Monday, February 20, 2012

அமலா பால்... மூணும் அவுட்!



இந்த வாரம் வெள்ளிக்கிழமை அமலா பால் நடித்த மூன்று படங்கள் வெளியாகின. அமலா பாலைப் பொறுத்தவரை இது ரொம்ப ரொம்ப ஹேப்பியான சமாச்சாரம்.

ஆனால் படம் பார்த்தவர்களுக்கே மண்டைக் காய்ச்சல்.

அதர்வாவுடன் இவர் நடித்த படம் முப்பொழுதும் உன் கற்பனைகள் நேற்று பெரிய அளவில் வெளியானது. நம்பர் ஒன் டெக்னீஷியன்ஸ், நல்ல நிறுவனம், பிரமாண்ட தயாரிப்பு என அனைத்தும் இருந்தும், இந்தப் படம் ரசிகர்களைக் கொஞ்சம் குழப்பியடித்தது என்பதே உண்மை. நகர்ப்புறங்களிலேயே இந்த நிலை என்றால், இன்னும் மற்ற ஏரியாக்களில் எப்படியோ?

அடுத்து காதலில் சொதப்புவது எப்படி? - படத்தின் ரிசல்டையே தலைப்பாக வைத்த மாதிரி இருந்தது படம். சித்தார்த் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வேறு.

இதே படம் தெலுங்கில் லவ் பெயிலியர் என்ற பெயரில் வெளியானது. அதுவும் நேற்றே வெளியாகிவிட்டது.

ஒரே நாளில் மூன்று படங்கள் வெளியாவது இன்றைய நாட்களில் ஒரு ஹீரோயினுக்கு பெரிய விஷயம்தான். ஆனால் இந்தப் படங்களின் முடிவு, இனி இப்படி ஒரு வாய்ப்பு அமலாவுக்கு அமையுமா என கேட்க வைத்துவிட்டது!

திருமணம் நடக்கும்: வதந்தியை நம்பாதீங்க- அனன்யா



Ananya
தனக்கும், ஆஞ்சநேயனுக்கும் நிச்சயம் திருமணம் நடக்கும் என்று அனன்யா தெரிவித்துள்ளார்.

நடிகை அனன்யாவுக்கும், கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயனுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து அனன்யாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார்.

அனன்யாவுக்கு நிச்சயதார்த்தத்திற்கு முன்பே தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரிந்தும் அதை அவர் தன் பெற்றோரிடம் கூறவில்லை என்று பேசப்பட்டது. கட்டினால் ஆஞ்சநேயனைத் தான் கட்டுவேன் என்று அனன்யா அடம்பிடித்ததாகவும், அதனால் அவரை வீட்டுச் சிறையில் வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இது குறித்து அனன்யா கூறியதாவது,

என்னை யாரும் வீட்டுச் சிறையில் எல்லாம் வைக்கவில்லை. எனது திருமணம் பற்றி யாரோ பிடிக்காதவர்கள் வதந்தியைக் கிளப்பிவிடுகின்றனர். அதை யாரும் நம்ப வேண்டாம். தற்போது என் கையில் 5 படங்கள் உள்ளன. அதை நடித்து முடித்தவுடன் ஆஞ்சநேயனுடன் நிச்சயம் திருமணம் நடக்கும் என்றார்.

அம்புலி 3டி - திக் திக் திகில் பக் பக் பகீர் -சினிமா விமர்சனம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirlKGQC1pfrZhbFBCIJvLGkcnFjnoekUDJ64fW2CE84TDiVusdBD90CVt5ZYOTNEN7xkLJQ9KfuLiOxBdtl9AkEHa3Q4L-x5qCSAj1gJZEOlL-JhoLUZp4BYKPzDekjEAQ3jq8Id8-VPc/s1600/20x10.jpgதமிழ்ல ஏகப்பட்ட படங்கள்  ஹாலிவுட் படங்கள்ள இருந்து திருடி வந்தாலும் ,  3டி யா வந்த படம் மை டியர் குட்டிச்சாத்தான்.. 18 வருஷங்களுக்கு முன்னால நான் சின்னக்குழந்தையா இருந்தப்ப வந்த படம், அதுக்கப்புறம் அன்னை பூமின்னு கேப்டன் கேவலமான ஒரு படத்துல நடிச்சாரு.. இப்போ வந்திருக்கற இந்தப்படம் ஓரளவுக்கு நல்ல திகில் படமா , ஆர் பார்த்திபன் குணச்சித்திரமா நடிக்க பல புது முகங்களை வெச்சு எடுத்திருக்காங்க.. நல்ல முயற்சி.. 

படத்தோட கதை என்ன? ஒரு கிராமம்.. அங்கே சோளக்காட்டு பொம்மை இருக்கற வயக்காடு ஏரியா.. அங்கே யாரும் போக வேணாம்.. அம்புலி அடிச்சுடும்னு ஒரு பேச்சு இருக்கு.. நம்மாளுங்க வேணாம்னு சொன்னாத்தான் வேணும்பான்,,

ஒரு லவ் ஜோடி... ஹீரோ அந்த வழியாப்போறப்ப  அவனை அம்புலி துரத்துது.. எஸ் ஆகி வந்து பகல்ல அம்புலி பற்றி விசாரிக்கறாரு..

1957 - ல  வெலிங்க்டன் காலேஜ்ல ஒரு விஞ்ஞானி ஆராய்ச்சில மனிதனோட ஆயுளை அதிகரிக்கும் மருந்தை கண்டு பிடிக்கறாரு.. அந்த காலத்துல எல்லாம் மனிதனோட சராசரி ஆயுள்  100 ஆண்டுகள் ( இப்போ 60 டூ 70) .ஆனா அவர் கண்டு பிடிச்ச மருந்தை சாப்பிட்டா  150 வருஷங்கள் வாழலாமாம்.. 


http://vanavilfm.com/wp-content/uploads/2011/07/ambuli-300x199.jpg

அவர் ஆராய்ச்சிக்கு சோதனை எலியா  கணவன் இல்லாத ஒரே ஒரு பையன் மட்டும் உள்ள கர்ப்பிணிப்பெண்ணை தேர்ந்தெடுக்கறாரு..மருந்தை அந்த பெண்ணுக்கு ஊசி மூலம் செலுத்தறாரு/..

ஏதோ ஒரு மிஸ்டேக்கால அந்த குழந்தை எசகு பிசகா ராட்சசன் போல பிறக்குது.. அம்மா பிரசவத்துல அவுட்.. சூரிய கிரஹணத்தன்னைக்கு பிறந்ததாலதான் அப்படி இருக்குன்னு ஊர் மக்கள் எல்லாம் பயப்படறாங்க.. ( சூரியன்னாலே தமிழ் நாட்டுக்கு கிரஹனம் தான்.)

 அந்தக்குழந்தை தான் அம்புலி.. ஊர் மக்களை அடிச்சு சாப்பிடுது.. நைட் டைம்ல மட்டும்  அதனால பேய்னு மக்கள் நினைக்கறாங்க.. ஆர் பார்த்திபன் தான் அந்த அம்புலியோட அண்ணன்.. 

2 லவ் ஜோடிகள் எப்படி அந்த அம்புலி கிட்டே இருந்து தப்பிக்கறாங்க .. அம்புலியை யார் போட்டுத்தள்ளுனாங்க என்பது க்ளைமாக்ஸ்,.. 

படம் போட்டு முதல் 20 நிமிஷம் ஒண்ணும் புரியலை.. படம் ஊத்திக்கிச்சோன்னு நினைக்கறப்ப 20 நிமிசத்துக்குப்பின் தான் கதை ஸ்டார்ட் ஆகுது.. 

அம்புலியின் அம்மாவாக வருபவர் உமா ரியாஸ்.. கர்ப்பிணிப்பெண்னாக  ஒரு படத்துல நடிச்சாலும் நடிச்சார், எல்லா படமும் அதே ரோல் தான் இனி தருவாங்க போல பாவம்.. ஆனா நல்ல நடிப்பு.. 

ஆர் பார்த்திபன் மொத்தமே 6 சீன்ல தான் வர்றார்.. நடிக்கவெல்லாம் வாய்ப்பு இல்லை.. 

அஜய், ஸ்ரீஜித், சனம் , திவ்யா நாகேஷ் இவங்க தான் படம் பூரா வர்ற காதல் ஜோடி.. குறை சொல்ல முடியாத நடிப்பு.. கதை நடக்கறது  1978 -1979 கால கட்டம் என்பதால் அதே கால கட்ட உடை நடை பாவனைகள், நடனம் எல்லாம் ஓக்கே.. 

http://cmsdata.webdunia.com/tm/contmgmt/photogalleryimg/big/13476B_amb08.jpg

இயக்குநர்கள் (2 பேர்) பாராட்டு பெறும் இடங்கள்

1. திரைக்கதையில் தொய்வில்லாமல் செம விறு விறுப்பாக கதையை நகர்த்திய விதம்.. 

