௌந்தர்யா ரஜினி.

இந்த நிலையில், கோச்சடையான் படத்தின் பூஜை எந்த ஆடம்பரமும் விளம்பரமும் இல்லாமல் சனிக்கிழமை நடந்தது.

இதுகுறித்து லதா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள செய்தியில், "இன்று மறக்க முடியாத நாள். மறக்க முடியாத தருணம். பூக்கள், ஆரத்தி, தேங்காய் உடைப்பு என கோச்சடையான் பூஜை. என் கணவர் மீண்டும் மேக்கப் நாற்காலியில்... கோச்சடையானுக்கு வாழ்த்துகள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

பூஜை நடந்தது குறித்து சௌந்தர்யாவும் உறுதி செய்தார். அதேநேரம், படப்பிடிப்பு தொடங்கும் நாளில் விசேஷமாக ஒரு பூஜை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

'1.5 நயன்' - டோலிவுட்டில் ஒரே புகைச்சல்!



Nayanthara
நயன்தாரா தான் நடிக்கவிருக்கும் புதிய தெலுங்குப் படத்திற்கு வாங்கியுள்ள சம்பளத்தைக் கேட்டு டோலிவுட்டில் ஒரே புகைச்சலாய் இருக்கிறதாம்.

நயன்தாரா பிரவுதேவாவை திருமணம் செய்து கொள்வதாக இருந்தது. அதனால் அவர் சினிமாவுக்கு குட்பை சொன்னார். தெலுங்கில் அவர் நடித்த ஸ்ரீ ராம ராஜ்யம் தான் தன்னுடைய கடைசி படம் என்று அறிவித்த நயன் கண்ணில் அருவி கொட்டியது. இந்நிலையில் பிரவுதேவா-நயன் இடையே லடாய் ஏற்பட்டு அவர்கள் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், தெலுங்கில் தசரத் இயக்கத்தில் நாகர்ஜுனா நடிக்கும் படம் ஒன்றில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதற்காக அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஒன்றரை கோடி ரூபாய். நடிக்க மாட்டேன்னு சொல்லிவிட்டு போன நடிகையை வலியக்க அழைத்து வந்து இவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்கிறார்களே என்று தெலுங்கு பட உலகில் உள்ள பலருக்கும் வயிற்றெச்சலாம்.

தெலுங்கில் கொடிகட்டிப் பறக்கும் நடிகைகளுக்குக் கூட இந்த சம்பளம் கொடுக்கப்படவில்லை என்பது தான் பலரையும் கடுப்பாக்கியுள்ளது.

இப்பவே ஒன்றரை கோடி என்றால் இனிமேல் எவ்வளவு வாங்குவாரோ?

வாய்ப்பு கொடுத்து தமன்னாவை கடுப்பேற்றிய இயக்குனர்




இரண்டாவது நாயகியாக நடிக்கும் அளவுக்கெல்லாம் தன் மார்க்கெட் அடியாகவில்லை என்று நடிகை தமன்னா கொதித்து விட்டாராம்.

வாமனன் பட இயக்குனர் அகமது, ஜீவாவை வைத்து படம் ஒன்று எடுக்கிறார். இதில் ஜீவாவுக்கு 2 ஜோடிகள். முதல் ஜோடியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஜீவா, த்ரிஷா முதல் முறையாக இந்த படத்தில் இணைகின்றனர்.

இரண்டாவது நாயகியையும் பெரிய ஆளாகப் பிடிக்க வேண்டும் என்று நினைத்த இயக்குனர் தனது மேனேஜரை தமன்னா வீட்டுக்கு அனுப்பியுள்ளர்.

மேனேஜரும் தமன்னாவை சந்தித்து கதை சொல்லியுள்ளார். கதையை கேட்ட அவர் த்ரிஷாவுக்கு பதிலாக நான் நடிக்க வேண்டுமா அல்லது அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டுமா என்று கோபத்துடன் கேட்டுள்ளார்.

அதற்கு மேனேஜர் சேர்ந்து தான் ஆக்ட் கொடுக்கோணும் என்று சொல்லியுள்ளார். அதைக் கேட்டு ஆத்திரமடைந்து விட்டாராம் தமன்னா.

இரண்டாவது நாயகியாக நடிக்கும் அளவுக்கெல்லாம் எனது மார்க்கெட் அடியாகவில்லை. மேலும் எனக்கு அந்த நிலையும் வராது என்று போய் உங்கள் இயக்குனரிடம் கூறுங்கள் என்று விரட்டி விட்டாராம்.

அத்..சரி...!

Sunday, January 29, 2012

சென்னை தொழிலதிபருடன் நிச்சயதார்த்தமா? - அசின் விளக்கம்



Asin
இன்னும் ஏழு ஆண்டுகளுக்கு திருமணம் செய்து கொள்ளாமல் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்துவேன் என்று அசின் கூறினார்.


நடிகை அசின் பாலிவுட்டில் போன பிறகு, தனது மவுசை இழந்துவிட்டார். அவரைப் பற்றி கண்டபடி செய்திகளும் வர ஆரம்பித்துவிட்டன. அதற்கேற்ப அவருக்கு வாய்ப்புகளும் குறைந்துவிட்டன.

லேட்டஸ்டாக, அவரைப் பற்றிய செய்தி... அவருக்கும் ஒரு சென்னை தொழிலதிபருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்பதுதான்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள அசின், "இந்த திருமண செய்தி எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. நான் இன்னும் சினிமாவில் நிறைய சாதிக்க ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் இதுபோல கல்யாண செய்தி வருவது கவலையாக உள்ளது.

எனக்கு 26 வயதுதான் ஆகிறது. அடுத்த 7 வருஷத்துக்கு கல்யாணம் பற்றி நினைக்கமாட்டேன். இந்தியில் எனக்கு வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நான்தான் படங்களை குறைத்துக் கொண்டேன்.

நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களில் மட்டும் நடித்தால் போதும் என்று நினைக்கிறேன், வருங்காலத்தில் திரையுலகில் முதல் இடத்தை பிடிப்பேன்.

இப்போது ஒரு படத்துக்காக உடலை ஸ்லிம்மாக்கி வருகிறேன். அதுபற்றி சீக்கிரம் சொல்வேன்," என்றார்.

மறுபடியும் 'சிந்து சமவெளி'... இது அமலாவின் (விபரீத) ஆசை!



Sindhu samaveli
"நான் நடிச்சதிலேயே நல்ல படம் சிந்துசமவெளிதான். அந்தப் படத்தில்தான் எனக்கு நடிக்க நல்ல வாய்ப்பு... ஸ்கோப் இருந்துச்சு. இப்போது அந்தப் படத்தை மறுவெளியீடு செய்தாலும் ஒத்துழைக்க தயாரா இருக்கேன். ரிலீஸ் பண்ண முடியுமா பாருங்க..."

