Saturday, March 3, 2012

சென்னையில் நிரந்தரமாக குடியேறுகிறார் நயன்தாரா?



Nayanthara
தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டுள்ள நயன்தாரா, சென்னையில் நிரந்தரமாக தங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரபுதேவா உடனான காதல் திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட நயன்தாரா முடிவு செய்திருந்தார். அதற்காக தெலுங்கில் ராமராஜ்ஜியம் படத்தில் கடைசியாக நடித்துவிட்டு தொடர்ந்து படம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

ஆனால் மாதங்கள் கடந்த நிலையில், தற்போது மனம் மாறிவிட்ட பிரபுதேவா திருமணத்தில் ஆர்வம் குறைந்தவராக காட்டுகின்றார். இதனால் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார் நயன்தாரா. அதற்காக நடிகர் அஜீத் உடன் பில்லா- 2 படத்தில் சில காட்சிகளில் நடிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது.

மேலும் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க நயன்தாரா முடிவு செய்துள்ளாராம். எனவே அதற்கு வசதியாக சென்னையில் நிரந்தரமாக தங்க உள்ளாராம்!