2. பெரிய நடிகர்கள் யாரையும் நம்பாமல் கதையின் மீதும் , இயக்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்து பெரும்பாலும் புது முகங்களை வைத்தே எடுத்தது.. 

3. திருட்டு டி வி டி யை தடுக்க 3 டி யில் படம் எடுத்தது. ( ஒரே கல்லுல 2 மாங்கா.. பர பரப்புக்கு பரபரப்பு.. காசுக்கு காசு)

4. தமிழில் அம்புலி என்றால் நிலா என்ற அர்த்தத்தை மாற்றி யோசித்தது..

5. சந்திர முகி படத்துக்குப்பிறகு ரசிக்கும்படியான ஒரு திகில் படத்தை கொடுத்தது.. 


http://www.mysixer.com/wp-content/gallery/ambuli-first-3d-movie-in-tamil-gallery/jothsha-sanam-setty.jpg

இயக்குநர் கவனிக்கத்தவறிய இடங்கள் +  லாஜிக் மிஸ்டேக்ஸ்


1.  நான் கடவுள் வில்லன் ஆண்டவன் தன் 8 வயசு சிறுமியுடன் காட்டுவழியில் நடக்கும்போது அதுவும் இரவு நேரத்தில் ஏதோ சத்தம் கேட்க அவர் மகளிடம் நீ இங்கேயே இரு என்று அவரை அம்போ என விட்டுட்டு தனியா போறார்.. அம்புலி அவர் மகளை கொன்னுடுது.. எந்த அப்பாவாவது அப்படி செய்வாங்களா?

2.  எல்லா காலேஜிலும் லீவ் 2 மாசம் தான்.. அதிக பட்சம் ரெண்டரை மாதம்.. ஆனால் படத்தில் ஹீரோ படிக்கும் காலேஜில் 4 மாசம் லீவ் அவ்வ்வ்வ்

3.  சோளக்காட்டு வழியா போனா ஆபத்துனு ஊர் எச்சரிச்சும் அது எப்படி சொல்லி வெச்ச மாதிரி எல்லா பக்கிகளும் முறை வெச்சு போய் மாட்டிக்கறாங்க..?

4. மிட் நைட்ல காதலியை யாருக்கும் தெரியாம ரகசியமா சந்திக்க வர்ற காதலன் சத்தம் இல்லாம வந்த வேலையை பார்த்துட்டு போவானா? புல்லாங்குழல் எல்லாம் ஊதிட்டு காட்டிக்கொடுப்பானா? ( கமுக்கமா இருக்க வேணாமா கணேசா? )

5.  தன் குழந்தை அசுரனா, அவலட்சணமா பிறந்தா ஒரு அம்மாவுக்கு 2 வழி இருக்கு 1. எங்காவது அநாதை ஆசிரமத்துல விடுவது.அல்லது பிறந்த இடத்துலயே விட்டுட்டு நைஸா ஓடி வந்துடறது  2.. அந்த குழந்தையை கொலை செய்து விடுவது.. இதெல்லாம் செய்யாம யாராவது தூக்கு போட்டு சாவாங்களா? தான் செத்துட்டா தன் 8 வயசு பையன் அநாதையா மாறிடுவானே?ன்னு நினைக்க மாட்டாங்களா?

6. ஆர் பார்த்திபன் நினைச்சா தன் தம்பியை சின்ன வயசுலயே கொலை செஞ்சிருக்கலாம்.. அதை எல்லாம் விட்டுட்டு பெரிய ராட்சசனா வளர்ந்து ஊர் மக்களை எல்லாம் அடிச்சு உலையில் போடறதை வேடிக்கை பார்த்துட்டு, க்ளை மாக்ஸ்ல ஏன் கொலை செய்ய பார்க்கறார்?

7. அந்த கிராமத்துல அத்தனை பேர்  அநியாயமா செத்தும் போலீஸ் ஏன் எட்டிப்பார்க்கலை? ஹீரோ போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் செஞ்சும் போலீஸ் ஃபோட்டோ ஆதாரம் கேக்குதே ஏன்?

8. காதலை சொல்லி ஒரு நாள் கூட ஆகலை, அதனால நோ கிஸ் அப்டினு ஹீரோயின் பாப்பா சொல்லுது.. ஆனா அதை தொடர்ந்து வர்ற பாட்டில் மெயின் மேட்டர் தவிர எல்லா வேலயையும் ஹீரோ செஞ்சுடறார் எப்டி?

9. ஹீரோ சோளக்காட்டு வழில போறப்ப சைக்கிள விட்டுட்டு ஓடி போறாரு
.. அப்புறம் வேற ஒரு ஃபிரண்டை கூட்டிட்டு அதே இடத்துக்கு பயந்து பயந்து ஏன் வரனும்? காலைல வந்துடக்கூடாதா?

10. கதை 1978 -80 ல நடக்குது.. அடிக்கடி சொதப்பிட்ட என்ற வசனம் வருது.. அந்த வார்த்தை புழக்கத்தில் வந்ததே 2006ல தான் ( வசனத்தில் சொதப்பியது எப்படி?)



மனம் கவர்ந்த வசனங்கள்

 1.  காதல்ங்கறது....

டேய் ரோமியோ.. போதும்டா அடக்கி வாசி.. 

2. நான் ஊருக்குள்ள வர்றதை வேட்டு வெச்சு கொண்டாடறாங்க போல.. 

நாய், நரிக்கு கூட அப்படித்தான் செய்யறாங்க.. 

3.  டியர்.. என் ரூமை எப்படி கண்டு பிடிச்சீங்க?

ரோமியோ ஜூலியட் காலத்துல இருந்தே ஹீரோயின் ரூம் மாடில தானே?

4. எதுக்காகடா இங்கே வந்தீங்க?

 சும்மா உங்களை எல்லாம் பார்த்துட்டு போலாம்னு வந்தோம்.. 

நான் என்ன உங்க அத்தை பொண்னா?

5. நான் பூங்காவனத்தோட க்ளோஸ் ஃபிரண்டுங்க..

என்னை விட க்ளோஸா?

6.  டேய்.. வாடா அம்புலியோட அண்ணன் வாரான், போய் ஒளிஞ்சுக்கலாம்.. 

அந்த கட்டிலுக்கு அடில பாம்பு வளர்த்தறேன், பார்த்து கடிச்சுடப்போகுது.. 

7. ஊருக்கே ஊது பத்தி விக்கறவங்க நாங்க,எங்களுக்கே தூபமா?

8. உன் ஸ்கூட்டரை குடு..

ம்ஹூம்

 ம், பெரிய கர்ணனோட கசின் பிரதர்...

9.. டியர்.. நான் எதுக்கு வந்தேன்னு சொல்லு பார்க்கலாம்.. 

 என் கிட்டே உதை வாங்கவா?

10.  மான் கறி சாப்பிடறீங்களா?

அய்யய்யோ நான் சைவம்.. 

மான் கூட சைவம் தான்

11. டியர்,, நீ அங்கே போகாதே அது இனிஷியல் ஸ்டேஜ்ல லவ் பண்றவங்க போக வேண்டிய இடம்.. நாம இங்கே போவொம் ஹி ஹி ஹி 

12. கடவுளை நாம அணுக காரணமே  அவர் மேல எந்த தப்பும் இல்லாம இருக்கறதால தான்.. 




எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - சந்திரமுகி, காஞ்சனா மாதிரி திகில் பட ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம்.. குழந்தைகளும் பார்க்கலாம்.. 

ஈரோடு ஸ்ரீசண்டிகா தியேட்டர்ல படம் பார்த்தேன்

டிஸ்கி - 1 - 3டி கண்ணாடியை போட்டு படம் பார்க்கரது செம ஜாலி.. வலது கண்ணை மூடி பார்த்தா எல்லாம் பச்சையாவும் , இடது கண்ணை மூடிப்பார்த்தா எல்லாம் சிவப்பாவும் தெரியுது.. அதுல ஒரு குழந்தைத்தனமான சந்தோஷம்.. தியேட்டர்ல எல்லாரையும் கண்ணாடியோட பார்க்க செம காமெடி.. 

டிஸ்கி 2 - படம் விட்டு போறப்ப நைஸா அந்த கண்ணாடியை சுடலாம்னு பலர் ஐடியா பண்னாங்க. ஆனா தியேட்டர் வாசல்ல நின்னு கவனமா கலெக்ட் பண்ணிட்டாங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

டிஸ்கி 3 - படம் போட்டு டைட்டில்ல எழுத்து ஓடுனப்ப எனக்கு எழுத்தே தெரியல.. பக்கத்துல ஒரு லவ் ஜோடி உக்காந்திருந்தது./. உங்களுக்கு தெரியுதா ஏதாவதுன்னேன்.. சாரி நாங்க படம் பார்க்க வர்லைன்னாங்க.. அடங்கோ.. 