-படத்தின் ஹீரோ சொன்னதில்லை இது. நாயகியாக நடித்த அமலா பால் தயாரிப்பாளரிடம் இப்படி கூறி வருகிறாராம்.

சிந்து சமவெளி என்பது என்ன மாதிரி படம் என்பது தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். இருந்தாலும் ஒரு சின்ன பிளாஷ்பேக்...

இந்தப் படத்தில் மகன் ராணுவத்துக்குப் போய்விட, காம இச்சை கொண்ட மருமகளும் மாமனாரும் 'சேர்ந்து'விடுவார்கள். 

இந்த அருமையான 'குடும்ப காவியம்' ரிலீஸ் ஆனபோது அதை எதிர்க்காத மீடியா, கட்சிகள், சமூக அமைப்புகள் இல்லை எனும் அளவுக்கு நிலைமை மோசமானது. படத்தின் இயக்குநர் சாமி, இப்படியொரு படத்தை எடுத்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தலைமறைவானவர்தான்... இன்னும் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.

படத்தின் ஹீரோயின் அமலா பால் கொஞ்ச நாட்கள் இந்தப் படம் பற்றி வாயே திறக்காமலிருந்தார். இப்போது மைனா, தெய்வத்திருமகள், வேட்டை படங்களில் பாப்புலராகிவிட்ட நிலையில், சிந்து சமவெளி குறித்துப் பேச ஆரம்பித்துள்ளாராம்.

பொதுவாக வெறும் நடிகைகள் முன்னணி நடிகை ஆனபிறகு, அவர்கள் தவறாமல் சொல்லும் விஷயம்... 'ஒரு படத்திலாவது விலைமாது பாத்திரத்தில் நடிக்க வேண்டும். அப்போதுதான் நடிப்பை வெளிப்படுத்த முடியும்' என்பது.

அமலா பால் கொஞ்சம் வித்தியாசமானவர்... அதனால் தான் ஏற்கெனவே கிட்டத்தட்ட அந்த மாதிரி நடித்துவிட்ட 'சிந்து சமவெளியை மறுபடியும் வெளியிடுங்கள்' என்று கேட்கிறாராம்.

அமலாவின் இந்த விருப்பத்தைக் கேட்டபிறகு, அமலா பாலின் 'சிந்து சமவெளி நாகரீக'த்தை பரப்பும் வேலைக்கு தயாராகிவருகிறார்களாம் தயாரிப்பாளர்கள்!

'பவர் ஸ்டார்' கே.என்.சீனிவாசன் குறித்த லேட்டஸ்ட் அதிரடித் தகவல் இதோ உங்களுக்காக...! லத்திகா என்ற 'வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த', தமிழ்த் திரையுலகுக்குப் பெருமை சேர்க்கக் கூடிய, 'வரலாற்றுக் காவியத்தை'ப் படைத்து அதை ரசிகர்களுக்காக நல்லமுறையில் 'சமைத்து, படையலிட்டு' தொடர்ந்து அதை 'ஓட்டி'க் கொண்டிருக்கும் 'உலக சாதனையாளர்'தான் நம்ம 'பவர் ஸ்டார்' சீனிவாசன். தற்போது ஆனந்த்த தொல்லை உள்பட ஏகப்பட்ட படங்களைக ஏக காலத்தி்ல தயாரித்து பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் 'பவர் ஸ்டார்'. அதிலெல்லாம் அவருக்கு அட்டகாசமான வேடங்களாம்- அதை அவரே அவரது வாயால் சொல்லிக் கொண்டிருக்கிறார். கடந்த சில நாட்களாக ஒரு புகைப்படத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஒரே சந்தோஷமாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம் நம்ம பவர் ஸ்டார். (பவர் ஸ்டார் யார் என்று தெரியாதவர்கள், தமிழ்த் திரையுலக ரசிகர்களாகவே இருக்க லாயக்கற்றவர்கள்!. காரணம், அந்தளவுக்கு எந்த ஒரு ஸ்டாரும் கொடுக்காத 'மகா மெகா ஜிகா' சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த ஒரே நடிகரும், கடைசி நடிகரும் இவர்தான்!!) அந்தப் போட்டோவை காட்டுங்க 'பவர் ஸ்டார்' என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டால் வெட்கப் புன்னகையுடன் எடுத்துக் காட்டுகிறார். அதில் உலக நாயகன் கமல்ஹாசனுடன் பளீர் சிரிப்புடன், அடக்கம் ஒடுக்கமாக 'அருள்' பாலிக்கிறார் நம்ம பவர் ஸ்டார். எங்கங்க இதைப் புடிச்சீங்க, மெரீனா பீச் பக்கமா!! என்று கேட்டால் டென்ஷனாகி விடுகிறார். சமீபத்தில் நாரதகான சபாவில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மகள் நடன நிகழ்ச்சி நடந்ததல்லவா. அதில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் நம்ம 'பவர் ஸ்டாரும்' பங்கேற்று ஒரு ஓரமாக உட்கார்ந்து நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்துள்ளார். பின்னர் கமல்ஹாசன் நிகழ்ச்சி முடிந்து விட்டுக் கிளம்பியபோது, வேகமாக ஓடிச் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு போய் ஒரு ஸ்டில் எடுத்து விட்டாராம். அந்தப் புகைப்படத்தைத்தான் தற்போது பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறாம் நம்ம பவர் ஸ்டார். இந்தப் புகைப்படம் எனது வாழ்க்கையின் மிகப் பெரிய விஷயம் என்று புளகாங்கிதத்தோடு கூறி வருகிறார் பவர் ஸ்டார். எல்லாம் ஒரு வெளம்பரம்...!



Ananda Thollai
'பவர் ஸ்டார்' கே.என்.சீனிவாசன் குறித்த லேட்டஸ்ட் அதிரடித் தகவல் இதோ உங்களுக்காக...!

