Thursday, February 28, 2013

குஷ்பு விவகாரம்… எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை: அஜீத் கோபம்


 Don T Link With Kushboo Issue Please Says Ajith

சென்னை: குஷ்பு வீட்டில் கல்லெறிந்த விஷயத்தை பற்றி குஷ்புவிடமே போன் செய்து அஜீத் விசாரித்ததாக ஒரு தகவலை வெளியிட்டிருந்தது அஜீத்பேன்ஸ்.காம். இது எல்லா இணையதளங்களிலும் இறக்கை கட்டி பறந்தது. இதற்கு இதற்கு அஜீத் ரியாக்சன் செய்தாரோ இல்லையோ குஷ்புவின் ரியாக்சன் சூடாக இருந்தது. பேனா இருக்குன்னு என்ன வேணும்னாலும் எழுதறதா? ஒரு எல்லை தாண்டி இப்படி எழுதினா என்னால பொறுத்துகிட்டு இருக்க முடியாது என்று சில தினங்களுக்கு முன்பு டுவிட்டரில் பொங்கியிருந்தார் குஷ்பு.

 இது குறித்து அஜீத் என்ன சொல்கிறார்? என்று வலை படப்பிடிப்பில் இருந்தவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டனர் சில மீடியா நண்பர்கள், அதற்கு அஜீத் 'நான் என்னோட ரசிகர் மன்றத்தையே கலைச்சுட்டேன். என் பேர்ல வர்ற இணைய தளத்தில் வர்ற செய்திக்கும் எனக்கும் மட்டும் எப்படி சம்பந்தம் இருக்கும்? ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க' என்று கூறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் அஜீத்.

Read more at: http://tamil.oneindia.in/movies/heroes/2013/03/don-t-link-with-kushboo-issue-please-says-ajith-170635.html

Tuesday, February 26, 2013

பவர் ஸ்டார் முத்தம் கொடுத்ததால் கோபித்துக் கொண்ட நடிகை!


Actress Irked Over Powerstar Srinivasan Sudden Kiss

அழகன் அழகி படத்தின் ஷூட்டிங்கின்போது பவர் முத்தம் கொடுத்ததால் உடன் நடித்த நடிகை கோபித்துக் கொண்டு, இனி இப்படியெல்லாம் முயற்சி பண்ணாதீங்க என்று எச்சரித்தாராம். நந்தா பெரியசாமி இயக்கத்தில், ஸ்ரீஅண்ணாமலையார் எஸ் குருராஜன் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜோ நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆருசி நடிக்கிறார். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு பாடலுக்கு ஏகப்பட்ட அழகிகளுடன் நடனமாடுகிறார். 

நேற்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகில் உள்ள பின்னி மில்லில் நடந்த படப்பிடிப்பில் பவர் ஸ்டார் சீனிவாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. அது ஒரு மெலடியான ஆங்கிலப் பாடல். அந்தப் பாடலுக்கு ஏக மேக்கப்புடன் ஏராளமான அழகிகளுடன் இரவுப் பின்னணியில் ஆடிக் கொண்டிருந்தார் சீனிவாசன். ஒரு கட்டத்தில் நடனமாடிக் கொண்டிருந்த சீனிவாசன், கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு, உடன் ஆடிய அழகி ஒருவருக்கு முத்தம் கொடுத்துவிட்டார். பல் பட்டுவிட்டதோ என்னமோ.. அந்த நடிகை ஏக கோபத்துடன் சத்தமில்லாமல் திட்டிக் கொண்டே, இன்னொரு முறை இப்படியெல்லாம் முயற்சி பண்ணாதீங்க என்று எச்சரித்தார். ஆனால் பவரோ இதற்கெல்லாம் அசருவதாக இல்லை. சிரித்துக் கொண்டே, அதே பெண்ணின் மீது கைபோட்டபடி புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தார். முதலில் உர்ரென்றிருந்த அந்தப் பெண், பின்னர் சகஜமாகி சீனிவாசன் கையைப் பிடித்துக் கொண்டு சிரித்தபடி போஸ் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்!

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/02/actress-irked-over-powerstar-srinivasan-sudden-kiss-170490.html

ரஜினி படம்... ஒப்புக் கொண்ட ஈராஸ்... மறுக்கும் கேவி ஆனந்த்!