டிஸ்கி 4 - விமர்சனத்துக்கு சம்பந்தம் இல்லாத ஒரு மேட்டர் நான் இந்தப்பட டைரக்டரா இருந்தா அந்த அம்புலி கேரக்டரை பெண் கேரக்டர் ஆக்கி ஸ்பீசஸ் 2 படத்துல வர்ற மாதிரி அம்புலி அந்த வழியா வர்ற ஆண்களை ரேப் பண்ணி கொலை பண்ற மாதிரி காட்டி இருப்பேன் கில்மாக்கு கில்மா, சுவராஸ்யத்துக்கு சுவராஸ்யம்  ஹி ஹி

http://mmimages.mmnews.in/gallery/2012/Feb/2053_L_galvpf.gif

காதலில் சொதப்புவது எப்படி? - ஈகோ கோ கோ - சினிமா விமர்சனம்


http://www.filmics.com/tamil/images/stories/news/2012/February/17-02-12/Kadhalil-Sodhapuvathu-Eppadi-Movie-Review.jpg 

ஏராளமான திறமைகளை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு , தங்கள் தன்மானத்தை அடகு வைத்து, இளமையை தொலைத்து கனவுத்தொழிற்சாலை என்று வர்ணிக்கப்படும் கோடம்பாக்கத்தில் குடி இருக்கும் ஆயிரக்கணக்கான உதவி இயக்குநர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாய் எட்டு நிமிட குறும்படத்தையே விசிட்டிங்க் கார்டாக வைத்து  இரண்டரை மணி நேர படம் எடுக்கும் வாய்ப்பை தேடி வந்த சீதனமாய் பெற்று, பெயரை தக்க வைத்திருக்கும் நாளைய இயக்குநர் புகழ்  பாலாஜி மோகன்-க்கு ஒரு பூங்கொத்துடன் இந்த விமர்சனத்தை சமர்ப்பிக்கிறேன்.

கதை ரொம்ப சிம்ப்பிள் அண்ட் நீட்.. எம் ஜி ஆர் அன்பே வா படத்திலும், எஸ் ஜே சூர்யா குஷி படத்திலும் சொன்னதுதான்.. காதலர்களுக்குள் ஏற்படும் ஈகோ மோதல்கள் அவர்கள் அன்பை குறைத்து விடாது, இறுதியில் சேர்த்து விடும்.. இந்த ஒன்லைன் கதையை 8 நிமிட குறும்படத்தில் எந்த அளவு சுவராஸ்யமாய் சொன்னாரோ அதே அளவு  சுவராஸ்யத்துடன் திரையிலும் சொல்லி இருக்கிறார்.. 

சித்தார்த்தின் காதலி அமலா பால் ஃபேமிலில அப்பா சுரேஷ் அம்மாவை விட்டு பிரிஞ்சிருக்கார்.. டைவர்ஸ் வரை போகுது.. அந்த கேசை டீல் பண்றது சித்தார்த்தின் அப்பா.. சின்ன சின்ன விஷயத்துக்காக அடிச்சுக்கற, பிரிஞ்சுக்கற சித்தார்த் - அமலா பால் காதல் ஜோடி, அது போக அவங்க நண்பர்களில் 3 காதல் ஜோடி எப்படி ஊடல் தாண்டி கூடல் வரை சுபமா சேர்றாங்க என்பது தான் கல கல காதல் திரைக்கதை.. 

தமிழ் சினிமா பயன் படுத்த தவறிய நல்ல நடிகர்களில் ஒருவர் சித்தார்த் என்பது இந்தப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகிறது. மவுன ராகம் கார்த்திக்கிடம் பார்த்த அதே துள்ளல், இளமை என ஆள் செம கலாய்க்கும் நடிப்பு.. ஆனால் அவர் சுற்றுலா கைடு போல் ஆடியன்சை பார்த்து கதை சொல்வது, அவ்வப்போது கதை மாந்தர்களிடமிருந்து ஒரு ஸ்டெப் விலகி கேமராவைப்பார்த்து கமெண்ட் சொல்வது அந்நியம் ஆக்குகிறது.. குறும்படத்தில் சக்ஸஸ் ஆன இந்த டெக்னிக் திரைபப்டத்தில் ஒர்க் அவுட் ஆகவில்லை.. 



அமலா பால் மெழுகு பொம்மை போல் வர்றார்.. நல்ல கெமிஸ்ட்ரி.. பாடல் காட்சிகளில் அழகாக தெரிகிறார்.. படத்தில் வரும் 78 சீன்களில்  ஒரு சீனில் கூட துப்பட்டா போடாமல் வருவதற்கு நன்றி தெரிவிப்பதா? வாழ்த்து சொல்வதா? ( 2 சீன்ல மட்டும் போனா போகுதுன்னு துப்பட்டா இருக்கு  கழுத்து ஒண்ட.. ஹி ஹி )

குறும்படத்தில் சித்தார்த்தின் நண்பர்களாக வந்த அதே ஆட்கள் தான் இதிலும்.. மனிதர்கள் கலக்கி எடுத்துட்டாங்க.. அந்த தாடிக்காரரின் நடிப்பு செம செம.. குண்டு பப்ளிமாசாக வரும் நண்பர் சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாய் ஹீரோ ஹீரோயின்  இருவர்க்கு இடையே பஞ்சாயத்து பேசும்போது மேலும் சண்டையை இழுத்து விடும் சீன் தியேட்ட்டரே அல்லோலகல்லோலப்படும் அதகளம் ஆரவாரம்.. வாட் எ ஒண்டர் ஃபுல் பர்ஃபார்மென்ஸ்.. பை டைரக்டர்.. 

 அமலா பாலின் அப்பாவாக வரும் சுரேஷ்  பாந்தமான நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்..கோயிலில் அவர் தன் மனைவியை பல வருட பிரிவுக்குப்பின் அணைக்கும் காட்சியில் சத்யா பட பாட்டு - வளையோசை  கல கல -- கலக்கல்

ஹீரோ - ஹீரோயின் இருவர் பெற்றோரையும் மிகச்சிறப்பாக கதைக்குள் கொண்டு வந்த விதம் வெல்டன்.. 

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு கன கச்சிதம்.. யூத் ஃபுல்.. 

http://img1.dinamalar.com/cini/ShootingImages/12000259159.jpg

இயக்குநர்  பாராட்டு பெறும் இடங்கள்

1.   அண்ணா என்று தன்னை அழைத்த பெண்ணை கடைசி வரை விடாமல் துரத்தி லவ் பண்ண வைத்த காதல் எப்பிசோடு இளமை.. 

2.  என் ஆளுக்கு ஃபோன் பண்ணப்ப  ஒரு பெண்ணோட இருமல் சத்தம் கேட்டுது, வேற ஒரு பொண்ணோட தொடர்பு இருக்கும் போல என ஒரு பெண் சொல்லும்போது அவள் அருகில் இருக்கும் பெண் இருமவது.... டைரக்‌ஷன் டச்.. 

3.  பாண்டிச்சேரியில் நடக்கும் கேர்ல்ஸ் கச்சேரி நீட்.. அந்த குழுவில் இடம் பெற்ற 3 ஃபிகர்களும் இளமை, இனிமை.. 

4. ஹீரோயினின் ஸ்கூல் ஃபிரண்ட் மலையாளியுடன் பேசுவதை பார்த்து ஹீரோ  சந்தேகப்படும் சீன்  ஓக்கே 

5. தன் மனைவிக்கு காதல் கடிதத்தை தன் மகள் மூலம் கொடுக்கும் சுரேஷின் நடிப்பு துள்ளல், அதை படித்து அவர் மனைவி காட்டும் ரீ ஆக்‌ஷன் டாப்.. 

6. ஒவ்வொரு ஊடல் முடிந்த பின்னும் ஹீரோ ஹீரோயினிடம் ஐ லவ் யூ சொல்லும்போது “இதுக்கு இத்தனை நாள் ஆச்சா? என ஹீரோயின் கண் கலங்கி கேட்கும் இடம்.. 

7.  டேய் விழுங்கடா க்ளாஸ்க்கு போய், விழுந்தேன் நான் 2 பாடல்களும் இதம் , இசையில் பாடல் வரிகளில்.. 