லத்திகா என்ற 'வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த', தமிழ்த் திரையுலகுக்குப் பெருமை சேர்க்கக் கூடிய, 'வரலாற்றுக் காவியத்தை'ப் படைத்து அதை ரசிகர்களுக்காக நல்லமுறையில் 'சமைத்து, படையலிட்டு' தொடர்ந்து அதை 'ஓட்டி'க் கொண்டிருக்கும் 'உலக சாதனையாளர்'தான் நம்ம 'பவர் ஸ்டார்' சீனிவாசன். தற்போது ஆனந்த்த தொல்லை உள்பட ஏகப்பட்ட படங்களைக ஏக காலத்தி்ல தயாரித்து பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் 'பவர் ஸ்டார்'. அதிலெல்லாம் அவருக்கு அட்டகாசமான வேடங்களாம்- அதை அவரே அவரது வாயால் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

கடந்த சில நாட்களாக ஒரு புகைப்படத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஒரே சந்தோஷமாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம் நம்ம பவர் ஸ்டார். (பவர் ஸ்டார் யார் என்று தெரியாதவர்கள், தமிழ்த் திரையுலக ரசிகர்களாகவே இருக்க லாயக்கற்றவர்கள்!. காரணம், அந்தளவுக்கு எந்த ஒரு ஸ்டாரும் கொடுக்காத 'மகா மெகா ஜிகா' சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த ஒரே நடிகரும், கடைசி நடிகரும் இவர்தான்!!)

அந்தப் போட்டோவை காட்டுங்க 'பவர் ஸ்டார்' என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டால் வெட்கப் புன்னகையுடன் எடுத்துக் காட்டுகிறார். அதில் உலக நாயகன் கமல்ஹாசனுடன் பளீர் சிரிப்புடன், அடக்கம் ஒடுக்கமாக 'அருள்' பாலிக்கிறார் நம்ம பவர் ஸ்டார். எங்கங்க இதைப் புடிச்சீங்க, மெரீனா பீச் பக்கமா!! என்று கேட்டால் டென்ஷனாகி விடுகிறார்.

சமீபத்தில் நாரதகான சபாவில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மகள் நடன நிகழ்ச்சி நடந்ததல்லவா. அதில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் நம்ம 'பவர் ஸ்டாரும்' பங்கேற்று ஒரு ஓரமாக உட்கார்ந்து நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்துள்ளார். பின்னர் கமல்ஹாசன் நிகழ்ச்சி முடிந்து விட்டுக் கிளம்பியபோது, வேகமாக ஓடிச் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு போய் ஒரு ஸ்டில் எடுத்து விட்டாராம்.

அந்தப் புகைப்படத்தைத்தான் தற்போது பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறாம் நம்ம பவர் ஸ்டார். இந்தப் புகைப்படம் எனது வாழ்க்கையின் மிகப் பெரிய விஷயம் என்று புளகாங்கிதத்தோடு கூறி வருகிறார் பவர் ஸ்டார்.

எல்லாம் ஒரு வெளம்பரம்...!

'முழுக்கு'ப் போட்ட நயனதாரா- பிரபுதேவாவின் கதி என்ன?!



Prabudeva and Nayanthara
எந்த வேகத்தில் பிரபுதேவா மீது காதலில் விழுந்தாரோ அதே வேகத்தில் அவரை விட்டுப் பிரிந்தும் விட்டார் நயனதாரா. இதனால் பிரபுதேவாவின் கதி என்ன என்பது திரையுலகினர் மத்தியில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.

பிரபுதேவாவின் திருமண வாழ்க்கையே பெரும் மர்மக் கதையாகவே இருந்து வருகிறது. ரம்லத்தை அவர் திருமணம் செய்த ஸ்டைலும், அதை மறைத்து பல ஆண்டுகளாக வாழ்ந்த விதமும் அனைவராலும் மறக்க முடியாதது.

ரம்லத்துடன் அவர் கிட்டத்தட்ட ரகசிய வாழ்க்கைதான் வாழ்ந்து வந்தார். இவர்தான் எனது மனைவி என்று அவர் வெகு காலமாகவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. காரணம், பிரபுதேவாவின் குடும்பத்தார் இந்தத் திருமணத்தை அங்கீகரிக்கவில்லை என்பதால். இதனால் 3 குழந்தைகள் பிறந்து அவர்கள் ஓரளவுக்குப் பெரியவர்களாக ஆன பிறகும் கூட ரகசிய வாழ்ககைதான் வாழ்ந்து வந்தார் பிரபுதேவா.

இந்த நிலையில் பிரபுதேவா-ரம்லத் தம்பதியின் குழந்தை இறந்தபோது பெரும் சோகமடைந்தார் பிரபுதேவா. அந்த சோகத்தில் பங்கெடுக்க வந்தவர்தான் நயனதாரா. அப்போது அவரும் கூட சோகத்தில்தான் இருந்து வந்தார். சிம்புவிடமிருந்து பிரிந்த சோகம். இரண்டு சோகங்களும் ஒன்று கலக்கவே, அது அவர்களுக்கு சுகமாக தெரிந்தது- புதிய காதல் கதை பிறந்தது.

கடந்த நான்கு ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர் பிரபு தேவாவும் நயன்தாராவும். இந்தக் காதலுக்காக தனது மனைவியை கடுமையாக பிடிவாதம் பிடித்து விவாகரத்தும் செய்தார் பிரபுதேவா. தனது கணவரை தக்க வைக்க எப்படியெல்லாமோ முயற்சித்தார் ரம்லத். ஆனால் பாவம், அந்தப் பெண்ணின் முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கவில்லை. அவரும் கூட தனது மனதை தேற்றிக் கொண்டு கணவரை இன்னொரு பெண்ணுக்கு தாரை வார்த்துக் கொடுக்க நேரிட்டு விட்டது. இதனால் விவாகரத்து நடந்தது, பாகப்பிரிவினையும் நடந்து முடிந்தது.

அதன் பிறகு நடந்த அத்தனையுமே படு சுவாரஸ்யமானவை. பிரபுதேவாவை கல்யாணம் செய்வதற்காக மதம் மாறினார் நயனாரா. சினிமாவுக்கும் கூட முழுக்குப் போட்டார். சிம்பு மீண்டும் ஒருமுறை தனது படத்தில் ஆட வேண்டும் என்று வைத்த வேண்டுகோளையும் கூட நிராகரித்தார்.

தமிழில அவர் கடைசியாக பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்திருந்தார். அதேபோல தெலுங்கில், ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் நடித்தார். 

இத்தனையும் செய்து விட்டு பிரபுதேவாவிடம் கல்யாணம் என்று பேச்சை ஆரம்பித்த போதெல்லாம் அவர் பிடி கொடுக்கவே இல்லை. என்ன என்று ஆராய்ந்து பார்த்தபோதுதான், ரம்லத் மறறும் பிள்ளைகள் மீது இருந்த பாசத்தை பிரபுதேவாவால் விட முடியவில்லை என்பது.

