Sunday, December 21, 2014

அஜித்தை கண்டு வாயைபிளந்த ராஜபக்சே: எம்.ஜி.ஆருக்கு பிறகு உருவான ரசிகர் கூட்டம்..!


News
இலங்கையில் நடிகர் அஜித்திற்கு 60 அடியில் பிரமாண்டமான 'கட் அவுட்' வைக்கப்பட்டுள்ளது. இந்த 'கட் அவுட்' வைக்கப்பட்டுள்ள இடம் மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடம். அங்கு பேனர்கள் வைப்பதற்கே போலீஸ் பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. இப்படி ஒரு சிக்கலான இடத்தில் இலங்கையில் உள்ள அஜித் ரசிகர்கள் 60 அடி கட் அவுட்டை அசால்டாக வைத்து அமர்க்களம் செய்துள்ளனர்.
எம்.ஜி.ஆருக்கு 40 அடி கட்டவுட் வைக்கப்பட்டதே இலங்கையில் சாதனையாக இருந்தது. அதன் பிறகு அஜித்தின் ஆரம்பம் படத்திற்கு ஜப்னாவில் உள்ள திரையரங்கில் 58 அடி உயரத்தில் கட் அவுட் வைத்தனர். தற்பொழுது 60 கட்அவுட்டை வைத்து மீண்டும் சாதனை படைத்துள்ளனர்.
சிங்களவர் ஆட்சி நடக்கும் இலங்கையில், எப்படி அஜித்திற்கு அதுவும், போக்குவரத்து மிகுந்த இடத்தில் கட்அவுட் வைக்க அனுமதித்தனர் என பெரிய கேள்வி எழுந்தது? இதில் தான் ராஜபக்சேவின் அரசியல் தந்திரம் ஒளிந்துள்ளது.
தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருந்ததைப்போல் இலங்கையிலும் ஒரு பெரிய ரசிகர்கூட்டம் உண்டானது. தற்பொழுது அஜித்திற்கும் அதே போல் வெறித்தனமான ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது. தற்பொழுது இலங்கையில் தேர்தல் நடைபெற உள்ளதால் அஜித் ரசிகர்களின் ஓட்டுகளை அள்ளக் காத்துள்ளார் ராஜபக்சே.
அஜித் ரசிகர்கள் ஓட்டுகளை பெறுவதற்காகவே கட் அவுட் வைக்க அனுமதி அளித்துள்ளது ஆளும் கட்சி.  கடல் கடந்தும், நாடு கடந்தும் ராஜபக்சேவே வாயை பிளக்கும் அளவிற்கு அஜித்தின் ரசிகர்படை பரந்துவிரிந்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.

Source:http://ta.newstig.com/