இயக்குநர் கவனிக்கத்தவறிய  லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. நியூ இயரா இருந்தாலும் சரி, பிறந்த நாளாக இருந்தாலும் சரி காதலர்கள் கண் விழித்து முதல் ஆளாக வாழ்த்து பரிமாறுவதுதான் 1990-ல் இருந்து 2011 வரை நடைமுறையில் இருக்கும் யூத் ட்ரெண்ட்.. ஆனால் அமலா பால் தன் ஆள் சித்தார்த்தின் பிறந்த நாளை காலை 8 மணிக்கு செல்லில் அலாரம் வைத்திருப்பது எப்படி? ( படத்தில் மிக முக்கிய திருப்பமே அன்று ஹீரோயின் வாழ்த்து சொல்லாமல் போவதில் தான் ஸ்டார்ட் ஆகுது)

2. ஒரு சீனில் ஹீரோ பாட்டி வீட்டுக்கு குடும்பத்தோட போறார், செல்லை வீட்டில் மறந்து வெச்சுட்டு போயிடறார்.. அன்று மாலை முழுவதும் காதலியுடன் தொடர்பு கொள்ள முடியாமல் பரிதவிக்கிறார்.. அமலா பால்க்க்கு செம கோபம்,,. இந்த சீனில் லாஜிக் இடிக்குதே.. ஹீரோவோட அம்மா, அப்பா, அல்லது அங்கே பாட்டி வீட்டில் உள்ள யாராவது சொந்தக்காரர் ஃபோன் வாங்கியோ, அட்லீஸ்ட் ஒன் ருப்பி காயின் பூத்திலோ காதலிக்கு ஃபோன் பண்ணி “ இந்த மாதிரி ஃபோனை வெச்சுட்டு  வந்துட்டேன் “ என சொல்லி இருக்க முடியாதா?

3. ஒரு சீன்ல ஹீரோவோட அப்பா டேய் ஃபேஸ் புக்ல ரிக்குவஸ்ட் கொடுத்திருக்கேன், அப்புறம் ஆன் லைன் வந்தா அக்செப்ட் பண்ணிடு என்கிறார்.. அடுத்த செகண்டே “ என்னடா, உன் ஃபேஸ் புக்ல ஒரு பொண்ணோட படம் யாரு? என்கிறார்.. எப்படி அதற்குள் ஃபோட்டோ தெரிந்திருக்கும்?

4.  ஹீரோ - ஹீரோயின் தங்கள் காதலை வெளிப்படுத்தும் முன் சந்திக்கும் 4 காட்சிகளில் இருவரும் சொல்லி வைத்தாற்போல ஒரே வண்ண ஆடை அணிவது எப்படி?

5. படத்தின் பின்னணி இசையில் அந்தக்கால டாம் & ஜெர்ரி கார்ட்டூன் இசை போல் வருவது படத்தின் சீரியஸ் தன்மையை பாதிக்கிறது.. 

6. காலேஜ் செமினாரில் ஆன்சர் பேப்பர் கொடுக்கும் சீனில் 12 ம் வகுப்பு கணக்கு பாடம் இருக்கு.. மார்ஜின் இல்லாமல்..

7. பொதுவா காதலர்கள் பலர் முன் சண்டை போட்டுக்குவாங்க, ஆனா மன்னிப்பு கேட்பது,ஊடல் முடிந்து சந்தோஷமாக கட்டிப்பிடிப்பது இதை எல்லாம் படத்துல ஹீரோ ஹீரொயின் பப்ளிக்கா பலரது முன்னிலையில் செய்ய்றாங்க.. அதுவும் க்ளைமாக்ஸில் இருவரும் சேரும்போது டோட்டல் காலேஜே கூடி கிளாப்ஸ் பண்ணுவது ,வேடிக்கை பார்ப்பது ஏதோ டிராமா பார்ப்பது போல் உள்ளது.. 

இந்தப்படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்? ஒருவனுக்கு ஒருத்தி என ஒரே ஒரு உள்ளத்தை ஆயுள் முழுக்க காதலிக்க நினைக்கும் உண்மையான காதலர்கள், சின்ன சின்ன பிரச்சனைகளால் ஊடல் கொண்டிருக்கும் தம்பதிகள், கணவனை பிரிந்து வாழும் மனைவிகள், மனைவியை பிரிந்து வழும் கணவர்கள்,காதலிக்க நினைப்பவர்கள் என எல்லாரும் பார்க்கலாம்..

 யாரெல்லாம் பார்க்கக்கூடாது? பஞ்ச் டயலாக், ஓப்பனிங்க் ஃபைட் வேணும் என்ற மசாலா பட ரசிகர்கள்,ஹீரோ ஒரு அடி அடித்தால் 56 பேர் ஆஸ்பிடலில் போய் படுக்கனும்னு நினைக்கற ஓவர் பில்டப் ஒலக சாமிகள் தவிர்க்க வேண்டிய படம்.. 

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 42

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - லவ்வர்ஸ் ஸ்பெஷல் ஃபிலிம்..

முப்பொழுதும் உன் கற்பனைகள் - சைக்கோ லவ் த்ரில்லர் - சினிமா விமர்சனம்


http://www.filmics.com/tamil/images/stories/news/October_2011/07.10.11/muk.jpg
சில கதைகளை நேரடியா சொன்னா ரொம்ப சாதாரணமான கதையா தோணும்.. ஆனா சாதா கதையையே சுவராஸ்யமா சொல்ற வித்தை வெகு சிலருக்கே கை வருது.. இந்தப்படத்தோட டைரக்டரும் டேலண்ட்டான ஆள் தான்.. ஆல்ரெடி குடைக்குள் மழை படத்துல ஆர் பார்த்திபன் சொன்ன கதையையே கொஞ்சம் பாலீஷ் பண்ணி புது கதை மாதிரி சொல்லி இருக்கார்.. 

செல்வராகவன் பாணில சொன்னா மல்டி லேயர் ஸ்க்ரீன்ப்ளே, ராஜேஷ் குமார் பாஷைல சொன்னா 3 வெவ்வேற தளம் அமைச்சு மூன்றையும் ஒன்றாக இணைக்கும் கோட்டு வரிசை கதை தான் திரைக்கதை உத்தி..

அதர்வா சென்னைல கம்ப்யூட்டர் செக்‌ஷன்ல வேலை பார்க்கறார்..அந்த கம்பெனில அம்லா பால் எம் டி.. அதர்வா  படம் போட்ட முதல் ரீல்லயே அந்நியன் டைப்ல ஒரு கொலை பண்றார்.. 

பெங்களூர்ல அடிக்கடி ஃபோன் போட்டு பேசறார்.. அங்கே ஒரு அமலா பால்.. அவங்க பேரு சாரு.. அடிக்கடி ஃபோன்ல சாரு சாருன்னு உருகறார்.. சென்னைல இருக்கற அமலா பால் பேரு லதா.. அவருக்கு டவுட்.. அந்த சாரு யாரு?





http://www.tamilnewsa2z.com/uploaded_files/news_images/132937593751.jpg

கடைசில பார்த்தா பெங்களூர்ல அப்டி ஒரு கேரக்டரே கிடையாது.. இவரா கற்பனை பண்ணிக்கறார்.. ஃபிளாஷ் பேக்.. அவங்கம்மா ரொம்ப அன்பா மகனை வளர்த்தறாங்க.. சின்ன வயசுல இருந்தே அதர்வா ஒட்டுண்ணியா அதாவது அம்மா கோண்டா , 24 மணி நேரமும் அம்மா பிள்ளையா வளர்றார்.. பெரிய பையன் ஆனதும் வேலைக்காக கிராமத்துல அம்மாவை விட்டு சென்னைக்கு போறார்.. 

அங்கே அமலா பால் மீட் பண்றார்.. அமலா பால் அமெரிக்கா ரிட்ட்டர்ன்... அவங்க கல்ச்சர் வேற.. சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் கட்டிப்பிடிச்சு , அணைச்சு ( டேய் 2 ம் 1 தான்) அன்பை , மரியாதையை வெளிப்படுத்துவாங்க.. அதை லவ்னு தப்பா நினைக்கறார்.. ஆனா அமலா பால் அவரை லவ் பண்னலை.. அவருக்கு வில்லன் கூட நிச்சயதார்த்தம் நடந்துடுச்சு.. 

இப்போ ஒரு பார்ட்டி நடக்கறப்ப வில்லன் கோஷ்டில 3 பேரு அமலா பால் கையை  பிடிச்சு இழுத்துடறாங்க.. அதர்வா ஓவர் எமோஷன் ஆகி அந்த ஆட்களை போட்டுத்தள்ளிடறார்.. 

இந்த சைக்கோத்தனமான காதலனை அமலா பால் எப்படி சமாளிக்கறாங்க.. என்ன ஐடியா பண்றாங்க.. அப்டிங்கறதுதான் கதை.. ( யாருக்காவது கதை புரிஞ்சுதா? ஹி ஹி )

அதர்வாக்கு இது 2 வது படம்.. பாணா காத்தாடில அசால்ட்டா லவ்வர் பாயா வந்துட்டுப்போனவர்க்கு அழுத்தமான வேடம்.. சிட்டி பாய்க்கான ரிச், ஸ்டைல் எல்லாம் ஓக்கே.. நடன ஸ்டெப்களில் அடடே.. சண்டைக்காட்சிகளில் சுறு சுறுப்பு.. அப்பா முரளியை விட செம  பர்சனாலிடி தான்.. நல்ல எதிர் காலம் உண்டு.. 