நயனதாராவுக்கு தெரியாமல் ரகசியமாக தனது பிள்ளைகளைப் பார்த்து கொஞ்சி வந்தார் பிரபுதேவா. ரம்லத்தையும் கூட அவர் சந்தித்ததாக கூறப்படுகிறது. இதெல்லாம் நயனதாராவுக்குத் தெரிய வர ஷாக் ஆகி விட்டார். இதனால் இடையில் பிரபுதேவாவுடன் சண்டை போட்டு சொந்த ஊரான கேரளாவுக்குப் போய் விட்டார். இதையடுத்து அங்கு ஓடிய பிரபுதேவாவை வீட்டுக்குள்ளேயே நயனதாரா சேர்க்கவில்லை. இதனால் தெருவில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இருப்பினும் இதெல்லாம் கப்சா, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, திருமண ஏற்பாடுகள் தீவிரமாகநடந்து வருவதாக பிரபுதேவா, நயனதாரா தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் தற்போது இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருவருக்கும் இடையிலான பிளவு மிகப் பெரிதாகி விட்டதாகவும், இனிமேல் சேர முடியாத நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பிளவுக்கு நடிகை ஹன்சிகா மோத்வானியுடன் பிரபுதேவா நெருக்கம் காட்டியதும் ஒரு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

ஆனால் ரம்லத் மற்றும் பிள்ளைகள் மீதான பாசத்தை பிரபுதேவாவால் கைவிட முடியாமல் தவிப்பதால்தான் நயனதாரா பிரிந்து போய் விட்டதாக கூறப்படுகிறது.

இப்போது மீண்டும் ஒரு சோகப் புள்ளியில் பிரபுதேவாவும், நயனதாராவும் வந்து நிற்கின்றனர். இந்த சோகத்தைப் பங்கு போடப் போவது யாரோ...

சினேகா, பிரசன்னா திருமணம்: பம்பரமாய் சுழலும் இருவீட்டார்



Prasanna and sneha

நடிகை சினேகா, பிரசன்னாவின் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. வரும் ஏப்ரல் மாதத்தில் தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடக்கிறது.

நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் இரு வீட்டாரும் கூடி நிச்சயதார்த்தம் நடத்துகின்றனர். திருமணத் தேதி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. அநேகமாக வரும் ஏப்ரல் மாதத்தில் தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடக்கும். இதற்காக அந்த ஹோட்டல் ஹால் மற்றும் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

தி. நகரில் உள்ள நகைக் கடை ஒன்றில் திருமண நகைகள் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. சினேகாவுக்கு காஞ்சிபுரத்தில் பட்டுப்புடவை எடுக்கின்றனர். திருமண அழைப்பிதழும் தேர்வு செய்யப்பட்டுவிட்டது.

என்ன பிரசன்னா திருமணத்திற்குப் பிறகு சினேகா நடிக்க அனுமதிப்பீங்களா என்று கேட்டதற்கு,

சினேகா திறமையான நடிகை. அவர் திருமணத்திற்கு பிறகு வீட்டில் சும்மா இருப்பதை நான் விரும்பவில்லை. அதனால் அவர் திருமணத்திற்கு பிறகும் நடிக்கலாம் என்றார்.

கோச்சடையானில் ரஜினியின் தங்கையாக நடிக்கவிருக்கும் சினேகா தான் வரும் காட்சிகளை திருமணத்திற்கு முன்பு நடித்துக் கொடுப்பார் என்று தெரிகிறது.

ஆட்டம் போடும் அமலா பால்... அதிர்ந்து நிற்கும் தயாரிப்பாளர்கள்!



Amala Paul
தமிழ் சினிமா எத்தனையோ சாதனையாளர்களை தடவிக் கொடுத்து மகிழ்ந்திருக்கிறது... தீராத தலைவலியாய் திகழ்ந்தவர்களை சுளுக்கெடுத்தும் அனுப்பியுள்ளது.

தமிழ் சினிமாவின் இப்போதைய பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளவர் அமலா பால். அம்மணி அலட்டும் அலட்டல் இருக்கிறதே.... இவரை நம்பி ஒப்பந்தம் செய்து படமெடுத்து வரும் தயாரிப்பாளர்களை அதிர வைத்திருக்கிறது.

வீரசேகரன் என்ற படத்தின் மூலம் நடிக்க வந்தவர் அமலா பால். இப்போது கேட்டால் 'ஆங்... அப்டி ஒரு படம் வந்ததா' என்பார். இந்தப் படத்துக்குப் பிறகு அம்மணி நடித்த படம் மாமனாரின் இன்பவெறி..சாரி.. சிந்து சமவெளி!

அதன் பிறகு சீந்துவாரின்றி கிடந்த அமலா பாலுக்கு வாழ்க்கை கொடுத்த படம் மைனா. போகிற இடமெல்லாம் மைனாதான் எனது முதல் படமாக்கும் என்று சொல்ல அமலா தயங்குவதே இல்லை. சரி அது அவர் விருப்பம். இப்போது விஷயம் ரொம்ப சீரியஸானது. அமலா பாலின் கேரியரையே காலி பண்ணும் அளவுக்கு!

சின்னதோ பெரியதோ.. ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால், அந்தப் படம் வெளியாகும்போது செய்யப்பட்டம் இசைவெளியீடு போன்ற புரமோஷனல் நிகழ்ச்சிகள், பிரஸ் மீட், சேனல் பேட்டி என அனைத்துக்கும் நடிகைகள் வரவேண்டும் என்பது தயாரிப்பாளர்கள் முன்கூட்டியே போடும் நிபந்தனை. இதற்கு ஒப்புக்கொண்டுதான் நடிக்க வருகிறார்கள் நடிகைகள்.

பெரும்பாலானோர் ஒப்புக் கொண்டபடி நடந்துகொள்கின்றனர். ஆனால் அமலா பால் போன்றோர் டிமிக்கி கொடுத்து தயாரிப்பாளரை அசிங்கப்படுத்துகின்றனர் (அமலா போன்றவர்களை தலையில் தூக்கி வைத்து ஆடும் இவர்களுக்கு இதுவும் வேணும்).

மைனா ஹிட்டானதிலிருந்தே தலைகால் புரியாமல் நடந்து கொள்ளும் அமலா பால், பத்திரிகையாளர் சந்திப்புகள் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாக்களுக்கு வர ரொம்பவே பிகு பண்ணுவது வழக்கம்.

இப்படித்தான் தெய்வத் திருமகள் பிரஸ்மீட்டுக்கு வந்த அமலா பாலை புகைப்படக்காரர்கள் படமெடுக்க முயன்றபோது, 'எனக்கு மூட் இல்ல... போங்க போங்க' என்று விரட்டினார். அடுத்த நாள் இயக்குநர் விஜய்யுடன் ஒரு விருது வழங்கும் விழாவுக்கு வந்தார். அங்கும் படமெடுக்க முயன்றவர்களை கோபமாகத் திட்டிவிட்டு ஓடினார்.

