Sunday, February 5, 2012

மல்லிகை, நயன் மயங்கும் மலரல்லவோ...!




Nayanthara
நடிகை நயன்தாராவுக்கு மல்லிக்கைப் பூ என்றால் அவ்வளவு பிரியமாம். அதனால் எங்கு வந்தாலும் தலை நிறைய மல்லிகைப்பூ வைத்துக் கொள்ளத் தவறுவதில்லையாம்.

மல்லிகைப்பூவுக்கு மயங்காத பெண்ணும் உண்டோ. அதற்கு நயன்தாராவும் விதிவிலக்கல்ல. படங்களில் எப்பொழுதும் மல்லிகைப்பூவுடன் வர முடியாதல்லவா அதனால் அவர் தான் எங்கு சென்றாலும் தலை நிறைய மல்லிக்கைப் பூ வைத்து மங்களகரமாகச் செல்கிறார்.

படங்களில் சேலை கட்டி, பாந்தமாக வரும் கேரக்டர்கள் என்றால் நயனுக்கு ஜாலியாகி விடுகிறதாம். காரணம், மல்லிகைப் பூவை அள்ளி வைத்துக் கொள்ளலாம் அல்லவா. அதேசமயம், பெரும்பாலும் மாடர்ன் உடையில், தலைமுடியை விரித்துப் போட்டு வருவதால் மல்லிகைப்பூ வைக்க முடியவில்லையே என்று நயனுக்கு ஏக்கமாக உள்ளதாம்.

மல்லிகை நயன் மயங்கும் மலரல்லவோ...!