அம்லா பால்.. ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, கிளாமர் இந்த 3 மட்டும் வெச்சுக்கிட்டு குப்பை கொட்ட முடியாது பாப்பா.. ஹி ஹி கொஞ்சம் நடிக்கனும்.. ட்ரை த ட்ரை.. தேவதை டிரஸ் காஸ்ட்யூம்ல ( டிரஸ்னா  என்ன?காஸ்ட்யூம்னா என்ன? 2ம் 1 தான் ) வர்ற சீன்ல லோ கட் சீன் ஹி ஹி தியேட்டர்ல செம கிளாப்ஸ்.. 

படத்துல சந்தானம் வர்ற 4 சீன்கள் செம கல கல .. இறுக்கமான திரைக்கதையில் அவர் ஒரு ரிலாக்ஸ்..  ஆடை வடிவமைப்பு தீபாலி நார் செம கலக்கு கல்க்கிட்டாங்க.. பாடல்கள் அனைத்தும் தாமரை.. படம் ரிலீஸ் ஆகும் முன்பே 3 செம ஹிட்.. ஆனா படத்துல அது வேக தடைக்கல்

பொதுவா சைக்கோ த்ரில்லர் லவ் ஸ்டோரில பாடல்களை தவிர்க்கனும்.. ( ஆனா ஆடியோ மார்க்கெட் வேணுமே..)ஜி வி பிரகாஷ் இசை ஓக்கே.. 3 பாடல்கள் ஹிட்.. பின்னணி இசை சூப்பர்னு சொல்ற அளவு இல்லை.. ஆல்டைம் ஃபேவரைட் இன் பேக் கிரவுண்ட் மியூசிக் ஈஸ் இளையராஜா தான்.. 

http://tamil.oneindia.in/img/2011/09/06-amala-paul300.jpg

படத்தில் இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. அமலா பாலின் காலை எடுத்து ( தனியா பிச்சுன்னு நினைக்காதீங்க )கிதார் மாதிரி வாசிக்கும் இடத்தில் அப்ளாஸ்... அது போக பல இடங்களில் ஹீரோ ஹீரோயின் பாடி கெமிஸ்ட்ரி  , நெருக்கம்.. எல்லாம் ஓக்கே.. ( மனசு குளிர்ந்து சொல்றேன் நல்லா இருங்கடே..  ஹி ஹி ) 

2. சண்டைக்காட்சிகளை வடிவமைத்த விதம் , ஒளிப்பதிவு ,லொக்கேஷ்ன்கள் எல்லாம் பாராட்டும் விதத்தில்./. அதே போல் திரைக்கதை.. இதை நேரடியாக , சாதா கதையாக சொல்லி இருந்தால் சப்பென்று போய் இருக்கும்.. 

3.  மழை பொழியும் மாலையில், மர நிழலின் சாரலில், அவள் நினைவின் ... பாடலில் தாமரையின் வரிகள், இசை இரண்டும் நம்மை தாலாட்டும் விதம்.. செம.. ஓ சுநந்தா சுகந்தானா? பாட்டு, அன்பே உன் ( பாப்சாங்க்),யார் அவள் யாரோ..? கண்கள் நீயே.. காதல் நீயே..  ( அம்மா செண்ட்டிமெண்ட் பாட்டு) சொக்குப்பொடி போட்ட ( க்ளைமாக்ஸ் ஸ்பீடு பாட்டு) என  எல்லா பாடல்களும் கேட்கும் விதத்தில், ரசிக்கும் விதத்தில் அமைத்தது.. 




http://2.bp.blogspot.com/-kdvlTOwGWxs/ToXFavZSx9I/AAAAAAAAOPE/dBuEtFCIHNY/s400/05mptb_lead_GPA36SS_747090e.jpg

இயக்குநர் செய்த சில தவறுகள், லாஜிக் மிஸ்டேக்ஸ்


1. ராங்க் கால் ராணி கம் பொய்யான சாரு அதர்வா ஃபோன்ல பேசறப்ப  சாரு மாதிரியே பேசி சமாளிக்கறார் ஓக்கே, அமலா பால் , டாக்டர் 2 பேரும்  அதர்வா கூட பேசிட்டு இருக்கறப்ப பொய்யான சாரு கிட்டே இருந்து வந்த ஃபோனை உண்மையான சாரு அமலா பால் அட்டெண்ட் பண்றப்ப அந்த பொண்ணு ஏன் உண்மையை சொல்லலை? ( ஏன்னா அப்பவே சொல்லி இருந்தா இவங்க பொழப்பைக்கெடுத்துட்டு பெங்களூர் அலைஞ்சிருக்கத்தேவை இல்லை)

2. அதர்வாவோட அம்மா தான் தனிமைல  இருக்கறதாலயும்,அழகா  இருக்கறதாலயும்தான் ஆம்பளைங்க சிலர் தன்னை அடைய அப்ரோச் ( எவ்லவ் டீசண்ட்டான வார்த்தை) பண்றாங்கன்னு  யோசிச்சு ஒரு முடிவு எடுக்கறார்.. அது இன்னான்னா அவர் மொட்டை அடிச்சுக்கறார்.. அடங்கொய்யால நம்மாளுங்க  ரேப் பண்னனும்னு முடிவு எடுத்துட்டா ரஜினியே வேணாம்னு சொன்னாலும் கேட்க மாட்டாங்க.. மொட்டை அடிச்சுட்டா மட்டும் ரேப் பண்ண வராம சும்மா இருந்துடுவாங்களா? ( அந்த ஊர் ஆளுங்க எல்லாம் பக்கிப்பசங்க போல. மொட்டை அடிச்ச பெண்ணை ஏறெடுத்து,  பார்க்க மாட்டாங்களாம்.. அவ்வ்வ்வ் 

3.  அதர்வா வேலைக்காக சென்னை வர்றார் ஓக்கே.. அம்மா அவரை பிரிஞ்சு ஏக்கத்துல நோய் வாய்ப்படறார்// எதுக்கு அவர் அங்கே தனியா கஷ்டப்படனும்?அன் மேரீடுதானே அதர்வா? லட்சக்கணக்குல சம்பளம் வாங்கறவர்.. அம்மாவை கூடவே கூட்டிட்டு வந்து வெச்சுக்கலாமே.. இதை ஏன் கேட்கறேன்னா கதையே அம்மா பாசத்தால, அந்த அன்புக்காகத்தான் , ஒரு தேடலுக்காகத்தான் அமலா பாலை சைக்கோத்தனமா லவ் பண்றதா வருது..

4. அமலா பால்க்கு அதர்வா மேல உண்மையான லவ் கடைசி வரை வர்லை.. அதர்வா தான் லவ்வறாரு.. இந்த மைனசை சரி பண்றதுக்காக அமலா பாலை நிச்சயம் செஞ்ச ஆள் ஒரு ஹோமோ என கடைசில லாஸ்ட் ரீல்ல காட்டி, அவனோட சகாக்கள் ஆல்ரெடி 3 கொலைகள் செஞ்சதாவும், இப்போ அமலா பாலை கொன்னுட்டா ரூட் க்ளியர் எனவும் சொல்லி ஒரு க்ளைமாக்ஸ் ஃபைட்டுக்கு ஆசைப்பட்டு கதையோட மைய கருல ஒரு மைனஸ் கொண்டாந்துட்டீங்களே.. அமலா பால்க்கு அதர்வா மேல லவ் வர , அல்லது வந்த மாதிரி காட்டி இருக்கலாமே.. ஏன்னா ஒரு லவ் ஸ்டோரி ஓட 2 பேர் அட்டாச்மெண்ட் முக்கியம். அம்லா பால் லவ் ஏதோ ஒப்புக்குச்சப்பாணி மாதிரி இருக்கு.. 

http://www.gulte.com/content/2012/02/news/Amala-Paul-Hot-Photos-from-Tamil-Movie---Pics-1156.jpg

யாரெல்லாம் இந்தப்படம் பார்க்கலாம்? காதல்ல தோல்வி அடைஞ்சவங்க,ஃபிகர் வேற எவனையோ உஷார் பண்ணுனாக்கூட தன்னைத்தான் லவ்வுதுன்னு  பேக்கு மாதிரி நினைக்கறவங்க,காதல் தெய்வீகமானதுன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கறவங்க, சைக்கோ த்ரில்லர் ஸ்டோரியை ரசிக்கறவங்க, அமலா பால் கிளாமரையாவது பார்ப்போம்னு ஏக்கப்படற என்னை மாதிரி சின்னப்பசங்க , காலேஜ் ஸ்டூடன்ஸ், லவ்வர்ஸ் இவங்க எல்லாம் பார்க்கலாம்.. ஹி ஹி 

ட்ரெய்லர்ல எதிர்பார்ப்பு ஏற்படுத்துன அளவு படம் சூப்பரும் இல்லை. மோசமும் இல்லை, ஓக்கே ரகம்.. 

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன்  மார்க் - 41

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - யூத்துங்க பார்க்கலாம் ஹி ஹி 



http://www.screen4screen.com/album%20main%20page/muk%20working%20stills/mywebalbum/iwebalbumfiles/46cb55eebaa44afe86f3b53a1bf3f0d2.jpg

Thursday, February 16, 2012

கமலின் மருதநாயகத்தில் ரஜினி?