ஒரு முறை இருமுறை அல்ல... மைனாவுக்குப் பின் அமலா பால் நடித்த தெய்வத் திருமகள், வேட்டை, இப்போது நடித்துக் கொண்டிருக்கும் முப்பொழுதும் உன் கற்பனைகள் மற்றும் காதலில் சொதப்புவது எப்படி ஆகிய படங்களின் பிரஸ் மீட்களில் இதுவே அமலா பாலின் வாடிக்கையாகிவிட்டது.

குறிப்பாக முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்துக்கான சேனல் இன்டர்வியூவுக்கு தயாரிப்பாளரின் பணத்தில் கேரளாவிலிருந்து விமானத்தில் வந்த அமலா, இரண்டு டிவி சேனலுக்குதான் பேட்டி தருவேன் என்று கூறிவிட்டாராம். அதுவும் எப்படி... 9 மணிக்கு வரவேண்டியவர்... 11 மணிக்கு வந்துவிட்டு, இப்படி ஜம்பமாய் சொல்ல, வந்திருந்த மற்ற டிவி சேனல்காரர்கள் கடுப்பாகி, பேட்டியெடுக்க முயன்றபோது, "உங்க சேனலை யார் பாக்குறாங்க... நான் பெரிய சேனல்களுக்குத்தான் தருவேன். உங்களுக்கு பேட்டி தரமுடியாது" என்று கூறிவிட்டார். இத்தனைக்கும் தமிழில் பிரபலமான சேனல்கள் அவை.

அமலா பாலின் இந்த நடவடிக்கையால் கடுப்பான சேனல்காரர்கள் கேமராவை ஏறக்கட்ட தயாரிப்பாளரும் இயக்குநருமான எல்ரெட் குமார் பதறியபடி சமாதானம் செய்ய முயன்றார். அதற்கு மீண்டும் ஒரு குண்டை தூக்கிப் போட்டார் அமலா. "சார் எனக்கு பர்சனல் வொர்க் இருக்கு. நான் போறேன்," என்று கூறிவிட்டு போயே போய்விட்டார். டிக்கெட் செலவு தயாரிப்பாளர் காசு... பார்ப்பது சொந்த வேலை... சேனல் மீட்டும் கெட்டது. இதெப்டி இருக்கு!

அடுத்த நாளே இன்னொரு நிகழ்ச்சி... இது நடந்தது காதலில் சொதப்புவது எப்படி பட இசை வெளியீட்டு விழாவில். படத்தின் நாயகியான இவர் விழாவுக்கே வராததால் நிகழ்ச்சி சொதப்பலாகிவிட்டது. விஷயத்தைக் கேட்டபோது, இன்று மாலை தனக்கு அரியர்ஸ் எக்ஸாம் இருப்பதால் வர முடியாது என அமலா கூறிவிட்டார் என்றார்கள்.

"குருவாயூரப்பன் ஊரில் பிறந்தால் லாஜிக்கே இல்லாமல் பொய் புளுகுவது சகஜம் போலிருக்கிறது. கேரளாவில் இப்போது எந்த தேர்வும் நடக்காது. இன்னொன்று, மாலை நேரத்தில் எந்த கல்லூரி அல்லது நிறுவனத்தில் தேர்வு நடக்கிறதென்று புரியவில்லையே," என்று கமெண்ட் அடித்தார் படக்குழுவைச் சேர்ந்தவர்.

இப்படி அடுக்கடுக்காக வரும் புகார்களால், அடுத்து அமலா பாலை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்க ஆரம்பித்துள்ளனர். அமலா இப்போது இரண்டு தெலுங்குப் படங்கள் பண்ணுகிறார். அவரது கால்ஷீட்டுக்கு காத்திருந்த இரண்டு தமிழ் தயாரிப்பாளர்கள், 'பரவாயில்லை, அமலா ஹைதராபாதிலேயே இருக்கட்டும்' என்று முடிவு செய்து வேறு நடிகைகளை ஒப்பந்தம் செய்துவிட்டது லேட்டஸ்ட் சங்கதி!

அமலாவின் அலம்பல்களை பத்திரிகையாளர்களும் புகைப்படக்காரர்களும் வெளியில் சொல்லி அது செய்தியாக வந்ததும், உடனடியாக தனக்கு வேண்டப்பட்ட சில மலையாள நிருபர்களைக் கொண்டு அமலா அப்படியாக்கும் இப்படியாக்கும் என செய்தி வெளியிட ஆரம்பித்துள்ளது இன்னொரு பெரிய கதை!

Thursday, January 26, 2012

28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமிதாப்புடன் இந்திப் படத்தில் ரஜினி!



Rajini and Amitabh

அமிதாப் பச்சனுடன் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்திப் படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். பூரி ஜெகன்னாத் இந்தப் படத்தை இயக்கப் போகிறார்.

28 ஆண்டுகளுக்கு முன்பு ராமாராவ் தயாரித்த அந்தா கானூன் படம்தான் இந்த இரு சூப்பர் ஸ்டார்களும் இணைந்து நடித்த கடைசி இந்திப் படமாகும்.

இதுகுறித்து பூரி ஜெகன்னாத் கூறுகையில், சமீபத்தில் நான் ரஜினி சாரை சந்தித்துப் பேசினேன். அமிதாப் பச்சனை வைத்து நான் இயக்கப் போகும் புதிய படத்தில் நீங்களும் இடம் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். உடனே அதை அவர் ஏற்றுக் கொண்டார்.

மேலும் அமிதாப் பச்சனுடன் மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து அவர் பரவசமாக உள்ளார். நீண்ட காலத்திற்குப் பிறகு இணைந்து நடிப்பதால் ஏற்பட்ட பரவசம் இது.

நீண்ட காலமாகவே ரஜினியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எனது ஆசை. முயற்சித்தும் கொண்டிருந்தேன். ஆனால் இப்போதுதான் கை கூடியுள்ளது. அதேசமயம், இரு பெரும் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் மற்றும் ரஜினியை இணைத்து இயக்கப் போவது எனக்கே மலைப்பாகவும் உள்ளது என்றார் ஜெகன்னாத்.

ஏற்கனவே அமிதாப்பச்சனை வைத்து புத் ஹோகா தேரா பாப் என்ற படத்தை சமீபத்தில் இயக்கியவர்தான் பூரி ஜெகன்னாத் என்பது நினைவிருக்கலாம்.

தமன்னாவும், பக்திப் பழமும்!



Tamannaah

நடிகை தமன்னா தற்போது பக்திப் பழமாகி விட்டாராம். எப்பப் பார்த்தாலும் ஹோமம், புனஸ்காரம் என்று புகையும், பூஜையுமாக பிசியாக இருக்கிறாராம்.

