Tuesday, July 8, 2014

எண்ணி ஆறே நாளில் தாலியை கழற்றி எறிந்த விஜய் டிவி திவ்யதர்ஷினி

விஜய் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி என்னும் திவ்யதர்ஷினிக்கும் அவருடைய ஆருயிர் தோழர் ஸ்ரீகாந்திற்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறி, திருமணம் செய்துகொண்டுள்ளனர். கல்யாணம் முடிந்து ஆறு நாட்களிலேயே தாலியை கழற்றி எறிந்துள்ளார் திவ்யதர்ஷினி. டிடி எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் துருதுருவென இருப்பார். கல்யாணத்திற்கு பின் நடந்த விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் வழக்கத்தை விட துருதுருவென காணப்பட்டார். அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்ற அறிகுறியை கொஞ்சம் கூட அவரிடம் காணமுடியவில்லை.
திருமணத்திற்கு முன்புவரை டிடிக்கு தனி மரியாதை, தனி மதிப்பு, தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. திருமணத்திற்கு பின் டிடியின் செயல்கள் குடுபத்தினருக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும் வெறுப்பினை ஏற்படுத்தியுள்ளது. என்ன தான் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தாலும் கல்யாணமான ஆறே நாளில் தாலியை கழற்றிவிட்டு வேற்று நபர்களுடன் கூத்தடிப்பதை ஏற்றுகொள்ளமுடியாது என சில தமிழ்அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உண்மையான தமிழச்சி ஒரு போதும் இது போன்ற காரியங்களை செய்ய துணியமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
தன்னுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கூட டிடியின் கழுத்தில் தாலியை காணவில்லை. அந்த நிகழ்ச்சியில் மாப்பிளையை தவிர மற்ற அனைவரையும் கட்டி அணைத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். டிடியின் இந்த செயல்களை பார்க்கும் போது மாப்பிள்ளை பலியாடாய் சிக்கியிருப்பது தெளிவாக தெரிகின்றது.

Monday, July 7, 2014

மேடையிலேயே விஜய்டிவி முகத்தை கிழித்தெரிந்த இயக்குனர் ராம்..

விஜய் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தங்கமீன்கள் படத்திற்கு சிறந்த படம் என்ற விருது வழங்கப்பட்டது. எல்லோரும் விருது கிடைத்ததும் விருது கொடுத்தவர்களை ஆஹா..! ஓகோ..! என புகழ்ந்து தள்ளுவார்கள். ஆனால் இயக்குனர் ராம் விருதை வாங்கிக்கொண்டு நெஞ்சை உருக்கும் கருத்துகளை தெரிவித்துள்ளார்.
தங்க மீன்கள் படத்தில் ராமுக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் சாதனா கடந்த ஒரு வாரமாக நான் சென்னை வரட்டுமா? எனக்கு விருது தராங்களா என ராமுக்கு அடிக்கடி போன் செய்துள்ளார். உனக்கு எந்த விருதும் தரவில்லை, தங்கமீன்கள் படத்திற்கு மட்டுமே விருது தராங்க எனக்கூறியுள்ளார். அதற்கு சாதனா எனக்கு நேஷனல் அவார்ட் குடுத்துருக்காங்க… விஜய் அவார்ட்ஸ் தரமாட்டாங்களா… தெய்வத்திருமகள் படத்தில் நடித்த சாராவுக்கு விஜய் அவார்ட்ஸ் குடுத்தாங்களே, அந்த மாதிரி எனக்கும் தர மாட்டாங்களா என ராம்மிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு சிந்திக்க வைத்துள்ளது அந்த குழந்தை. இதை அப்படியே மேடையில் சொல்லி விஜய் டிவியின் முகத்திரையை கிழித்துள்ளார் ராம்.
மேலும் தங்கமீன்கள் படத்திற்கு உயிர்கொடுத்ததே ‘ஆனந்த யாழில்’ என்ற பாடல் தான். ஆனால் அந்த படல் நாமினி லிஸ்டில் கூட சேர்க்கவில்லை அவ்வளவு தரம் கெட்ட பாடலா அது என கேள்வியை எழுப்பிவுடன் ஒரு நிமிடம் அரங்கமே ஆடிப்போய்விட்டது. மேலும் அந்த பாடலை ஒருமுறை ஒலிபரப்புங்கள் நான் கேட்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். உடனே கோபிநாத், “சார் அந்த பாடல் இல்லையென்று நினைக்கின்றேன்” என மழுப்பலான பதிலை தெரிவித்தார். ஆனால் ராம் “அந்த படலை பாடத்தெரிந்தவர்கள் யாராவது இந்த விழாவில் உள்ளீர்களா?” எனக் கேள்வியை எழுப்பினார். எப்படியாவது ராம்-யை மேடையைவிட்டு இறக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கோபிநாத் அந்த பாடல் வேறு ஒரு லிஸ்ட்டில் நாமினியாகி உள்ளது எனக்கூறினார். எனக்கு தெரியும் அந்த பாடல் எந்த லிஸ்டிலும் இல்லையென்று என ராம் தெரிவித்தார். வேறுவழியில்லாமல் கூட்டத்தில் இருந்த ஒருவர் அந்த பாடலை பாடிக்காட்டினார். அவர் பாடிமுடித்ததும் தங்கமீன்கள் படத்திற்கு உயிர்தந்த என் தோழன் யுவன்சங்கருக்கு இந்த விருதை சமர்பிக்கின்றேன் எனக்கூறி யுவனை மேடைக்கு அழைத்து அவரை கவுரவித்தார்.
ராம்மின் இந்த தைரியமிக்க செயலால் வெட்கிதலைகுனிந்தனர் விஜய்டிவியினரும் விருதுகொடுத்த குழுவினரும். டிஆர்பி ரேட்டிங் வேண்டும் என்பதற்காக பெரிய நடிகர்களுக்கு விருதுகளை வழங்கி பணம் சம்பாதிக்க நினைக்கும் தொலைக்காட்சிகளுக்கு சாதனாவின் கேள்விகள் சாட்டையடி.