Rajini and Kamal
மருதநாயகம் படத்தை மீண்டும் தூசி தட்டுகிறார் கமல்ஹாஸன். இந்த முறை ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. அதாவது இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தையும் அவர் களம் இறக்கப் போகிறாராம்.

1997-ம் ஆண்டு மிகுந்த பப்ளிசிட்டியுடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் மருதநாயகன். இங்கிலாந்து மகாராணியே நேரில் வந்து பூஜையில் கலந்து கொண்டார். ஆனால் படம் ட்ரெயிலரோடு நின்றுபோனது. காரணம், இந்தியா பொக்ரானில் போட்ட அணுகுண்டு. இதன் காரணமாக இந்தியா மீது பொருளாதாரத் தடை பாய்ந்தது. இதனால், கமல்ஹாசன் நம்பியிருந்த வெளிநாட்டு நிதியுதவியும் தடைபட்டுப் போனது. எந்த நிறுவனமும் கமல்ஹாசனுக்காக ரூ 50 கோடியை முதலீடு செய்ய அன்று தயாராக இல்லை. இதை அவரே பல பேட்டிகளில் கூறி வந்தார்.

சில காலத்திற்கு முன்பு மருதநாயகத்தை தயாரிக்க சன் நிறுவனத்துடன் பேச்சு நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் நடக்கவில்லை.

இந்த நிலையில் மீண்டும் மருதநாயகம் குறித்து கமல் பேச ஆரம்பித்துள்ளார். இம்முறை ஆச்சரியமூட்டும் வகையில், இப்படத்தில் தனது ஆருயில் நண்பர் ரஜினியையும் இணைத்துக் கொண்டு களம் இறங்கப் போகிறாராம். இதை கமல்ஹாஸனே மும்பை நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில், "மருதநாயகத்தில் ரஜினிக்காகவே ஒரு பாத்திரம் உள்ளது. அவருக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். நாங்கள் இருவரும் 10 படங்களுக்கு மேல் இதற்கு முன் நடித்திருக்கிறோம். ஆனால் சமீபத்தில் எந்தப் படமும் சேர்ந்து நடிக்கவில்லை. இந்தப் படத்துக்கு எங்கள் இருவரையும் தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்கவும் முடியாது. ரொம்ப நாள் பூனைக்கு மணி யார் கட்றதுன்னு (ரஜினி - கமல் சேர்ந்து நடிக்கும் படம்) யோசிச்சிக்கிட்டிருந்தாங்க... அதை நானே கட்டப்போறேன்," என்று கூறியுள்ளார்.

கமல் கூறுவதைப் பார்த்தால் அவர்தான் மருதநாயகமாக நடிப்பார் என்று தெரிகிறது. படத்தின் முக்கிய வேடத்தில் ரஜினி நடிக்கலாம் என்று தெரிகிறது.

இதை ரசிகர்கள் ஏற்பார்களா...?

துப்பாக்கியில் விஜய்யுடன் ஜெயராம்!



Vijay and Jayaram

விஜய் நடிக்கும் புதிய படமான துப்பாக்கியில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மலையாள நடிகர் ஜெயராம்.

மலையாளத்தில் முழுநேரமும், தமிழில் பகுதி நேரமாகவும் நடித்து வருபவர் ஜெயராம். கடைசியாக பொன்னர் சங்கர் படத்தில் பிரசாந்துடன் நடித்திருந்தார்.

இப்போது விஜய் நடிக்க, முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்தில் முக்கிய வேடம் ஏற்றுள்ளார்.

"இந்தப் படத்தில் எனக்கு நல்ல வேடம் கொடுத்துள்ளனர். ஆனால் பெப்சி - தயாரிப்பாளர் மோதல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்," என்றார்.

இந்தப் படத்தில் அவருக்கு வில்லன் வேடம் என்று கூறப்பட்டது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "என்னைப் பார்த்தால் யாராவது வில்லன் என்று சொல்வார்களா... ஒரு நல்ல வேடம். அவ்வளவுதான்," என்கிறார் ஜெயராம்.

Wednesday, February 15, 2012

ரஜினி மகளைக் கட்டிக்கிட்டதால என் அடையாளமே போயிடுச்சி - புலம்புகிறார் தனுஷ்



Aishwarya and Dhanush
ரஜினி மகளைக் கட்டிக் கொண்டதால், என் சொந்த அடையாளத்தை இழந்துவிட்டேன் என்று புலம்ப ஆரம்பித்துள்ளார் ரஜினியின் மருமகன் என்ற அடையாளத்தோடு பல வாய்ப்புகளைப் பெற்றுள்ள தனுஷ்.

சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு விருது விழாவில், தனது ‘கொலவெறிடி’ பாடலை நடிகர் அமிதாப் பச்சனுக்கு சமர்ப்பிப்பதாகவும் ரஜினிக்கு தன்னால் இப்படி செய்ய முடியாது என்றும் அறிவித்தார் தனுஷ். அவரது இந்தப் பேச்சு, லேசாக முணுமுணுப்பை கிளப்பியது.

நிகழ்ச்சி முடிந்த பின்னர், இந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் ரஜினி இருக்க, பிரபலமான ஒரு பாடலை அமிதாப்பச்சனுக்கு சமர்ப்பித்தது ஏன்? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தனுஷ், “குடும்பத்துக்குள் இப்படியெல்லாம் செய்துகொள்ளக் கூடாது. என் மாமனார் மீது எனக்கு மரியாதை உண்டு. அவரது தனிமையை மதிக்கிறேன்.

ஆனால் ரஜினியின் மருமகன் என்பது எனக்கு மிகப்பெரிய சுமையாகத் தெரிகிறது. 2004-ல் அவரது மகள் ஐஸ்வர்யாவை நான் திருமணம் செய்த போதே என் சுய அடையாளத்தை இழந்துவிட்டேன். அதற்கு முன் நான் சம்பாதித்த பேர் புகழ் அனைத்தையும் ரஜினி மருமகன் என்பது அடித்துச் சென்றுவிட்டது. எங்கே போனாலும் என்னை அவரது மருமகனாகத்தான் பார்க்கிறார்கள். 

எப்போது நான் பேட்டி கொடுத்தாலும், என்னிடம் கேட்கப்படும் முதல் கேள்வி, ‘ரஜினியின் மருமகன் என்பதை எப்படி உணர்கிறீர்கள்’ என்பதுதான். முன்பெல்லாம் இந்தக் கேள்வியைத்தான் எடுத்த எடுப்பில் கேட்பார்கள். கொலவெறி பாட்டுக்குப் பிறகு, இந்தக் கேள்வியை இடையில் கேட்கிறார்கள். இனி வரும் நாட்களில் இந்தக் கேள்வியே கேட்கப்படாது என நம்புகிறேன்!” என்றார் 

தனுஷின் பேச்சு மிகவும் முரண்பாடானதாகவும், ஏதோ புதிய வெறுப்பில் பேசுவதாகவும் அமைந்துள்ளதாக ரஜினியின் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

"இவ்வளவு பேசும் தனுஷ், சூப்பர் ஸ்டாரின் படிக்காதவன், பொல்லாதவன் தலைப்புகளை எதற்குப் பயன்படுத்தினார்? மாப்பிள்ளை படத்தை எந்த அடிப்படையில் ரீமேக் செய்தார்? என்னம்மா கண்ணு…, என்னோட ராசி நல்ல ராசி பாடல்களை ரீமிக்ஸ் செய்தது எதற்காக? இதையெல்லாம் அவர் ரஜினியின் மருமகனான பிறகே செய்தார். 

ரஜினியின் புகழ் தனக்கு வேண்டாம் என்று உண்மையிலேயே நினைப்பவராக இருந்தால், அவர் இதையெல்லாம் செய்திருக்க வேண்டாமே...

உண்மையில் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்யும் போது தனுஷ் ஒரு ஜீரோ. அவரது எந்தப் படமும் ஓடவில்லை. புதுக்கோட்டையிலிந்து சரவணன், சுள்ளான் என எல்லாம் குப்பைப் படங்கள். மேலும் கால்ஷீட் சொதப்பல் காரணமாக வரிசையாக வழக்குகளைச் சந்தித்து வந்த நேரம் அது. 

ரஜினி மருமகன் என்ற அந்தஸ்தை வைத்துதான் இவர் பல சிக்கல்களிலிருந்து வெளியில் வந்தார்," என்கிறார் ஒரு ரசிகர். 

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு முக்கிய இயக்குநர் இதுபற்றி கூறுகையில், "ரஜினி ஒரு மாபெரும் சூப்பர் ஸ்டார். அவருக்கு முன் தனுஷ் ஒரு சுள்ளான் என்று கூட சொல்ல முடியாது. சினிமாவில் தான் சொந்த அடையாளத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காக ரஜினி பெயரையே யாரும் சொல்லக் கூடாது என்று சொன்னாலும் சொல்வார் போலிருக்கிறது தனுஷ்... கொலைவெறிடி என்ற பாட்டுக்காக இவரை பாலிவுட் கூப்பிடவில்லை. ரஜினி மருமகன் என்ற கூடுதல் தகுதி காரணமாகத்தான்," என்றார் கொதிப்புடன். 