ஒரு காலத்தில் தமன்னாவுக்கு தமிழில் அத்தனை மவுசு இருந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடித்த வேங்கைக்குப் பிறகு அவருக்கு தமிழில் வாய்ப்புகள் வந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அம்மணி தெலுங்கில் பிசியாகத் தான் இருக்கிறார். சும்மா ஓடி, ஓடி நடிக்கிறார்.

ஆனால் தற்போது தமன்னாவைப் பார்ப்பவர்கள் என்னாச்சு இந்த பொண்ணுக்கு இப்படி பக்தி மானாய் மாறிவிட்டதே என்று ஆச்சரியப்படுகிறார்களாம்.

என்ன நம்ப முடியவில்லையா, அட நம்புங்கப்பா. ஹைதராபாத் வந்தால் போதும் தமன்னா கோவில் கோவிலாக ஏறி இறங்குகிறாராம். அட அப்படி என்ன தான் உருகி, உருகி வேண்டுகிறார் என்று தான் தெரியவில்லை.

மும்பைக்கு சென்றால் தனது வீட்டில் ஹோமம், பூஜை நடத்துகிறாராம். தற்போது தமன்னா இருக்குமிடம், போகுமிடமெல்லாம் பக்தி மயமாக உள்ளது.

பார்த்து, புகை ஜாஸ்தியாக கண்ணைக் கெடுத்துடப் போகுது...!

அமெரிக்க டாக்டர் மாப்பிள்ளையைக் கைப்பிடிக்கும் சங்கவி!



Sanghavi
நடிகை சங்கவிக்கும், அமெரிக்காவில் பணிபுரியும் டாக்டர் ஒருவருக்கும் வரும் மார்ச் மாதம் 5ம் தேதி திருமணம் நடக்கிறது.

அமராவதி படத்தில் தல அஜீத் ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சங்கவி. அவர் இளைய தளபதி விஜயுடன் சேர்ந்து ரசிகன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவர் இதுவரை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போதும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு திருமணம் முடிவாகியுள்ளது.

அமெரிக்காவில் பணிபுரியும் டாக்டர் ஒருவரை வரும் மார்ச் மாதம் 5ம் தேதி மணக்கிறார். அவர்களின் திருமணம் சென்னையில் நடக்கிறது. அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடக்கிறது.

என்ன சங்கவி உங்களுக்கு திருமணம் முடிவாகியுள்ளதாமே என்று கேட்டதற்கு, ஆம், திருமணம் பற்றி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்று மட்டும் பதில் அளித்தார்.

சினிமாவில்தான் அமெரிக்க மாப்பிள்ளைகள் ஹீரோயின்களுக்குக் கிடைப்பார்கள். சங்கவிக்கு நிஜத்திலேயே கிடைத்து விட்டார், வாழ்த்துகள் சங்கவி...!

விக்ரமை விட்டுடுங்க! - கரிகாலன் தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்



Vikram
கரிகாலன் படம் தொடர்பான வழக்கை தயாரிப்பாளர்களான நாங்கள் சந்திக்கத் தயாராக உள்ளோம். இதில் தேவையில்லாமல் படத்தின் ஹீரோ விக்ரமை சேர்க்க வேண்டாம் என படக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விக்ரம் நடிக்கும் 'கரிகாலன்' படத்தின் கதையும் தலைப்பும் தனக்கு சொந்தமானது என்று போரூரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். விக்ரம் மற்றும் இயக்குனர், தயாரிப்பாளரையும் இவ்வழக்கில் சேர்த்துள்ளார். அனைவருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இப்படத்துக்காக ராஜா காலத்து ஆடை ஆபரணங்கள் பிரத்யேகமாக செய்து கொண்டு வரப்பட்டு உள்ளன. அரங்குகளும் அமைக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் வழக்கு தொடர்ந்து இருப்பது படத்தை வெகுவாக பாதித்துள்ளது.

இதுகுறித்து 'கரிகாலன்' பட தயாரிப்பாளர்கள் எஸ். பார்த்திபன், எஸ்.எஸ். வாசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், "ராஜசேகர் என்பவர் தொடுத்த வழக்கை தயாரிப்பாளர்கள் என்ற முறையில் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம். திரைப்பட தயாரிப்பு சம்மேளனத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டு தகுந்த ஆவணங்களோடு இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திரைப்படத்தின் கதை திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திலும் இயக்குனரின் பெயரில் முறையாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த உறுதியான நிலையில் தான் நாங்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டோம். வழக்கை சந்திக்க வேண்டியது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களாகிய எங்கள் கடமை. இவ்வழக்கில் படத்தின் கதாநாயகனான விக்ரமை சம்பந்தப்படுத்துவது முற்றிலும் முறைகேடான செயல்.

இதனால் அவரின் புகழ் நற்பெயருக்கு பங்கம் ஏற்படுவதோடு அவருக்கு மன உளைச்சலும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே ராஜசேகர் மீது மானநஷ்ட வழக்கு தொடர ஆலோசித்து வருகிறோம். நேர்மையான முறையில் வழக்கை சந்திப்போம்," என்று கூறியுள்ளனர்.

விஜய் கன்னத்தைக் கிள்ளணும் போல இருக்கு...சத்யராஜ்



Vijay and Sathyaraj

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். போன்று இளைய தளபதி விஜயும் ரொம்ப கியூட்டாக இருக்கிறார். விஜயைப் பார்க்கும் போதெல்லாம் அவரது கன்னத்தைப் பிடித்துக் கிள்ள வேண்டும் போல் இருக்கிறது என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

போக்கிரி வெற்றிவிழாவில் பேசிய நடிகர் சத்யராஜ் விஜயை இந்தியன் ப்ரூஸ்லி என்று புகழ்ந்தார். தற்போது எம்.ஜி.ஆர். போன்று விஜய் க்யூட்டாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நண்பன் படத்தில் கல்லூரி முதல்வராக நடித்துள்ளார் சத்யராஜ். இந்நிலையில் அண்மையில் விஜய் டிவியில் நண்பன் ஸ்பெஷல் ஷோ நடந்தது. அந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் சங்கர், விஜய், சத்யராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய சத்யராஜ் கூறியதாவது,

ஒரு விஷயத்தை நானும் கன்ட்ரோல் பண்ணனும்னு நினைக்கிறேன். ஆனால் என்னால் முடியல. இங்கே அதை சொல்லியே ஆக வேண்டும். இந்தியாவின் தலைசிறந்த நடிகர் ஆமீர் கான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் நண்பன் படத்தில் ஆமீர் கானின் நடிப்பை விட விஜய் நடிப்பை ரசித்தேன்.