சென்னை: கேவி ஆனந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்நடிக்கும் புதிய படத்தை தாங்கள்தான் தயாரிக்கவிருப்பதாக ஈராஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இது வதந்தி என கேவி ஆனந்த் மறுத்துள்ளார். ஈராஸ் இன்டர்நேஷனலுக்காக ஏற்கெனவே கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ராணா படம் தொடங்கப்பட்டது. ரஜினியின் உடல்நிலை காரணமாக படம் தள்ளி வைக்கப்பட்டது. ரஜினி உடல்நிலை குணமடைந்து வந்த பிறகு கோச்சடையான் தொடங்கப்பட்டது.

 வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் இந்தப் படம் கோடை ஸ்பெஷலாக வரவிருக்கிறது. இந்த நிலையில், கோச்சடையானுக்குப் பிறகு ரஜினி நடிக்கவிருக்கும் படம் குறித்து ஏராளமான செய்திகள் வந்தன. இந்தப் படத்தை கே வி ஆனந்த் இயக்குகிறார், ஏஜிஎஸ் தயாரிக்கிறது.. அட்வான்ஸ் கூட கொடுத்துவிட்டார்கள் என்று செய்திகள் வந்தன. ஆனால் இப்போது அந்தப் படத்தையும் ஈராஸ்தான் தயாரிக்கிறது என்ற தகவலை அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலர் கமல் ஜெயின் தெரிவித்துள்ளார். இந்தப் படம் குறித்து எகனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், "ரஜினிகாந்தை வைத்து மூன்று படங்கள் தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ளோம். அதில் ராணாவும் கோச்சடையானும் தயாரிப்பில் உள்ளன. அடுத்த படத்தை கேவி ஆனந்த் இயக்குகிறார். பெயர், நடிகர்கள் எதுவும் இன்னும் முடிவு செய்யவில்லை. இது ரஜினியின் படம். எனவே ரூ 100 கோடிக்கு மேல் பட்ஜெட் இருக்கும்," என்று கூறியுள்ளார். கேவி ஆனந்த் ரஜினியுடன் சிவாஜியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். 'மாற்றானுக்குப் பிறகு ரஜினிக்காக கதை உருவாக்கும் பணியில் தீவிரமாக உள்ளார் கேவி ஆனந்த். கோச்சடையான் வெளியாகும் முன்பே இந்த புதிய பட அறிவிப்பு வரக்கூடும்,' என்கிறார்கள். மறுக்கும் கேவி ஆனந்த் ஆனால் இந்த செய்தி குறித்து ட்விட்டரில், மறுப்பு தெரிவித்துள்ளார் கேவி ஆனந்த். "என்னுடைய ‘மாற்றான்' போய் கையெழுத்திட்டிருந்தால்தான் இது சாத்தியம். இப்போது கதையை உருவாக்குவதில்தான் தீவிரமாக உள்ளேன். மற்றபடி இப்போதைக்கு எல்லாமே வதந்திதான்," என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/02/eros-produce-rajinikanth-s-next-movie-170440.html

Friday, February 1, 2013

கடல் உள்வாங்கிருச்சாமே!!


 Viewers Comments On Kadal Movie

மணிரத்னத்தின் கடல் படத்தைப் பார்த்த பலரும் அடித்துள்ள கமெண்ட் இதுதான். ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களின் கிண்டலுக்குள்ளான, எதிர்ப்பார்ப்பைக் கிளறாத படமாகத்தான் கடல் பார்க்கப்பட்டது. இன்று படம் வெளியான சில மணி நேரங்களில் இந்தப் படத்தின் ரிசல்ட் வந்துவிட்டது. சிலர் இந்தப் படத்தைப் பார்க்கலாம் என்று கூறியுள்ளனர்.


 ஆனால் பெரும்பாலானோர் படத்துக்கு எதிர்மறையான கமெண்டுகளைக் கூறியுள்ளனர். க'டல்' என ரொம்ப சிக்கனமாக விமர்சனம் எழுதிவிட்டவர்களும் உண்டு! படத்தில் அர்ஜுன் மற்றும் அரவிந்தசாமிக்குதான் முக்கிய வேடம் என்றும், ஹீரோ - ஹீரோயின் எனப்பட்ட கார்த்திக் மகன் கவுதம், ராதா மகள் துளசி சும்மா ஊறுகாய் மாதிரிதான் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். விஸ்வரூபத்துக்கு ஒதுக்கப்பட்ட அரங்குகள்தான் இந்தப் படத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் ரசிகர்களுக்கு கிடைத்த ஒரே ஆறுதல், ரஹ்மானின் பாடல்களை ரசித்துக் கேட்டதுதான் என்றனர்.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/02/viewers-comments-on-kadal-movie-169005.html