விடுங்க பாஸ்... இந்த தனுஷ் எப்பவுமே இப்படித்தான்!

2வது மனைவியாகவும் அனன்யா ரெடி?



Ananya and Anjaneyan

தனக்கு நிச்சயிக்கப்பட்ட ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்தும் அவருக்கு 2வது மனைவியாக அனன்யா தயாராக இருப்பதாகவும், ஆனால் அவரது பெற்றோர் எதிர்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை அன்னயாவுக்கும், கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயனுக்கும் கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு ஆஞ்சநேயனுக்கு கடந்த 2008ம் ஆண்டே வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அன்னயாவின் தந்தை பெரும்பாவூர் போலீசில் புகார் கொடுத்தார். இந்நிலையில் ஆஞ்சநேயனின் 2வது மனைவியாக அனன்யா தயாராக இருப்பதாகக் கூறப்படுகின்றது.

மேலும் ஆஞ்சநேயன் தனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது என்றும், முதல் மனைவியை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அனன்யாவிடம் முன்பே கூறிவிட்டாராம். ஆனால் அனன்யா தனது பெற்றோரிடம் இந்த விவரத்தைத் தெரிவிக்காமல் மறைத்துவிட்டாராம்.

2வது மனைவியாக அவர் தயாராக இருந்தாலும் அவரது பெற்றோர்கள் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும், இதனால் அவரை வீட்டில் பூட்டி வைத்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Tuesday, February 14, 2012

முதல் திருமணத்தை மறைத்து அனன்யாவை ஏமாற்றிய ஆஞ்சநேயன்







Ananya and Anjaneyan

நடிகை அனன்யாவுக்கு நிச்சயம் செய்துள்ள மாப்பிள்ளை ஆஞ்சநேயன் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதையடு்தது அனன்யாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். கேரளத் திரையுலகில் இந்த திடீர் திருப்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடோடிகள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை அனன்யாவுக்கும், கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயனுக்கும் கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடந்தது.

ஆனால் இந்த திருமணம் தற்போது பெரும் பிரளயத்தை சந்தித்துள்ளது. ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவராம். தனது முதல் திருமணத்தை மறைத்து விட்டார். இதையடுத்து அனன்யாவின் குடும்பம் பேரதிர்ச்சி அடைந்துள்ளது.

இதையடுத்து தனது மகளை ஏமாற்றிய ஆஞ்சநேயன் மீது அனன்யாவின் தந்தை பெரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

எனது மகள் அனன்யாவுக்கும், ஆஞ்சநேயனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆனால் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற விவரம் இப்போது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. முதல் திருமணத்தை எங்களிடம் மறைத்து மோசடியாக அனன்யாவை 2வது திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் ஆஞ்சநேயன் வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரித்தபோது தனக்கு ஏற்கனவே திருமணமானதை அவர் ஒப்புக் கொண்டார். மேலும் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

திருமணம் செய்து கொண்டால் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத் தான் மணப்பேன் என்றிருந்த அனன்யா மனமுடைந்து நொறுங்கிப் போயுள்ளாராம்.

வாழ்க்கையில் ஒரு பெரிய வட்டமடித்து, மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்துவிட்டார் நயன்தாரா!



Simbu and Nayanthara
நயனின் முன்னாள் காதலன் சிம்பு, தனது புதிய படத்தில் ஜோடியாக நடிக்க அவருடன் பேச்சு நடத்தி வருகிறார் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே நயன்தாராவை தனது ஒஸ்தி படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தார் சிம்பு. அப்போது நடிக்க மறுத்துவிட்டார் நயன். ஆனால் இப்போது, பிரபு தேவாவை விட்டு முற்றாக விலகிவிட்ட நிலையில், அனைத்து வித வாய்ப்புகளையும் பரிசீலிக்க ஆரம்பித்துவிட்டார்.

இப்போது அஜீத்தின் அடுத்த படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிவிட்ட நயன், அடுத்து சிம்புவின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் ஒரு முக்கிய இயக்குநர்.

நயன்-சிம்பு மீண்டும் ஜோடி என்ற செய்தியால் கிளம்பவிருக்கும் பரபரப்பு நல்ல வசூலைக் கொட்டும் என நம்புகிறார்களாம்!

பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கிவிட்ட நீதானே எந்தன் பொன்வசந்தம் ட்ரெயிலர்!



Neethane En Ponvasantham Movie
இணையத்தைக் கலக்க ஆரம்பித்துவிட்டது இளையராஜா - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் நீதானே என் பொன் வசந்தம் படத்தின் தமிழ் - தெலுங்கு ட்ரெயிலர்கள்.

தமிழில் ஜீவா - சமந்தா, தெலுங்கில் நானி - சமந்தா நடிக்கும் இந்தப் படம், இந்தியிலும் உருவாக்கப்படுகிறது. மூன்று மொழிகளிலுமே இளையராஜா இசையமைக்கிறார்.

படத்தின் முதல் ட்ரெயிலர் தமிழ் - தெலுங்கில் வெளியாகியுள்ளது. இந்தியில் இன்னும் வரவில்லை.

தமிழில் நீதானே என் பொன்வசந்தம் பாடலின் ஆரம்ப வரிகள் பேஸ் கிடாரில் இசையாய் வழிய, மனசு கிறங்கிப் போகிரது. தெலுங்கு ட்ரெய்லரில் கண்மணி அன்போடு பாடலின் இசையைப் போட்டிருக்கிறார்கள்.

காட்சியமைப்பும், அந்த இசையும் நம்மை வேறு உலகத்துக்கு இட்டுச் செல்கின்றன. இந்த ஆண்டின் மனதை வருடும் இசையாக, காதலைக்கொண்டாடும் படமாக நீதானே என் பொன்வசந்தம் அமையும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது!

Wednesday, February 8, 2012

ஷாருக்குடன் நெருக்கம்: பிரியங்காவை ஒதுக்கும் பாலிவுட்?




ஷாருக்கானுடன் 'ஓவர்' நெருக்கமாக இருப்பதால் இயக்குனர் கரண் ஜோஹார் தனது படத்தில் பிரியங்காவைப் போடுவதில்லை என்று முடிவு செய்துள்ளாராம்.

நடிகை பிரியங்கா சோப்ராவும் ஷாஹித் கபூரும் அவ்வப்போது சேர்வதும் பிரிவதுமாக இருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. அண்மையில் மீண்டும் பிரிந்தபோது பிரியங்கா ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவாக உள்ள ஷாருக்கானைப் பிடித்துக் கொண்டார். ஷாருக் பிரியங்காவுடன் தான் அதிக நேரம் செலவிடுகிறார் என்றும் கூறப்படுகின்றது.

வீட்டில் மனைவி கௌரி கேட்டால் ஷூட்டிங் போனேன், அங்கே போனேன், இங்கே போனேன் என்று டபாய்க்கிறாராம். இதனால் கௌரி பிரியங்கா மீது காட்டமாக உள்ளார். இந்நிலையில் ஷாருக்குடன் ஒட்டி உறவாடும் பிரியங்காவை பாலிவுட் நடிகர்களின் மனைவிமார்கள் ஒதுக்கி வைக்க ஆரம்பித்துள்ளனர். ஹிரித்திக் ரோஷனின் மனைவி ஏற்கனவே பிரியங்காவை விட்டு விலகி விட்டார். அதேபோல மேலும் பலரும் விலகி வருகின்றனர். அவர்கள் கௌரிக்கு ஆதரவு தெரிவித்து அவ்வாறு செய்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.

ரித்திக் ரோஷன் மனைவி எப்படி பிரியங்காவை ஒதுக்கியுள்ளாரோ அதே போன்று கௌரிக்கும், ஷாருக்கானுக்கும் நல்ல நண்பரான இயக்குனர் கரண் ஜோஹாரும் சோப்ராவை தனது படங்களில் நடிக்க வைப்பதில்லை என்று தீர்மானித்துள்ளாராம்.

இதற்கிடையே கரண் ஜோஹாரின் புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாக பிரியங்கா விளம்பரப்படுத்தி வருகிறார் என்று ஒரு முன்னணி நாளிதழ் செய்தி வெளியிட்டது. அதை கரண் மறுத்துள்ளார்.

கௌரி கோபித்தால் எனக்கென்ன என்று இருந்த பிரியங்கா, பாலிவுட்டே ஒட்டுமொத்தமாக கோபித்துக் கொள்ளும் என்பதை எதிர்பார்க்கவில்லை போலும்...!