என் மனதில் என்ன படுகிறதோ அதை சொல்லிவிடுவேன். விஜய்யை பார்க்கையில் அவரது கன்னத்தைப் பிடித்துக் கிள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. அது ஒரு ஹீரோவுக்கு மிகவும் முக்கியம். அது தான் என் தலைவர் எம்.ஜி.ஆரிடம் இருந்தது. எம்.ஜி.ஆரிடம் இருந்த க்யூட்னஸ் விஜய்யிடம் இருக்கிறது. அதனால் தான் அதை சொல்கிறேன் என்றார்.

சத்யராஜ் புகழந்து தள்ளியைக் கேட்டு விஜய் கொஞ்சம் அசந்து தான் போனார்.

எதிரியான நண்பன்... குறி தவறிய வேட்டை... வெள்ளந்தியான கொள்ளைக்காரன்!



Vijay and Ileana
இந்தப் பொங்கலுக்கு வெளியான தமிழ் சினிமா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் குறித்து கோடம்பாக்கத்தில் உலாவரும் லேட்டஸ்ட் பஞ்ச் இதுதான்!

இந்தப் படங்கள் மூன்றுமே நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் (கொள்ளைக்காரனை முன்னணி பத்திரிகைகள் கண்டுகொள்ளவில்லை என்ற குறை உண்டு!), வசூல் என்று பார்த்தால், விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் பெரும் புலம்பலில் உள்ளது தெரிய வந்துள்ளது.

இனி வரும் நாட்களில் இந்தப் படங்களுக்கான பஞ்சாயத்து ஒன்று பெருமளவு வெடிக்கும், அல்லது கமுக்கமாக முடிக்கப்படும் என்கிறார்கள்.

முதலில் நண்பன் பட வசூல் குறித்து தியேட்டர் நிலவரங்களைப் பார்க்கலாம்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 12 நாட்களைக் கடந்த நிலையில், சத்யம், ஐநாக்ஸ், பிவிஆர், ஏஜிஎஸ், அபிராமி என குறிப்பிட்ட மல்டிப்ளெக்ஸ் அரங்குகளில் மட்டும் இந்தப் படம் பரவாயில்லை எனும் அளவுக்குப் போகிறது. சிங்கிள் ஸ்கிரீன் எனப்படும் ஒற்றை பெரிய அரங்குகள் பரிதாபமாக காற்று வாங்குகின்றன.

காரணம், மல்டிப்ளெக்ஸ் அரங்குகளில் அதிகபட்ச சீட் எண்ணிக்கை 300. குறைந்தபட்சம் 100. எஸ்கேப் சினிமாவில் ஒரு தியேட்டரின் மொத்த சீட் எண்ணிக்கை 120. இந்த தியேட்டரிலேயே போனதும் வாங்கிக் கொள்ளும் அளவுக்கு எளிதாக நண்பன் டிக்கெட் கிடைக்கிறது. சில நேரங்களில் ஃபுல்லாகிறது. 

ஆனால் இது பெரிய விஷயமே அல்ல. சிங்கிள் ஸ்கிரீன் அரங்குகளான பிருந்தா, காசி, ஐட்ரீம் போன்றவற்றில் வார நாட்களில் மிகக் குறைந்த கூட்டமே. 

நகருக்குள்ளேயே இந்த நிலை என்றால் புறநகர்களில் கேட்கவே வேண்டாம்.

நண்பன் வசூல் குறித்து தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் விவரங்களை வெளியிடும் 'தமிழ்நாடு என்டர்டெயின்மெண்ட்' என்ற பத்திரிகையின் ஆசிரியர் ராமானுஜம் இப்படிக் கூறுகிறார்:

நண்பன் வசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்துவிட்டது என்பது மிகப் பெரிய பொய். இந்தப் படம் இன்னும் 30 கோடியைக் கூட தாண்டவில்லை என்பதுதான் உண்மை. 

முதல் நாள் சுமாரான கூட்டத்துடன்தான் படம் வெளியானது. முதல் நான்கு நாட்களும் சராசரியாக ரூ 4 முதல் 4.5 கோடி வரை வசூலித்தது இந்தப் படம். அதன் பிறகு விழுந்துவிட்டது. நியாயமாக நல்ல விமர்சனம் வந்துள்ள நிலையில் இந்தப் படம் பெரிதாகப் போயிருக்க வேண்டும். ஆனால் நல்ல படம் என பாராட்டப்பட்டும், எதனால் கூட்டம் குறைந்தது என்பது ஆராய வேண்டிய சமாச்சாரம். 

சென்னையில் படத்துக்கு சுமாராக கூட்டம் வந்துவிட்டால் படம் ஜெயித்துவிட்டது என்று சிலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேண்டுமானால் நண்பன் வெற்றி, ரெக்கார்டு பிரேக் என்று கூவலாம். அடிவாங்கியிருக்கும் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் பஞ்சாயத்து வைக்கும்போதுதான் உண்மை புரியும்.

நண்பன் படத்தின் பட்ஜெட் ரூ 65 கோடி. இதில் பாதிக்கு மேல் வசூலித்தாலே பெரிய விஷயம்தான் என்பது இன்றைய நிலவரம். அடுத்த வாரம் மொத்த வசூல் விவரமும் வந்துவிடும். எங்கள் பத்திரிகையிலேயே தியேட்டர்வாரியாக வசூலை வெளியிடவிருக்கிறோம்," என்றார். 

நீண்ட நாள் ஓட்டத்தின் அடிப்படையில் நண்பன் படம், சூர்யா நடித்த ஏழாம் அறிவின் வசூலைத் தொட்டாலே பெரிய சாதனைதான் என்கிறார் ராமானுஜம். 

எந்திரனுடன் ஒப்பீடு...

எந்திரன் வசூலோடு நண்பனை ஒப்பிடப்படுவது குறித்து ஒரு விநியோகஸ்தரிடம் கேட்டதற்கு, "முதலில் எந்திரன் வசூல் பற்றி இவர்களுக்கு ஏதாவது தெரியுமா... அந்தப் படம் முதல் நாளே ரூ 50 கோடிக்குமேல் வசூலித்தது உலகெங்கும். அப்படியிருந்தும்கூட இங்கு சில தியேட்டர்கள் நஷ்டப்பட்டுவிட்டதாக புலம்பியதும் நடந்தது. அந்தப் படத்துக்கு அதுதான் நிலைமை என்றால்... மற்ற படங்களையெல்லாம் என்னவென்று சொல்வீர்கள்?" என்றார் நம்மிடம். 

வேட்டை எப்படி?

தமிழ் ரசிகர்கள் யோசிக்கத் தெரியாதவர்கள் என்ற மாபெரும் நம்பிக்கையில் எடுத்த படம் வேட்டை என்கிறார் ராமானுஜம். என்னதான் பொழுதுபோக்கு என்றாலும், குறைந்தபட்ச லாஜிக் கூடவா வேண்டாம் என கேட்கிறார் அவர்.