வயசான ஹீரோன்னாலும் ஓகேதான்! - த்ரிஷா




Trisha
வயசான ஹீரோவாக இருந்தாலும் பரவாயில்லை... நான் நடிக்க ரெடி என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார் த்ரிஷா.

ஒரு காலத்தில் இளம் ஹீரோக்களுடன் மட்டும்தான் ஜோடியாக நடிப்பேன், ரஜினி - கமல் மட்டும் விதிவிலக்கு என்று கூறிவந்தார் த்ரிஷா.

இதனால் த்ரிஷாவுடன் ஜோடி சேர ஆசைப்பட்ட விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ் (அவங்களுக்கும் ஆசை இருக்காதா பின்னே) போன்றவர்கள், தங்களுக்கேற்ற இளம் நாயகிகளை தேட வேண்டி வந்தது. விஜயகாந்த் புதிது புதிதாக நாயகிகளை கொண்டுவந்தார்.

இப்போது த்ரிஷாவுக்கும வயசாகிவிட்டது!! விளைவு... தன் பாலிசியைத் தளர்த்திக் கொண்டுள்ளார்.

"எந்த வயசா இருந்தாலும் பரவால்ல... கதையும் என் கேரக்டரும் நல்லாருந்தா, ஜோடியாக நடிக்க நான் ரெடி. என்னை விட வயது குறைவான ஹீரோ, வயசான ஹீரோ என எந்த பேதமும் இல்லை," என்று கூறியுள்ளார்.

கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?




Kamal and Jackie Chan
ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் உலக நாயகன் கமல் ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகின்றது.

ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் பெயரைச் சொன்னாலே குட்டீஸ் எல்லாம் ஆ, ஊ என்று ஆரம்பித்துவிடுவார்கள். அவர் தனது நடிப்பால் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் இதுவரை ஹாலிவுட் மற்றும் சீன படங்களில் நடித்த ஜாக்கி சான் முதன்முறையாக கோலிவுட்டில் நடிக்கிறார். கமல் தலைவன் இருக்கின்றான் என்ற படத்தை இயக்குகிறார் அல்லவா. அதில் நடிக்குமாறு கமல் ஜாக்கியை அணுகியுள்ளார். அவர் ஒப்புக் கொண்டாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. மேலும் அவருக்கு என்ன மாதிரி கதாபாத்திரம் என்ற தகவலையும் கமல் கசிய விடவில்லை.

தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ஜாக்கி சான் வந்தார் என்பது நினைவிருக்கலாம். அந்த விழாவில் அவர் கமல் ஹாசனின் நடிப்பை மனதாரப் பாராட்டினார்.

ஊழலை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.

எனக்கு நேரஞ் செரியில்ல...! - வடிவேலு




Vadivelu
எல்லோருக்குமே நேரம் சரியாக அமைய வேண்டும். இப்போதைக்கு எனக்கு நேரஞ் செரியில்ல... அரசியல் பத்தி எதுவும் பேதீங்க!, என்று கேட்டுக் கொண்டார் நடிகர் வடிவேலு.

விஜயகாந்தும், வடிவேலுவும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் மிகக் கடுமையாக மோதிக்கொண்டனர். இதையடுத்து விஜயகாந்த் கட்சியை எதிர்க்க வடிவேலு தி.மு.க. அணியில் சேர்ந்து பிரசாரம் செய்தார். தேர்தலில் தி.மு.க. தோற்றதால் வடிவேலு நிலைமை மோசமானது. எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.

சிலர் அவரை வைத்து படம் எடுக்க வேண்டாம் என தங்களுக்கு மிரட்டல் வருவதாக சிலர் கூறினர். ஆனால் வடிவேலுவோ நான்தான் ஒதுங்கியிருக்கிறேன், என்றார்.

சமீபத்தில் அ.தி.மு.க. வுக்கும், விஜயகாந்துக்கும் தகராறு ஏற்பட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க.வுடன் சமரசம் ஆகி மீண்டும் சினிமாவில் நடிக்க தீவிரமாக வடிவேலு முயற்சிப்பதாக செய்திகள் வெளியாயின. அ.தி.மு.க.வில் இணையப்போவதாகவும் கிசுகிசுக்கள் வருகின்றன.

இதுகுறித்து வடிவேலு கூறுகையில், "என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்ல. அவரை கவனித்துக் கொள்வதுதான் இப்போது எனக்கு முக்கியம். விரைவில் குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

நான் முதலில் ஒரு நடிகன். மக்களை சந்தோஷப்படுத்துவதை தொடர்ந்து செய்வேன். இந்தநேரத்தில் அரசியலில் என்னை சம்பந்தப்படுத்தி பேசுவதை நான் விரும்பவில்லை. அரசியலோடு என்னை இணைத்து வெளியாகும் செய்திகளைப் பார்த்தா, கற்பனைக்கு அளவே இல்லைன்னுதான் தோணுது.

பொதுவாக எல்லாத்துக்கும் நேரம் முக்கியம். சிலருக்கு அந்த நேரம் சாதகமாக இருக்கும். இன்னும் சிலருக்கு எதிராக இருக்கும். எனக்கு நேரஞ் செரியில்ல. ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. என்னுடைய கவனமெல்லாம் சினிமாவில் நடிப்பதுதான். அதில்தான் முழு கவனத்தையும் செலுத்துகிறேன்.

நான் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த படம் திரையுலகில் எனது மறுபிரவேசத்தை அழுத்தமாக பதிவு செய்யும். வேறு ஒண்ணும் இப்போதைக்கு சொல்வதற்கில்லை," என்றார்.

ஏ எம் ரத்னம் தயாரிப்பில் அஜீத் - நயன் - ஆர்யா!




Ajith and Nayantara
சொன்ன தேதிக்குள் படத்தை முடிக்கும் இயக்குநர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன், அடுத்து அஜீத்தின் படத்தை இயக்குகிறார். பில்லா 2-க்குப் பிறகு அஜீத் நடிக்கும் படம் இது.

இசை: யுவன் சங்கர் ராஜா. விஷ்ணுவர்தனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா தாண்டவம் படத்தில் பிஸியாக இருப்பதால், வேறு ஒருவரை வைத்து படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். அநேகமாக வினோத் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யலாம்.

இந்தப் படம் மூலம் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் தனது அடுத்த சுற்றைத் தொடங்குகிறார். தமிழில் கலைப்புலி தாணுவுக்கு அடுத்த பிரமாண்ட தயாரிப்பாளர் என்ற பெயர் ரத்னத்துக்கு உண்டு. ஒரே நேரத்தில் 5 பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தவர் ரத்னம். ஆனால் அவரது சரிவு, பாய்ஸ் படத்தில் ஆரம்பித்தது. அதன் பிறகு கில்லி, 7 ஜி ரெயின்போ காலனி என குறிப்பிடத்தக்க வெற்றிகள் வந்தாலும், எனக்கு 20 உனக்கு 18, தர்மபுரி, கேடி என அடுத்தடுத்த தோல்விகள் அவரை படத்தயாரிப்புக்கு தற்காலிக இடைவெளி விட வைத்தன.

இந்தப் 75 நாட்களுக்குள் படத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ள விஷ்ணுவர்தன், வரும் தீபாவளி 2012-ல் வெளியிட்டுவிடலாம் என ரத்னத்துக்கு உறுதி அளித்துள்ளாராம்.

முக்கியமான சமாச்சாரம்... இந்தப் படத்தில் அஜீத்துக்கு ஜோடி நயன்தாரா. பாஸ் என்கிற பாஸ்கரனுக்குப் பிறகு தமிழில் அவர் நடிக்கும் படம். பிரபு தேவாவைப் பிரிந்த செய்தியை சொல்லாமல் சொல்ல ஒப்புக் கொண்ட தமிழ்ப் படமும் கூட!

இன்னொரு முக்கிய விஷயம்... படத்தில் அஜீத்துடன் இணைந்து நடிக்கிறார், ஆர்யா!

ஒரு கல் ஒரு கண்ணாடி


ஓகே ஓகேவில் சினேகா, ஆர்யா, ஆன்ட்ரியா!


Sneha and Andrea
உதயநிதி ஸ்டாலினின் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது.

படத்தின் ஹீரோ உதயநிதி என்றாலும், சந்தானத்துக்குதான் பெரிய வாய்ப்பு.

இயக்குநர் ராஜேஷின் சென்டிமெண்ட்டுக்காக இந்தப் படத்தில் எக்கச்சக்க நட்சத்திரங்கள். சினேகா, ஆர்யா, ஆன்ட்ரியா ஆகியோர் கெஸ்ட் ரோலில் வருகிறார்களாம் படத்தில். ஹன்ஸிகா மோத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. வரும் 22-ம் தேதியிலிருந்து படத்துக்கான விளம்பரத்தை ஆரம்பிக்கவிருக்கிறார்கள்.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் மாதிரி ஒரு காமெடி விருந்தாக ஓகேஓகே அமையும் என்கிறார் இயக்குநர் ராஜேஷ்.