இந்தப் படத்தின் வசூல் குறித்துக் கூறுகையில், "இந்தப் படத்தின் வியாபாரத்திலேயே நிறைய சந்தேகங்கள் உள்ளன. சரி, விற்றவர் - வாங்கியவரின் பிரச்சினை. படத்தைப் பொறுத்தவரை, இதற்கும் நண்பனுக்கு இணையான விமர்சனங்கள், ஆதரவு மீடியா உலகில் இருந்தது. குறிப்பாக இரண்டு பெரிய பத்திரிகைகள் இந்தப் படங்களை கிட்டத்தட்ட குத்தகைக்கு எடுத்துக் கொண்டதுபோல வரிந்து கட்டிக் கொண்டு தாங்களாகவே விளம்பரம் செய்து வந்தார்கள்.

அதுகூட இப்போது கைகொடுக்கவில்லை. வேட்டையால் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு ரூ 10 கோடி வரை நஷ்டம் வரும் வாய்ப்புள்ளது," என்றார் ராமானுஜம்.

இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத முக்கிய திரையுலகப் புள்ளி நம்மிடம் கூறுகையில், "நண்பன் பட வசூல் ட்ராப் என்பது உண்மைதான். ஓரளவு நஷ்டம் வரவும் வாய்ப்புள்ளது. மற்றபடி வெளியான பொங்கல் படங்களில் நண்பன் பரவாயில்லை என்பதுமட்டும்தான் ஆறுதல். ஆனால் வேட்டையால் பெரிய நஷ்டம். கொள்ளைக்காரன் தப்பான நேரத்தில் வந்து மாட்டிக் கொண்டது," என்றார். 

கொள்ளைக்காரன்...

இந்தப் பொங்கலுக்கு வந்த கிராமியப் படம். ஓரளவு யதார்த்தமான படம் என்று பாராட்டப்பட்ட கொள்ளைக்காரனை பெரிய பத்திரிகைகள் கண்டுகொள்ளவே இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

"உண்மைதான். காரணம் வேட்டை, நண்பன் தயாரிப்பாளர்கள் இந்த கொள்ளைக்காரன் வெளியாவதை ரசிக்கவே இல்லை. அவர்களின் மனசுப்படியே பத்திரிகைகள் நடந்து கொண்டன. நியாயமாக இந்த இரு படங்களையும் விட கொள்ளைக்காரன் தரமான படமே. ஆனால் ஓடவில்லை. காரணம் பெரிய படங்களுக்கு தரப்பட்ட முக்கியத்துவத்தில் இந்த கொள்ளைக்காரன் காணாமல் போய்விட்டது. தனியாக வந்திருந்தால் ஓரளவு தப்பு பண்ணாமல் போயிருக்க வேண்டிய படம் அது," என்றார் ராமானுஜம். 

இப்போது மீண்டும் தலைப்பை படியுங்கள்!

திருந்துங்க தயாரிப்பாளர்களே..

பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களைப் பகிர்ந்து கொண்ட கையோடு சில விநியோகஸ்தர்கள் சொன்ன இன்னொரு விஷயம், தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் ஏன் திரும்பத் திரும்ப இப்படி பொய் சொல்லி ஹீரோக்களைக் காப்பாற்றிவிடுகிறார்கள் என்பது. "இந்தப் படத்தால் இவ்வளவு நஷ்டம் என்பதை பட்டவர்த்தனமாக சொல்லிவிட்டால், ஹீரோவின் இமேஜும் உடையும், சம்பளமும் குறையும். ஆனால் அதைச் செய்யாமல் இப்படி தாங்கிப்பிடித்து மீண்டும் மீண்டும் குனிகிறார்கள்.. அப்புறம் புலம்புகிறார்கள்," என்றனர்!

தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸிஸ் பரவலாக பேசிக்கொள்ளப்படும் இன்னொரு முக்கியமான விஷயம், மௌனகுரு படம். "இந்தப் பொங்கல் ரிலீஸில் காணாமல் போய்விடும் என்று பலரும் நம்பிய படம் அருள்நிதி நடித்து சாந்தகுமார் இயக்கத்தில் வந்த மௌன குரு. ஆனால் ஆச்சர்யம், இன்னும் ஓரளவு ஸ்டெடியாக இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது..!" என்கிறார்கள்.

(சரி.. பொங்கலுக்கு மேதை என்றொரு படம் வந்ததே என்று கேட்டதற்கு... "விடுங்க நண்பா பாவம்... பிரஸ் ஷோவுக்கே 20 பேர்தான் வந்தாங்க. இதுல தியேட்டர் நிலவரத்தை கேட்டுக்கிட்டு.." என்றார் சக பத்திரிகை நண்பர் ஒருவர்!)

Wednesday, January 25, 2012

நண்பனில் நடிக்காததில் வருத்தமில்லை, மகிழ்ச்சிதான்! - மாதவன்



Madhavan
நண்பன் படத்தில் நான் நடிக்காததில் வருத்தம் இல்லை. உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன், என்கிறார் மாதவன்.

ஆர்யாவுடன் இணைந்து மாதவன் நடித்த வேட்டை படம் பொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படம் குறித்து மாதவன் கூறுகையில், 'வேட்டை படத்தில் ஆர்யாவுடன் நடித்தது ரொம்பப் பிடித்திருந்தது. தமிழில் இரண்டு ஹீரோ படங்கள் இனி நிறைய வரும் என நினைக்கிறேன்.

நண்பன் படம் நன்றாக வந்தது மகிழ்ச்சி. ஆனாலும் அதில் நடிக்கவில்லையே என்ற வருத்தம் துளியும் இல்லை. நடிக்காதது ஒரு விதத்தில் நல்லதுதான்.

நானும், பிபாஷாபாசுவும் 'ஜோடி பிரேக்கர்ஸ்' (இந்தி) படத்தில் நடித்த போது, எங்க ஜோடி பொருத்தம் எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், அந்த படம் வெளி வந்து, அதைப் பார்த்த போது நாங்கள் இருவரும் அவ்வளவு பொருத்தமான ஜோடியாக தெரிந்தோம். பிபாஷாவைப்போல் தீபிகா படுகோனேயும் எனக்கு பொருத்தமானவராக இருப்பார்.

வேட்டையில் சமீரா எனக்கு சரியான ஜோடியாக இருந்ததாக பார்த்தவர்கள் சொல்கிறார்கள். எப்படியோ, என்னுடன் நடிப்பவர்களுக்கு நான் பொருத்தமாக இருப்பது சந்தோஷம்தான்," என்றார்.